தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரின் பாராட்டைப் பெற்ற ‘ஜெய் பீம்’ படக்குழு

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரின் பாராட்டைப் பெற்ற ‘ஜெய் பீம்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்தார். அவருடன் நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தை சிவக்குமார், இயக்குநர் த.செ.ஞானவேலு, 2D நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர்.

முன்னதாக படத்தை (ஓடிடி) தொலைக்காட்சியில் பார்த்த நல்லக்கண்ணு, திரையில் காண விருப்பம் தெரிவித்திருந்தார்.

அதற்கேற்ப படத்தை என் எப் டி சியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று வியாழக்கிழமை இரவு படத்தைத் திரையில் கண்டு ரசித்தார்.

படத்தைப் பார்த்துவிட்டு நல்லக்கண்ணு அவர்கள், நடிகர் சூர்யாவையும், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் வெகுவாகப் பாராட்டினார்.

நடிகர் சூர்யாவின் கன்னத்தில் செல்லமாக வருடிக் கொடுத்து தனது பாராட்டை நல்லக்கண்ணு பதிவு செய்தார்.

தமிழகத்தில் 1990களில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காண்போரின் சிந்தையைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ‘ஜெய் பீம்’.

நீதிபதி சந்துருவின் வழக்காடு பயணத்தில் இருந்து நிறையவே ஈர்க்கப்பட்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு வழக்கறிஞராக, நீதிபதியாக நீதியரசர் சந்துரு தனது கடமையைச் செய்ய, நீதியை நிலைநாட்டு தன் எல்லைகளைத் தாண்டியும் எப்படிப் போராடினர் என்பதற்கான சாட்சி ‘ஜெய் பீம்’.

இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஃபிலோமின்ராஜ் எடிட்டராகவும், கலை இயக்குநராக கதிரும் பணியாற்றியுள்ளனர்.

நவம்பர் 2 ஆம் உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பிராந்தியங்களில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் பரவலாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் படத்திற்கு பாராட்டும், படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

அந்த வரிசையில், தற்போது ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் பாராட்டியுள்ளார்.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரின் பாராட்டு, நடிகர் சூர்யாவையும் ஜெய்பீம் படக்குழுவினரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Veteran political leader Nallakannu has expressed his heartfelt appreciation to actor Suriya

ஆறு மொழிகளில் அசத்த வரும் ‘மட்டி’.; ஓடிடி ஆஃபரை ஒதுக்கி தள்ளிய தயாரிப்பாளர்

ஆறு மொழிகளில் அசத்த வரும் ‘மட்டி’.; ஓடிடி ஆஃபரை ஒதுக்கி தள்ளிய தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் முதன்முதலில் பிரமாண்ட அளவில் ஆறு மொழிப் படமாக உருவாகியிருக்கிறது ‘மட்டி ‘ (Muddy) திரைப்படம்.

இந்தியாவின் முதன்முதலாக கரடுமுரடான மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் டாக்டர் பிரகபல் இயக்கி உள்ளார்.

பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.குடும்பம், பகை, பழிவாங்கல் , ஆக்ஷன் திகில் என்று பல வண்ணங்களில் இப்படக்கதை சுற்றிச் சுழலும்.

‘கே ஜி.எப் ‘ போன்று இப்படம் ஒரு முழு மேக்கிங் ஸ்டைல் விசையுடனான விறுவிறுப்பைப் பார்ப்பவர்களிடம் உணரவைக்கும் .

‘கே ஜி.எப் ‘
படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘ராட்சசன்’ படப்புகழ் சான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். ‘புலி முருகன் ‘ புகழ் ஆர்.பி.பாலா இப்படத்திற்குத் தமிழில்
வசனம் எழுதி இருக்கிறார்.

யுவன் கிருஷ்ணா, ரிதன் , அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்கள் தவிர பல படங்களில் அறிமுகமான முகங்களும் இப் படத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகி இருக்கிறது .அந்தந்த மொழிகளுக்கும் தனித்தனியானதாக உருவாகி இருக்கிறது.

ஒவ்வொரு மொழிக்குமான பிரத்தியேகமான கலாச்சார பண்பாட்டுத் தன்மையோடு இப்படம் உருவாகியிருக்கிறது.

சினிமா மீது தாகமும் மோகமும் கொண்ட புதிய இளைஞர்களின் கூட்டணியில் ஐந்தாண்டு கால திட்டமிட்ட உழைப்பால் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

இதில் வரும் ஜீப் பந்தயப் படப்பிடிப்புக்காக இரண்டு ஆண்டு காலம் திட்டமிட்டுப் பயிற்சி எடுத்துக்கொண்டு ஒத்திகை பார்த்து உருவாக்கி இருக்கிறார்கள்.

இதில் வரும் ஜீப் ரேஸ் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். டூப்புகள் எதுவும் கையாளாமல் அந்தக் காட்சிகள் உருவாகியிருக்கின்றன.
அதனால்தான் இந்தப் படத்தின் தகுதியறிந்து அந்தந்த மொழிகளில் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டிரைலர்களை வெளியிட்டு வாழ்த்தியிருக்கிறார்கள்.

தமிழில் விஜய் சேதுபதி, ஜெயம்ரவி , தெலுங்கில் அனில் ரவி புடி,
கன்னடத்தில் டாக்டர் சிவராஜ்குமார்,
இந்தியில் பாலிவுட் நட்சத்திரம் அர்ஜுன் கபூர்,மலையாளத்தில் பகத் பாசில், உன்னி முகுந்தன், அபர்ணா பாலமுரளி , ஆசிப் அலி ,சிஜுவில்சன் என்று திரைப் பிரபலங்கள் தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு ஆதரவுக் கரம் கொடுத்துப் படத்தை மேலே கொண்டு சென்றுள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் டாக்டர் பிரகபல் பேசும்போது

“இந்தப் படம் திரையரங்கில் வெளியானால்தான் அதன் முழு ரசிப்பு அனுபவத்தையும் தர முடியும். அந்த அளவிற்கு இதில் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமைந்துள்ளன.

இதில் வரும் சாகச காட்சிகளை திரையரங்கில் ரசித்தால் தான் அதன் முழு விளைவையும் உணர முடியும். இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு நல்ல விலை கேட்டு வந்தும் பிகே 7கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணதாஸ் தருவதற்கு மறுத்து விட்டார் .

ஏன் என்றால் இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்த்தால் தான் உண்மையான திகிலான வீரியமான காட்சிகளின் அனுபவத்தினை உணர்ந்து ரசிக்க முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனவே அவர் ஓடிடியில் வெளியிடக் கொடுக்க மறுத்துவிட்டார்.

இந்தப்படத்தின் டிரைலர்கள் , மோஷன் போஸ்டர்கள் போன்றவை பெரிய அளவில் வெற்றி பெற்றன. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வெளியிட்டு உள்ளார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”என்கிறார்.

பல படங்களில் இடம் பெறாத கதை நிகழ்விடங்கள் படத்தில் வருகின்றன. வாகனங்கள் செல்லாத பல இடங்களில் இதன் படப்பிடிப்பு சிரமப்பட்டு நடந்திருக்கிறது.

அதற்காகப் பெரிய அளவில்
திட்டமும் பயிற்சியும் செயல் படுத்தப் பட்டிருக்கிறது.

இப்படத்தின் டிரைலர் மில்லியன் கணக்கில் ஹிட்டடித்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை
உயர்த்தி வைத்துள்ளது.

“ஒரு பரபரப்பான சாகசம் நிறைந்த திகிலான ஆக்சன் திரில்லர் அனுபவத்துக்குத் தயாராக இருங்கள்” என்று படக்குழு உத்தரவாதம் அளிக்கிறது.

சினிமா தாகம் உள்ள இளைஞர்களின் திறமைகள் இணைந்து இப்படத்தை முழு வீச்சோடு உருவாகியிருக்கிறது .இப்படம் டிசம்பர் 10 முதல் ஒரே நேரத்தில் 6 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.

India’s first-ever mind-boggling 4×4 mud race film “MUDDY” with its worldwide theatrical release on December 10, 2021

தமிழகத்தில் ரூ 150 கோடி வசூலித்து 2வது இடத்தில் ‘அண்ணாத்த’..; ரஜினியை முந்திய நடிகர் யார்? என்ன படம்.?

தமிழகத்தில் ரூ 150 கோடி வசூலித்து 2வது இடத்தில் ‘அண்ணாத்த’..; ரஜினியை முந்திய நடிகர் யார்? என்ன படம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படம் நவம்பர் 4ல் தீபாவளி அன்று தியேட்டர்களின் ரிலீசானது.

இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தனர்.

வெளியான இரண்டு நாட்களிலே அண்ணாத்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்து புதிய சாதனை நிகழ்த்தியது.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அண்ணாத்த வசூல் குறைய ஆரம்பித்தது.

கனமழை காரணமாக சென்னை வெள்ளத்தில் மிதங்க தொடங்கியது.

மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டியதால் திரையரங்குகளுக்கு மக்கள் வரவு குறையவே வசூலும் குறைந்தது.

தற்போது வரை 21 நாட்களை ஆன நிலையில் உலகம் முழுவதும் 230 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமே அண்ணாத்த திரைப்படம் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன்படி அண்ணாத்த படம் 2வது இடத்தை பிடித்துள்ளது. அப்படி என்றால் ரஜினியை முந்தியது யார்? என்பதே தானே உங்கள் கேள்வி.

முதல் இடத்தில் இருக்கும் அந்த நடிகர் யார் தெரியுமா? அதுவும் ரஜினி தான் (அவரை முந்த யார் இருக்கா.?)

அந்த படம் எது.? லைகா ரஜினி – ஷங்கர் கூட்டணியில் வெளியான 2.0 படம் தான் அது.

Annaatthe Collection in Tamilnadu Crosses 150CR in just 3 weeks

JUST IN சிம்புவின் ‘மாநாடு’ அதிகாலை காட்சிகள் ரத்து.; KDM பிரச்சினையால் கடுப்பான ரசிகர்கள்!

JUST IN சிம்புவின் ‘மாநாடு’ அதிகாலை காட்சிகள் ரத்து.; KDM பிரச்சினையால் கடுப்பான ரசிகர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் மாநாடு.

யுவன்ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா, உதயா, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் மாநாடு படத்தில் நடித்துள்ளனர்.

தெலுங்கில் ‘தி லூப்’ என்ற பெயரில் இன்று நவம்பர் 25ல் ரிலீசாகிறது.

தமிழகத்தில் ‘மாநாடு’ சிறப்பு காட்சிக்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றும் தீர்ந்துவிட்டன.

இந்த படம் இன்று நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் திடீர் என தள்ளி வைப்பதாக அறிவித்தார் சுரேஷ் காமாட்சி. அறிவித்த நேரம் 24/11/2021 மாலை 6 மணி்.

அவரின் ட்விட்டர் பதிவில்..

நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்

தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்.. ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.” என பதிவிட்டார்.

இவையில்லாமல் மாநாடு படத்திற்கான கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை பஞ்சாயத்து முற்றியதாகவும் கூறப்படுகிறது.

நேற்று 11.30 மணியளவில் ‘மாநாடு’ படத்திற்கான பண பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதனால் திட்டமிட்டபடி படம் (நவ.25) வெளியாகும் என தெரிய வந்தது..

இப்பட இயக்குனர் வெங்கட் பிரபு.. ‘மாநாடு’ ரிலீஸ் என அறிவித்தார்.

இதனையடுத்து தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் உறுதி செய்யப்பட்டன. ரசிகர்களும் கொண்டாட்டங்களுடன் காத்திருந்தனர்.

ஆனாலும் ரீலீசில் சிக்கல் என மீண்டும் பிரச்சினை ஆரம்பமானது. பேச்சுவார்த்தை தொடங்கியது.

எனவே தமிழகம் முழுவதும் அதிகாலை 5 மணி காட்சிகள் ரத்தானது.

இதனால் தியேட்டர்களில் ரசிகர்கள் டென்சன் ஆனார்கள்… காவர்துறையினர் & பவுன்சர்கள் ரசிகர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். சில இடங்களில் கலாட்டாக்கள் நடைபெற்றன.

ரிலீஸ் தொடர்பான KDM பிரச்சினை பேசப்பட்டது. இந்த KDM பிரச்னையால் படம் காலை வெளியாகவில்லை.

இந்த KDM-தான் பாஸ்வேர்டு. இது வந்தால்தான் ஒரு படத்தை தியேட்டரில் திரையிடவே முடியும்.

ஆரம்ப காலங்களில் படப்பெட்டி & படச்சுருளுக்காகக் காத்திருக்கும் திரையரங்குகள் இன்று KDM-ஐ எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

பின்னர் ஒருவழியாக 25/11/2021 காலை 7 மணியளவில் KDM பிரச்சினை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

7 மணி முதல் ‘மாநாடு’ படத்தை திரையிட அனுமதி கிடைத்துள்ளது.

இது குறித்து காலை 7.15 மணிக்கு சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில் பதிவிட்டார். அதில்…

Everything ok. Sry for the trouble the fans crossed. Nw its our time. God s great. Thnks to everyone who stood for me.

#Maanaadu

Early morning Shows Cancelled.. Later All issues sorted out Simbus Maanadu released

#Maanaadu Release update – All concerned parties are trying to sort out financial issue surrounding the film. If the issues ( KDM – digital & satellite rights sale) are worked out by midnight, will green light release.

JUST IN நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் & மனைவி மகன் ஆஸ்பத்திரியில் அனுமதி.; உதவி கேட்கும் குடும்பம்!

JUST IN நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் & மனைவி மகன் ஆஸ்பத்திரியில் அனுமதி.; உதவி கேட்கும் குடும்பம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

,

தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார் திரைப்பட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர்

இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார்.

இவர் நடித்த படங்கள் இவை..:
சர்க்கார், தானா சேர்ந்த கூட்டம், இன்று நேற்று நாளை, கண்ணா லட்டு தின்ன ஆசையா, அலை, பாப்கார்ன், ஒன்பது ரூபாய் நோட்டு, பரதேசி, தில்லுமுல்லு, என்ன சத்தம் இந்த நேரம், அரண்மனை, அதிபர், எங்கிட்ட மோதாதே, கஜினிகாந்த், நாடோடி கனவு மற்றும் பல..

இந்த நிலையில் நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் மற்றும் அவரது மனைவி மூத்த மகன் ஆகியோர் கொரோனா சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் AlG மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளார்கள்.

இதில் சிவசங்கர் மாஸ்டர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.

அவரது இளைய மகன் அஜய்கிருஷ்னா உடனிருந்து மூவரையும் கவனித்து வருகிறார்.

அவர்களுக்கு சிகிச்சை செலவிற்கு பணம் தேவைப்படுகிறது

அஜய்கிருஷ்னாவின்
வங்கி கணக்கும்
அவரது அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

பண உதவி செய்யுமாறு அஜய் கிருஷ்னா கேட்டுள்ளார்.

Noted Choreographer #ShivaShankar Master affected with #COVID19 and now in critical condition. Due to expensive treatment the family is unable to pay the bills.Wishing him a speedy recovery.

For Contact
Ajay Krishna (Son)
9840323415

Ajay Muralikrishna
107710011005841
Union bank Saligrama brach
IFSC.UBIN0810771

Choreographer Actor Shiva Shankar Master affected with COVID19 He need help

JUST IN நாளை நவம்பர் 25 சிம்புவின் ‘மாநாடு’ ரிலீஸ் கன்பார்ம்.; என்ன நடந்தது.?

JUST IN நாளை நவம்பர் 25 சிம்புவின் ‘மாநாடு’ ரிலீஸ் கன்பார்ம்.; என்ன நடந்தது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள திரைப்படம் மாநாடு.

யுவன்ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, மனோஜ் பாரதிராஜா, உதயா, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் மாநாடு படத்தில் நடித்துள்ளனர்.

தெலுங்கில் ‘தி லூப்’ என்ற பெயரில் நாளை ரிலீசாகிறது.

இந்த படம் நாளை நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் திடீர் என தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

அவரின் ட்விட்டர் பதிவில்..

நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்

தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்.. ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.” என பதிவிட்டார்.

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் சான்றிதழ் காட்டினால் மட்டுமே தியேட்டர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதிக்கப்படுவர் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

‘மாநாடு’ சிறப்பு காட்சிக்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றும் தீர்ந்துவிட்டன.

முன்பதிவில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் கொரோனா தடுப்பூசி காரணத்தால் தான் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதாக தகவல்கள் பறந்தன.

மற்றொரு பக்கம் இவையில்லாமல் மாநாடு படத்திற்கான கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை பஞ்சாயத்து முற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று இரவு 10 மணியளவில் ‘மாநாடு’ படத்திற்கான பண பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், அதனால் திட்டமிட்டபடி படம் நாளை (நவ.25) வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

இப்பட இயக்குனர் வெங்கட் பிரபு.. நாளை ‘மாநாடு’ ரிலீஸ் என அறிவித்துள்ளார்.

நெல்லை ராம் திரையரங்கில் நாளை காலை 5 மணிக்கு முதல் காட்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

All issues sorted out Simbus Maanadu releasing Worldwide Tomorrow

#Maanaadu Release update – All concerned parties are trying to sort out financial issue surrounding the film. If the issues ( digital & satellite rights sale) are worked out by midnight, will green light release.

More Articles
Follows