தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு & தெலுங்கு இயக்குனர் வம்சி ஆகியோரது கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’.
விஜய் ராஷ்மிகா ஜோடியாக இணைந்து நடித்து வரும் இந்த படத்தை அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர்.
தற்போது இதன் சூட்டிங் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடந்து வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த செய்தியாளர்கள் அங்கு செய்தி சேகரிப்பதற்காக சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு செய்தியாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் உரிய அனுமதியின்றி யானைகளை படப்பிடிப்பில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து கேள்வி எழுப்பியதே தகராறுக்கு வழிவகுத்து உள்ளது.
இதறால் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் செய்தியாளர்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தி அவர்களை கடத்தி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து தாக்குதலை நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இத்துடன் செய்தியாளர்களை மீட்டுள்ளனர்.
மேலும் செய்தியாளர்களை தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவுமாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி உள்பட 7 பேர் மீது எப் ஐ ஆர் போட்டுள்ளனர். இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள இசிஆர் சரவணன் என்பவர் இந்த தகவலை அடுத்து தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர்.