தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே இந்த போராட்டத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
இதனை தொடர்ந்து பலமுறை திறக்க அனுமதி கோரி இந்த வேதாந்தா நிறுவனம் கோர்ட்டில் முறையிட்டது.
தற்போது மீண்டும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை காரணம் காட்டி ஆலையை திறக்க முறையிட்டு வருகிறது இந்த வேதாந்தா நிறுவனம்.
அதன் விவரம் வருமாறு…
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் வாயு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் 500 டன் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த அந்த இடைக்கால மனுவை அவசர வழக்காக விசாரித்தது உச்சநீதிமன்றம்.
மேலும் இந்த மனு தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசிடம் தெரிவித்தது.
இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் சுகாதாரத் தேவைக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம்’ என்று தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் வழக்கறிஞர், அனுமதி வழங்கினால் 6 நாட்களில் ஆக்சிஜன் தயாரிப்போம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் இடைக்கால மனு மீது பதிலளிக்க தமிழக அரசு அவகாசம் கோரிய நிலையில் வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Vedanta offers to supply free oxygen from closed Tuticorin Sterlite Copper plant