தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜவுளித்துறையை சார்ந்து தறியில் நடக்கும் அவலநிலையை மையமாக ‘தறி’ என்ற நாவலை பாரதிநாதன் என்பவர் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இதை மையப்படுத்தை ஒரு திரைப்படம் உருவாகிறது.
‘உதயம் NH4’, ‘புகழ்’ ஆகிய படங்களை இயக்கிய மணிமாறன் ‘சங்கத் தலைவன்’ என்ற பெயரில் உருவாகவுள்ள படத்தை இயக்குகிறார்.
வெற்றிமாறனின் ‘கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம்’ தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி 22-ம் தேதி தொடங்குகிறது.
சமுத்திரக்கனி, கருணாஸ், ஆகியோர் இதில் நடிக்கவுள்ளனர்.
மேலும் அறம் படத்தில் நடித்த சுனுலட்சுமி மற்றும் விஜய் TV தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இம்மாதம் 22 ந்தேதி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.