தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நயன்தாரா நடிப்பில் லைகா தயாரித்துள்ள படம் ‘கோலமாவு கோகிலா’.
நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, முக்கியி வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்த பாடல் நேற்று வெளியானது.
இந்த பாடலை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ள டைரக்டர் விக்னேஷ் சிவன் அவர்கள் நயன்தாராவை பெயரை குறிப்பிடும்போது காதல் எமோஜியை போட்டு, யோகிபாபு பெயரை பதிவிட்டு குத்து + கோபம் எமோஜிளை பதிவிட்டுள்ளார்.
சினிமாவில் கூட இனி நயன்தாராவிடம் யாரும் காதலை சொல்லக்கூடாது போல… ஹீரோஸ் எல்லாம் எச்சரிக்கையாக இருங்கப்பா..
அஜித்துடன் விஸ்வாசம், சிவகார்த்திகேயன்டன் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் ஆகிய படங்களில் நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பது இங்கே கவனித்தக்கது.
அனிருத் இசையில், சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.