அவமானம் தோல்வி.. neverevergiveup.; விரக்தியில் விக்னேஷ் சிவன்.? யாரை தாக்குகிறார்.?

அவமானம் தோல்வி.. neverevergiveup.; விரக்தியில் விக்னேஷ் சிவன்.? யாரை தாக்குகிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிக்கும் அவரின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைக்கா நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகினார். அவர் விலகினார் என்பதை விட நீக்கப்பட்டார் என்பதே சரியானதாக இருக்கும்.

இதனையடுத்து விக்னேஷ் சிவனின் அடுத்த பட ஹீரோ யார்.? என்ற கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.. அது யாருக்கான பதிவு என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது..

இதோ அந்த பதிவு..

“என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களை சுவாசிக்கவும், உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி.

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது. பாராட்டும் வெற்றியும் நமக்கு கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது.

#neverevergiveup அடுத்த படத்திற்கு தயாராகிறேன். கடவுளுக்கும், என்னுடைய கடினமான இந்த காலக்கட்டத்தில் என்னுடன் இருந்தவர்களுக்கும் நன்றி.

என் மீதான உங்களின் நம்பிக்கை நான் யாரென்று என்னை அடையாளம் காண மட்டும் உதவவில்லை.

எதிர்பாராத தருணங்களில் உறுதியுடன் இருப்பதற்கான நம்பிக்கையை கொடுத்துள்ளது. உங்களால் நான் மகிழ்ச்சியாக எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகிறேன்” என பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

Vignesh Shivan thanks god for ‘AK 62’ controversy after overcoming the pain

உலக அளவில் ரூ 1000 கோடியை தாண்டியது ஷாருக் – தீபிகாவின் ‘பதான்’

உலக அளவில் ரூ 1000 கோடியை தாண்டியது ஷாருக் – தீபிகாவின் ‘பதான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடித்து கடந்த கடந்த ஜனவரி 25-ல் வெளியான படம், ‘பதான்’.

ஹிந்தியில் வெளியான இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார்.

இதில் இடம்பெற்ற காவி கவர்ச்சி உடை சர்ச்சையை கிளப்பியது.

இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் பல சாதனைகளைப் படைத்து வசூல் வேட்டையாடி வருகிறது.

உலகம் முழுவதும் வெளியான முதல் நாளிலேயே ரூ.105 கோடி வசூலை அள்ளியது. மேலும் 3 நாட்களில் ரூ. 350 கோடியை ஈட்டியது.

ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.660 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது, படம் வெளியாகி ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில், உலகளவில் படம் ரூ.1040 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Shah Rukh Khan’s Pathaan CROSSES Rs 1000 crore at global box office

என் தந்தை இறக்கும் தருணத்தில் என் மனைவியுடன் உடலுறவு.; காந்தி ஜீ-யின் ‘ஃப்ளாஷ் பேக்’

என் தந்தை இறக்கும் தருணத்தில் என் மனைவியுடன் உடலுறவு.; காந்தி ஜீ-யின் ‘ஃப்ளாஷ் பேக்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டான் சாண்டி இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிளாஷ் பேக்’.

இந்த படத்தில் பிரபுதேவா உடன் ரெஜினா, தெலுங்கு நடிகை அனுசுயா, இளவரசு, உமா ரியாஸ், ஆர்யன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அபிஷேக் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ப்ளாஷ்பேக் படத்தின் டிரைலர் வெளியானது.

அதில்.. “மகாத்மா காந்திஜி எழுதிய சுயசரிதை வாசகம் இடம் பெற்றுள்ளது. அதில்… “என் தந்தை இறக்கும் தருணத்தில் என் மனைவியுடன் உடலுறவு கொண்டிருந்தேன்..” என்ற வாசகத்துடன் இந்த ட்ரெய்லர் தொடங்குகிறது.

மீசை அரும்புகிற இளம் பருவ வயதில் மூத்த பெண்ணிடம் உருவாகும் காம காதலை மையப்படுத்தி படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.

இதில் இளைஞர்களை சூடேற்றும் வகையில் ரெஜினா கெசண்ட்ரா கவர்ச்சியாக நடித்துள்ளார்.

இந்த ட்ரெய்லர் இதுவரை 2.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

——–

Prabhu Deva in Flash back trailer goes viral

Very good response for the #Flashback trailer, Trending now on YT

Watch here ▶️ https://youtu.be/TytvkRYYLGI

*ing @PDdancing @ReginaCassandra

Dir by @DonSandyDir

A @SamCSmusic Musical

@Abhishek_films_ @anusuyakhasba @VijayVishwaOffi @DopYuva @Sanlokesh @moorthy_artdir

.@its_mebobs @shankarsathyam1 @KRISHNAKUMAR567 @onlynikil @thinkmusicindia

BREAKING ரஜினி ரசிகர்கள் விழா ரத்து.; திடீர் அறிக்கையின் பின்னணியில் ரஜினி.?!

BREAKING ரஜினி ரசிகர்கள் விழா ரத்து.; திடீர் அறிக்கையின் பின்னணியில் ரஜினி.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்… தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலும் தவிர்க்க முடியாத பெயர்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல நாடுகளில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இதனிடையில் ரஜினி ரசிகர்கள் சார்பில் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் மார்ச் 26ஆம் தேதி பிரம்மாண்ட கூட்டம் நடைபெற உள்ளது.

‘மனிதம் காத்து மகிழ்வோம்’ என்ற தலைப்பில் ரஜினிகாந்த்க்கு பாராட்டு விழா மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க விழா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதில் ரஜினி மன்றத்தில் உள்ள நலிவடைந்த ரசிகர்களுக்கு, ரசிகர்களே உதவி செய்யும் விதமாக ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசு, முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் நட்டி நட்ராஜ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது்

இது ரஜினி அரசியலை முன்னெடுக்கும் நிகழ்வா? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது..

மேற்கண்ட செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த விழாவினை முன்னெடுக்கும் ரஜினி ரசிகர் சோளிங்கர் என் ரவி அவர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தவிர்க்க முடியாத காரணங்களால் ‘மனிதம் காத்து மகிழ்வோம்’ விழா ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

ஆனால் நலத்திட்ட உதவிகள் சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக சென்று சேரும் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை ரஜினி அனுமதி இல்லாமல் இந்த விழா நடத்தப்படுகிறதா.? இந்த விழா திடீரென ரத்து செய்யப்பட என்ன காரணம் என ரஜினி ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.?!

இதோ அந்த அறிக்கை…

Rajini Fans event Cancelled; Rajini behind the sudden statement.?!

நண்பனுக்கு வாய்ப்பு கொடுக்கும் சூரி. அடுத்த பட அறிவிப்பு வெளியானது.

நண்பனுக்கு வாய்ப்பு கொடுக்கும் சூரி. அடுத்த பட அறிவிப்பு வெளியானது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தயாரிப்பில் ‘மதயானை கூட்டம்’ புகழ் விக்ரம் சுகுமாரன் இயக்கும் புதிய படத்தில் சூரி ஒப்பந்தமாகியுள்ளார்.

மதுரையின் தெருக்கூத்து கலைஞர்களை அடிப்படையாகக் கொண்ட இப்படத்துக்கு அரும்பு மீசை குறும்பு பார்வை’, ‘வெண்ணிலா வீடு’ மற்றும் ‘விசிறி’ ஆகிய படங்களை இயக்கிய வெற்றி வீரன் மகாலிங்கம் கதை எழுதியுள்ளார். சூரியும் வெற்றி வீரன் மகாலிங்கமும் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்க சென்னைக்கு வந்த சிறுவயது நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Soori’s next movie writer Vettri Veeran Mahalingam makes a hot announcement

இன்பநிதியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின்

இன்பநிதியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி மகன் இன்பநிதி, சஹானா என்ற இளம்பெண்ணை காதலிப்பதாக வதந்தி பரவி, அவர்களின் சில படங்கள் இணையத்தில் வைரலாகின. இன்பநிதியின் தாய் கிருத்திகா சமூக ஊடகங்களில் தனது மகனுக்கு ஆதரவாக அன்பை வெளிப்படுத்த பயப்பட வேண்டாம் என்று கூறினார்.

தற்போது, ​​உதயநிதி ஸ்டாலின் எதிர்மறையான கருத்துகளுக்கு பதிலளித்துள்ளார். இன்பநிதிக்கு 18 வயதுக்கு மேல் ஆகிறது. அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. பொது வெளியில் பேசுவது சரியாக இருக்காது. அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு எல்லைக்கு அப்பால் தலையிட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

Udhayanidhi Stalin breaks silence on the controversy over his son Inbanithi’s personal life!

More Articles
Follows