எங்க ஸ்டெர்லைட் ஆலையை திறந்து விடுங்க.. 500 டன் ஆக்ஸிஜன் ப்ரீயா தர்றோம்.; அனுமதி வழங்க அரசு தயார்!

எங்க ஸ்டெர்லைட் ஆலையை திறந்து விடுங்க.. 500 டன் ஆக்ஸிஜன் ப்ரீயா தர்றோம்.; அனுமதி வழங்க அரசு தயார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sterlite tuticorin (2)கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனவே இந்த போராட்டத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து பலமுறை திறக்க அனுமதி கோரி இந்த வேதாந்தா நிறுவனம் கோர்ட்டில் முறையிட்டது.

தற்போது மீண்டும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி ஆலையை திறக்க முறையிட்டு வருகிறது இந்த வேதாந்தா நிறுவனம்.

அதன் விவரம் வருமாறு…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் வாயு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் 500 டன் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த அந்த இடைக்கால மனுவை அவசர வழக்காக விசாரித்தது உச்சநீதிமன்றம்.

மேலும் இந்த மனு தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசிடம் தெரிவித்தது.

இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் சுகாதாரத் தேவைக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம்’ என்று தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் வழக்கறிஞர், அனுமதி வழங்கினால் 6 நாட்களில் ஆக்சிஜன் தயாரிப்போம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் இடைக்கால மனு மீது பதிலளிக்க தமிழக அரசு அவகாசம் கோரிய நிலையில் வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vedanta offers to supply free oxygen from closed Tuticorin Sterlite Copper plant

சூரி & விஜய்சேதுபதி படத்திற்கு (மீண்டும்) ரஜினி படத்தலைப்பை வைத்த வெற்றிமாறன்

சூரி & விஜய்சேதுபதி படத்திற்கு (மீண்டும்) ரஜினி படத்தலைப்பை வைத்த வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Viduthalai (1)இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக இப்படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

வாத்தியாராக விஜய் சேதுபதி மற்றும் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடித்து வரும் படம் இது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘விடுதலை’ என பெயர் வைத்து பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இதே படப்பெயரில் சிவாஜி & ரஜினி நடித்த படம் 1986ல் வெளியானது.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ் நடித்த படத்திற்கு ரஜினி படத்தலைப்பான ‘பொல்லாதவன்’ என பெயர் வைத்திருந்தார் வெற்றிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் விடுதலை படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.

வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி, பவானிஶ்ரீ உட்பட மொத்த படக்குழுவும் அங்கேயே குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி, தங்கி படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

“அசுரன்” படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் மீண்டும் ஒரு வித்தியாசமான கதைகளத்துடன், சீட் நுனியில் அமரவைக்கும், பரபர திரில்லான திரைக்கதையுடன் ரசிகர்களை அசத்தவுள்ளார்.

வெற்றிமாறன் படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

R.ராமர் படத்தொகுப்பு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். ஜாக்கி கலை இயக்கம் செய்கிறார்.

RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தினை பிரமாண்ட முறையில், இந்தியாவெங்கும் தமிழ் மட்டுமல்லாது, பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு வருகிறார்..

Vetri maaran’s next gets Rajini film title

விவேக் மரணம் & தடுப்பூசி சர்ச்சை பேச்சு.: மனு தள்ளுபடி..; கைதாகும் மன்சூர் அலிகான்

விவேக் மரணம் & தடுப்பூசி சர்ச்சை பேச்சு.: மனு தள்ளுபடி..; கைதாகும் மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MansoorAliKhanஏப்ரல் 15ல் கொரோனா தடுப்பூசி் போட்டுக் கொண்ட நடிகர் விவேக் அடுத்த நாள் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அப்போது மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்..

” தடுப்பூசியால் விவேக்கிக்கு உடல்நல குறைவு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கொரோனா இந்தியாவிலேயே இல்லை.

மத்திய மாநில அரசுகள் மக்களை ஏமாற்றுகிறது என கண்டமேனிக்கு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் மன்சூர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அளித்த புகாரின் பேரில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், தூண்டிவிடுதல், தொற்றுப்பரவல் தடைச் சட்டத்தை மீறுதல், சமூக வலைதளங்கள், காட்சி ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்புதல், பொதுமக்களைத் தூண்டிவிடுதல், தொற்றுநோய் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மன்சூரலிகான் கைது செய்யப்படுவார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் முன்ஜாமீன் கேட்டு மன்சூரலிகான் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக பதிவான வழக்கில், நடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே விரைவில் மன்சூர் அலிகான் கைதாவார் என சொல்லப்படுகிறது.

Madras high court cancels man soor ali khan bail case

கைலாசா தீவுக்கு நோ எண்ட்ரீ.; இந்திய பக்தர்களுக்கு தடை போட்ட நித்தியானந்தா..; என்னவாம்..?

கைலாசா தீவுக்கு நோ எண்ட்ரீ.; இந்திய பக்தர்களுக்கு தடை போட்ட நித்தியானந்தா..; என்னவாம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kailasaசாமியார் நித்தியானந்தா… இவரைச் சுற்றி் நித்தமும் இளம் பெண்கள் கூட்டம் இருந்தும் கொண்டே இருக்கும்.

இதனால் இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.

பெண்கள் பாலியல் புகார் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அண்மையில் சிக்கியவர்.

இவரை தமிழக போலீசார் தேடிக் கொண்டிருக்கும் போதே திடீரென வெளிநாடு பறந்தார்.

இந்துக்களுக்காக கைலாசா என்ற தனித் தீவையே உருவாக்கினார்.

அந்த நாட்டுக்கென தனி ரிசர்வ் வங்கி, கரன்சி நோட்டுகளையும் வெளியிட்டார்.

எனவே பலரின் கனவும் கைலாசா நாட்டு பக்கம் திரும்பியது. கொரோனா காலத்தில் அந்த நாட்டுக்கு செல்ல பலரும் விரும்பினர்.

தற்போது இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக இருப்பதால், இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியா செல்ல அந்நாட்டு பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் நித்தியானந்தாவும், இந்திய பக்தர்களுக்கு கைலாசா நாட்டிற்கு வர தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Nithya nandha ban indian people to enter Kailasa

வருடந்தோறும் 108 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் தர சிவாஜி குடும்பம் முடிவு

வருடந்தோறும் 108 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் தர சிவாஜி குடும்பம் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivaji son ramkumarசிம்மக்குரலோன் நடிகர் திலகம் மறைந்த
சிவாஜி கணேசன் அவர்களின் மூத்த மகன் ராம் குமார். இவர் நடிகர் பிரபுக்கு அண்ணன் ஆவார்.

ஐ, எல்கேஜி உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.

அண்மையில் பா.ஜ., கட்சியில் இணைந்தார்.

இந்த நிலையில் இன்று ராம்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

” கொரோனா தொற்று மீண்டும் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவ தொடங்கி உள்ளது. மக்கள் அனைவரும் முக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியை பின்பற்றி பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.

இத்தருணத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வருகிற ஜூலை 21 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி இந்தாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் துவங்கப்பட உள்ளது.

இதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் விரைவில் தெரிவிக்கப்படும். அனைவரின் ஒத்துழைப்பு, ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு ராம்குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Sivaji family help to poor family

மீண்டும் ஹிந்தி படத்திற்கு அனிருத் இசை..; தனுஷின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் கூட்டணி

மீண்டும் ஹிந்தி படத்திற்கு அனிருத் இசை..; தனுஷின் சூப்பர் ஹிட் இயக்குனருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anirudh (2)தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத்.

இவர் கடந்த 2013ல் விக்ரம் நடித்த ‘டேவிட்’ என்ற ஹிந்தி படத்திற்கு ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்து இருந்தார்.

அதன் பிறகு வேறு எந்த ஹிந்தி படங்களுக்கு அனிருத் இசையமைக்கவில்லை.

தற்போது தமிழில் கமலின் இந்தியன் 2, விக்ரம் & தளபதி 65 படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.

இந்த நிலையில் 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இதில் ஹீரோவாக அக்சய்குமார் நடிக்க உள்ளாராம்.

தனுஷ் நடித்த ஹிந்திப் படங்களான ராஞ்சனா & அட்ராங்கிரே (இன்னும் ரிலீஸ் ஆகவில்லை) ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த் எல்.ராய்.

இந்த இயக்குனரின் புதிய படத்தில் தான் அனிருத் இசையமைக்க கமிட்டாகியிருக்கிறார்.

Anirudh to score music for bollywood film

More Articles
Follows