தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்த விஜய் ஆண்டனி தற்போது ஹீரோவாகவும் ஜெயித்து விட்டார்.
நான், சலீம், பிச்சைக்காரன், எமன், அண்ணாதுரை, ‘காளி’ திமிரு பிடிச்சவன் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தென்னிந்திய திரையுலகத்தையும் பெரிதாக பாதித்திருக்கும் இந்த நேரத்தில், நடிகர் விஜய் ஆண்டனி, தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஒத்துக் கொண்ட சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் குறைத்திருக்கிறார் (ஒரு கோடி ரூபாய் அளவில்).
இதன் மூலம், தான் தற்போது நடித்து வரும் 3 படங்களின் தயாரிப்பாளர்களும் பயன் அடைவார்கள் என கூறப்படுகிறது.
விஜய் ஆண்டனியின் இந்த தாராள மனதை “அக்னி சிறகுகள்” தயாரிப்பாளர் T. சிவா மனமுவந்து பாராட்டி கூறுகையில்,
கொரோனா ஊரடங்கு தமிழ் சினிமாவை மொத்தமாக புரட்டி போட்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.
புது படங்கள் திரையரங்குகளில் வெளியிட மேலும் மூன்று மாதங்கள் ஆகும் என்ற சூழ்நிலையில், தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் தெரிவித்து விட்டார்.
இந்த சம்பளக் குறைப்பு மூலம், மூன்று தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் மொத்த பட்ஜெட்டை குறைத்து, வெகு விரைவில் அவர்களின் படங்களை எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வெளியிட முடியும் என்று விஜய் ஆண்டனி நம்புகிறார் என அவர் கூறியுள்ளார்.
இவரைப் போல அதிக சம்பளம் வாங்கும் ரஜினி, விஜய் அஜித் சூர்யா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் செய்வார்களா? என தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ம்…ம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..
Vijay Antony slashes his salary to support Film Producers