தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் விவகாரத்தில் கோர்ட்டில் வரி விலக்கு கேட்டு இருந்தனர் விஜய் மற்றும் தனுஷ்.
இந்த சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் இருவரையும் நீதிபதி சுப்ரமண்யம் காட்டமாக விமர்சித்து இருந்தார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை கோலிவுட்டில் ஏற்படுத்தியது.
விஜய்க்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டு செய்திருந்தார்.
48 மணிநேரத்தில் தனுஷ் ரூ 30 லட்சம் கட்ட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் விஜய், தனுஷ் இருவருமே நுழைவு வரி கட்டுகிறோம் என தங்கள் தரப்பில் தெரிவித்தனர்.
விஜய், தனுஷ் இருவருமே ஏற்கெனவே பாதி நுழைவு வரியை கட்டியிருந்தனர்.
தற்போது விஜய் மீதமுள்ள ரூ 40 லட்சத்தையும் தனுஷ் மீதமுள்ள ரூ 30 லட்சத்தையும் நுழைவு வரியாக கட்டிவிட்டதாக சொல்லப்படுகின்றது.
Vijay and Dhanush pays the entire entry tax for his Rolls Royce car