தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகையே அச்சுறுத்தும் வைரசாக கோவிட் 19 உருவெடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இதன் வீரியம் குறையாமல் பல வைரஸ் ரூபங்களில் வந்து மக்களை மரண படுக்கையில் வைத்திருக்கிறது.
தற்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா 3வது அலை உருவாகியுள்ளது.
ஏழை பணக்காரன் யாராக இருந்தாலும் இந்த தொற்றுக்கு விதிவிலக்கல்ல
அரசியல் பிரபலங்களும் நடிகர், நடிகைகளும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவதை நாம் தினம் தினம் செய்தியாக பார்க்கிறோம்.
இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தன் சமூகவலைதள பக்கத்தில் ‛‛‛‛கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
விரக்தியின் உச்சத்தில் விஜய் ஆண்டனி பதிவிட்ட இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.
Vijay Antonys recent tweet about Corona made controversy