ஒரே நேரத்தில் விஜய்-சூர்யாவுடன் டூயட் பாடும் ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரித்திசிங் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம்.

இந்நிலையில் மெர்சல் படத்தை அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்திலும் ராகுல் பிரித்தி சிங்கே நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு படங்களின் சூட்டிங்கும் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.

Vijay and Suriya going to romance with Rakul Preet singh

பெஃப்சி ஸ்டிரைக் வாபஸ்; நாளை முதல் ரஜினி-விஜய் பட சூட்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெஃப்சி மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே சம்பள பிரச்சினை எழுந்ததையடுத்து, திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது.

இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்தனர்.

மேலும் ரஜினியின் ‘காலா’, விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட 37 படங்களின் சூட்டிங் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை பெப்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:

கடந்த 3 நாட்களாக பல்வேறு திரைப்படங்கள் பாதிக்கப்பட்டன.

ரஜினி சார் மற்றும் கமல் சார் போன்ற மூத்த கலைஞர்களும் எங்களுடைய முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டனர்.

எனவே இது சம்பந்தமாக தொழிலாளர் ஆணையரை நேரடியாக சந்தித்து ஓர் நல்ல முடிவு காண வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறோம் என அரசாங்கம் உறுதிமொழி அளித்துள்ளார்கள்.

மேலும் பல அமைப்புகளும், பல்வேறு துறையினரும் வேண்டுகோள் வைத்த அடிப்படையில் நாளை முதல் பணிக்குச் செல்வது என முடிவெடுத்திருக்கிறோம்.

முதலில் தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டேன் என்று தெரிவித்தார்கள். நாளை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதால் மட்டுமே பணிக்கு திரும்ப முடிவு செய்துள்ளோம்.

நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் எந்தவித நிபந்தனையும் வைக்க விரும்பவில்லை.

எங்களை பிளவுப்படுத்தாதீர்கள் என்று மட்டுமே கேட்டுக் கொள்கிறோம்.” இவ்வாறு ஆர்.கே.செல்வமணி பேசினார்.

இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், இனி தன் படங்களில் பெப்சி தொழிலாளர்களும் அந்த அமைப்பை சாராத தொழிலாளர்களும் பங்கேற்பார்கள்.” என்றார்.

எனவே நாளை முதல் நிறுத்திக் வைக்கப்பட்ட காலா, மெர்சல் பட படப்பிடிப்புகள் நடைபெறும் எனத் தெரிகிறது.

FEFSI President RK Selvamani announced strike has been cancelled

நான் பலசாலியானவள்; வைரலாகும் த்ரிஷாவின் பாக்ஸிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

13 வருடங்களை கடந்து இன்றும் தென்னிந்தியாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்கிறார் த்ரிஷா.

தற்போது, 96, ஹே ஜுட், சதுரங்க வேட்டை-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது உடற்பயிற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம்.

அந்த வகையில், இவரின் பாக்சிங் பயிற்சி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ட்விட்டர் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார் த்ரிஷா.

மேலும், பாக்சிங்கை ‘my current love’ எனவும் த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் ‘நீ என்னை அடிக்கும் படி கனவு கண்டால் கூட, விழிக்கும்போது என்னிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு தான் எழுவாய்.. நான் அவ்வளவு பலசாலியானவள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Trisha Boxing video goes Viral

“If u even dream of beating me,u better wake up n apologise”-MA 

உலகளவில் விவேகம் டைட்டில் ட்ராக்; வியக்கும் விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரே நேரத்தில் அஜித்தின் விவேகம், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.

இதில் சூர்யா படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

இவர் விவேகம் படத்தின் டைட்டில் ட்ராக்கை கேட்டிருக்கிறாராம். அதுகுறித்த தன் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது….

விவேகம் டைட்டில் டிராக்கை கேட்கும் பாக்கியம் பெற்றேன். அனிருத் இசை உலகளவில் உள்ளது. என பதிவிட்டுள்ளார்.

அனிருத், ராஜகுமாரி மற்றும் விவியன் டிவைன் ஆகியோர் இந்த டைட்டில் ட்ராக் குழுவினர் என தெரியவந்துள்ளது.

Director Vignesh Sivan praises Anirudh musical and Vivegam Title Track

Vignesh ShivN‏Verified account @VigneshShivN
Was lucky to hear #VivegamTitleTrack Completely blown over! Trippin on it ! Truly international @anirudhofficial F*** Yenna sir

முதன்முறையாக தமிழகத்தில் ‘தல’ சிலை; இன்று திறப்பு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் உழைத்து முன்னேறியவர் நடிகர் அஜித்.

இவரே ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என்ற பிறகும், இவருக்கான கூட்டம் நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

திரையுலகில் இன்றுடன் இவர் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

எனவே அஜித் ரசிகர்கள் இதை பல்வேறு விதங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த ரசிகர்கள் இன்று அஜித் சிலையை திறந்து வைக்கின்றனர்.

இந்த சிலையை உருவாக்க ரூ. 1 லட்சம் வரை செலவாகியுள்ளதாம்.

20 கிலோ எடையில், 4 அடி உயரத்திற்கு கண்ணாடி இழைகளால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் முன்னிலையில் இன்று இந்த சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.

Fans launching Ajith Statue at Kumbakonam today

தனுஷின் உதவி முன் உதாரணமாக அமையும்… பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வறட்சியால் பாதிக்கப்பட்ட 125 விவசாயிகளின் குடும்பத்திற்கு நடிகர் தனுஷ் உதவினார் என்பதை பார்த்தோம்.

ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா ரூ- 50 ஆயிரம் கொடுத்தார். மேலும் தன்னால் முடிந்தவரை இன்னும் செய்வேன் என உறுதியளிந்திருந்தார்.

இந்நிலையில் தனுஷின் இந்த உதவி குறித்து நடிகர் பிரசன்னா தன் ட்விட்டர் பதிவிட்டுள்ளதாவது….

நீங்கள் செய்த உதவி மிகப்பெரியது. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். இது போல் பலரும் உதவி செய்ய இது முன் உதாரணமாக இருக்கும்.” என்று பதிவிட்டுள்ளார்.

Dhanush help will Inspire many to contribute says Prasanna

Prasanna‏Verified account @Prasanna_actor
God bless @dhanushkraja for his extraordinary gesture to help poor farmers. This will inspire many to contribute. #helpTNfarmers

More Articles
Follows