வெங்கட் பிரபு டீம் அடித்த மூன்று செஞ்சுரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு டீசர்களும், ஒரு டிரைலரும் பத்து லட்ச பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

தமிழ் திரையுலகில் பல ஆண்டு காலமாக விடை தெரியாமல் வலம் வந்து கொண்டிருந்த ஒரு கேள்வி, “கார வச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்போ யாரு வச்சிருக்கா..” தற்போது அந்த கேள்விக்கு தன்னுடைய டீசர் மூலம் விடை அளித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

இதுகுறித்து வெங்கட் பிரவு கூறியதாவது….

“எங்கள் சென்னை 28 – II படத்தின் இரண்டு டீசர்கள் மற்றும் ஒரு டிரைலர் மூலம் நாங்கள் தொடர்ந்து மூன்று சதம் அடித்திருப்பது, எங்கள் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.

எங்கள் மீது எல்லையில்லா அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்….” என்று உற்சாகமாக தெரிவித்தார் இந்த டீம் கேப்டன்.

தீபாவளியுடன் திருவிழா காணும் ‘பைரவா’ ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையதளபதி விஜய் நடித்த எந்த படங்களும் இந்த தீபாவளிக்கு வரவில்லை.

ஆனால் தற்போது தயாராகி வரும் பைரவா படத்தின் சர்ப்ரஸை தீபாவளி அன்றே தரவிருக்கிறார்களாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள திருவிழா என்ற பாடலை வரிகளின் வீடியோவை தீபாவளி தொடங்கும் சமயத்தில் அதாவது வழக்கம்போல இரவு 12.00 மணிக்கு வெளியிடவிருக்கிறார்களாம்.

இது பிரபல தொலைக்காட்சியின் வழியாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தற்போது இணையங்களில் பைரவாவின் ஒரு சர்ப்ரைஸ் வரவிருப்பதாக வைரலாகி வருகிறது.

ஒருவேளை அது திருவிழா பாடலாக இருக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

சினிமா சான்ஸ் தேடுபவர்களுக்கு ‘முன்னோடி’யான எஸ்.பி.டி.ஏ.குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்’ என்கிற இக்கருத்தை முன்வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘முன்னோடி’.

சினிமா மீது கொண்ட காதலால் யாரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் இப்படத்திற்கு இயக்குனர் ஆகியிருக்கிறார் எஸ்.பி.டி.ஏ.குமார்.

சினிமாவில் டைரக்டர் ஆவதற்கு வாய்ப்பு தேடுபவர்கள் இவரையே முன்னோடியாக வைத்துக் கொள்ளலாம் போல. அதான் தன் படத்திற்கும் இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறார்.

இப்படத்தை எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

தெலுங்கில் வளர்ந்து வரும் ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
இரண்டு கதாநாயக நடிகர்கள் இப்படத்தின் மூலம் வில்லன்களாகியுள்ளனர்.

‘கங்காரு’ படத்தின் நாயகன் அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ படத்தில் குணச்சித்திர நடிப்பால் நம் மனம் கவர்ந்த பாவல் நவநீதன் இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுக்ருதிக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.பிரபு ஷங்கர் இசையமைக்கிறார்.

நகைச்சுவை நடிகராக நிரஞ்சன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர். கேம்பஸ் இண்டர்வியூ போல நடிக்க ஆள் தேடியபோது வந்த 120 பேரில் இவர் தேர்வானவர்.

படம் பற்றி இயக்குநர் எஸ்.பி.டி.ஏ.குமார் பேசும்போது…

“படத்தின் நாயகன் நல்லவனா கெட்டவனா? சூழலால் மாறியவனா? மாற்றப்பட்டவனா? என்பது மட்டுமல்ல நல்லவனை முன்னோடியாக எண்ணுகிற பாத்திரத்தின் நிலையையும் தீயவனை முன்னோடியாகக் கொண்ட பாத்திரத்தின் நிலையையும் காட்டி திரைக்கதை அமைத்துள்ளேன்.

இதனால் பர பர வென சுவாரஸ்யம் குறையாமல் படம் பறக்கும்.

இன்று நம் வாழ்க்கையில் உறவுகளின் மேன்மை தெரிவதில்லை அப்படித் தெரியும் போது அவை இருப்பதில்லை. நம்மை விட்டுப் போய்விடுகின்றன. இதை இந்தப் படம் பேசும்.

படத்தில் நான்கு பாடல்கள். தவிர இரண்டு சிறு பாடல்களும் உண்டு. ஒரு பாடல் முழுக்க முழுக்க கிராபிக்சில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. இதுவரை 95 % படப்பிடிப்பு முடிந்து விட்டது.

நீண்ட இடை வெளிக்குப் பிறகு சித்தாரா இதில் அம்மா வேடமேற்று ரீ-எண்ட்ரி ஆகியுள்ளார்.

போலீஸ் எப்படி ஒவ்வொரு வழக்கின்போதும் குற்றங்களை கூர்மையாக துப்பறிந்து கண்டு பிடிக்கிறார்கள் என்பதை அறிந்து வியந்தவன் நான், இதில் அவற்றைக் காட்சிகளாக்கியுள்ளேன்.

தொழில் நுட்பரீதியிலும் பேசப்படும் விதத்தில் காட்சிகளில் அசத்தியிருக்கிறோம்.” என்றார்.

இந்த முன்னோடி டிசம்பரில் வெளியாகும் எனத் தெரிய வந்துள்ளது.

‘ரம்பா நல்லா இருக்காங்க; உங்க வேலைய பாருங்க…’ குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ரம்பா தனது கணவர் இந்திரனை விவாகரத்து செய்யப் போவதாகவும் இது தொடர்பாக அவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால் இது முற்றிலும் தவறானது என தெரிய வந்துள்ளது.

அதாவது அவர் தன் கணவருடன் சேர்த்து வைக்க கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறாராம்.

இதுகுறித்த அறிந்த ரம்பா தனது திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
தற்போது, குஷ்பூ ட்விட்டரில் கூறியிருப்பதாவது…

ரம்பா விஷயத்தில் மக்கள் தங்களின் கற்பனைத் திறனுக்கு ஓய்வு அளிக்க வேண்டும். அவரது விவாகரத்து செய்தி பற்றி பலரும் பேசும் நிலையில் அவரை கனடாவில் சந்தித்தேன்.

ரம்பா மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வதை பார்த்தேன். அவரது கணவர் அவருக்காக கட்டியுள்ள புதிய பங்களாவில் குடியேற திட்டமிட்டுள்ளார். ரம்பாவுடன் தொடர்பில் உள்ளேன்.

அவர் அழகான இரண்டு குழந்தைகளுடன் நலமாக உள்ளார். அவர் நிம்மதியாக வாழட்டும். என்று பதிவிட்டுள்ளார்.

தீபாவளிக்கு சூர்யா ரசிகர்களுக்கு ‘செம’ விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கத்தில் எஸ்-3 படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.

இதன் சூட்டிங்கை பாடல் காட்சியுடன் நேற்று முடித்துள்ளனர்.

இப்படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், விவேக், சூரி, ராதிகா சரத்குமார், ராதாரவி, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தை டிசம்பர் 16-ந் தேதி வெளியிடவுள்ள நிலையில், இதன் டீசரை விரைவில் வெளியிடுவதற்கான பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் டீசர் ரிலீஸ் தேதியை தீபாவளி அன்று மோசன் போஸ்டர் மூலமாக அறிவிக்க இருக்கிறார்களாம்.

மேலும் இந்த மோசன் போஸ்டர் திரையரங்குகளில் திரையிடப்படும் எனத் தெரிகிறது.

சிவகார்த்திகேயன் பிரச்சினைக்காக ஒன்று கூடும் நடிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் நடைபெற்ற ரெமோ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்க பேசினார்.

தன் படங்களுக்கு சிலர் பிரச்சினை எழுப்புவதாக அப்போது கூறினார்.

இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் பேசியபோது…

“சிவகார்த்திகேயன் பிரச்சினை குறித்து புகார் நடிகர் சங்கத்திற்கு வந்துள்ளது. இதற்கு நிச்சயம் நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும்.

இது தொடர்பாக விரைவில் அனைத்து நடிகர்களுடன் ஒன்று கூடி ஆலோசிக்க இருக்கிறோம்.

இதில் முன்னணி நடிகர்களின் கருத்துக்களும் இடம்பெறும். என்றனர்.

More Articles
Follows