இளவயசு ஆசைய 40 வயசுல நிறைவேத்திகல…; வனிதாவை கடுப்பேற்றிய கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்ற உதவி இயக்குனரை 3வது திருமணம் செய்துக் கொண்டார் நடிகை வனிதா.

அந்த நிகழ்வில் தன் முதல் & 2வது கணவரின் குழந்தைகள் முன்னிலையில் தன் கணவரை முத்தமிட்டார் வனிதா.

அதை தொடர்ந்து தன் திருமணத்தை விமர்சித்து வருவோருக்கு அதிரடியாக பதிலளித்து வருகிறார் வனிதா விஜயகுமார் .

நடிகை கஸ்தூரியின் பல்வேறு ட்வீட்களுக்கும் பதிலளித்திருக்கிறார்.

அதில் ஒரு ட்வீட்டில்… கஸ்தூரி, எலிசபெத் ஹெலனுக்கு வாழ்க்கை அளித்திருக்கிறார். உங்களுக்கு வாழ்க்கை. அதனால் நீங்கள் அவருக்கு நிதி உதவியும் செய்யலாம். அவருக்கு நீங்களும், தமிழ்நாடும் இருக்கிறது” என வனிதா குறிப்பிட்டார்.

வனிதாவின் ட்வீட்டுக்கு…, நான் யாருடைய கணவரையும் திருடவில்லை. 40 வயதில் இளவயது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளவில்லை.

நான் எலிசபெத் ஹெலனுக்கு சட்டப்படி ஆதரவு அளிப்பேன் என கூறியுள்ளார்.

அத்துடன் நடிகை லட்சுமி ராமகிருஷணன் தெரிவிக்கும் கருத்துக்கும் ஆதரவு தெரிவிப்பதாகவும் கஸ்தூரி பதிவிட்டார்.

எனவே இருவரும் மாறி மாறி ட்விட்டரில் அதிரடியாக கருத்துடன் மோதினர்.

ஒரு கட்டத்தில் ட்விட்டரிலும் & வாழ்க்கையிலும் தான் கஸ்தூரியை பிளாக் செய்து விட்டதாக தெரிவித்திருக்கிறார் வனிதா.

இதற்கு பயந்துட்டியா குமாரு என்று வனிதாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் கஸ்தூரி.

தன் சொகுசு பங்களாவை பிளாஸ்டிக் கவர் வைத்து மூடி கொரோனாவுக்கு ஷாரூக்கான் சவால்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது.

இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நடிகர் ஷாருக்கான் ஏற்கனவே தனது 5 மாடி அலுவலகத்தை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார்.

நடிகர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் வரை நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த வைரஸ் பாதிப்பால் தினம் தினம் பல உயிர்களை இழந்து வருகிறோம்.

இதன் பாதிப்பு பாலிவுட் திரையுலகையும் விட்டுவைக்கவில்லை.

பிரபல நடிகர்கள் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகியோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் ஷாரூக்கான் தன் சொகுசு பங்களாவை பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறாராம்.

தென்னிந்திய சினிமாவில் ரஜினியை அடுத்து பிரபாஸ் உடன் இணையும் தீபிகா படுகோனே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவை சேர்ந்த தீபிகா படுகோனே பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தில் அறிமுகமானாலும் 2007ல் ஷாரூக்காருடன் இணைந்த ஓம் சாந்தி ஓம் சாந்தி படம் தான் இவரை இந்தியளவில் பிரபலமாக்கியது.

அதன்பின்னர் பல படங்களில் நடித்து தற்போது ஹாலிவுட் படங்களிலும் தலை காட்டி வருகிறார்.

தமிழில், மோஷன் கேப்சரிங் முறையில் உருவான ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருத்தார் தீபிகா.

தற்போது ’83’ படத்தில் கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்தும் தயாரித்தும் வருகிறார்.

இந்த நிலையில் பிரபாஸ் (21) நடிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

‘மகாநடி’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படம் மூலம் நேரடியாக தெலுங்கு சினிமாவில் நுழைகிறார் தீபிகா.

Prabhas and Deepika Padukone to star in Nag Ashwins film

கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் & கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசனின் மிரட்டலான நடிப்பில் 2006-ல் ரிலீசான படம் “வேட்டையாடு விளையாடு”.

இப்படத்தில் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படத்தின் பாடல்களும் சரி படமும் சரி சக்கை போடு போட்டது.

தற்போது அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் முக்கிய கேரக்டரிதல் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சிவா இயக்கும் ரஜினியின் அண்ணாத்த படத்திலும் கீர்த்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy Suresh to romance with Kamal in Vettaiyadu Vilayadu 2

தாத்தா கனவுல வந்து உங்களை அடிப்பார்.; கண்ணதாசன் பேரனுக்கு சிவகார்த்திகேயன் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையமைத்த டாக்டர் படத்தின் ‘செல்லம்மா’ என்ற பாடல் அண்மையில் வெளியானது.

இந்த படத்தை நெல்சன் என்பவர் இயக்கியுள்ளார்.

செல்லம்மா என்ற இந்த பாடலும் இது உருவாக்கப்பட்ட விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் கவிஞர் கண்ணதாசனின் பேரனும் நடிகருமான ஆதவ் கண்ணதாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிவகார்த்திகேயன் கவிஞரே பயங்கர ஃபார்முல இருக்கீங்க போல, செம கேட்சி சாங் அனிருத். அராஜகம் பண்றிங்க நெல்சன்” என்று வாழ்த்தி பதிவிட்டார்

இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “தயவு செய்து என்னை கவிஞர் என்றெல்லாம் சொல்லாதீர்கள். தாத்தா கனவில் வந்து உங்களை அடிப்பார்” என பதிவிட்டுள்ளார்.

Chellama song from Sivakarthikeyans Doctor goes viral

 

பிறந்த நாளில் விஜய் ஆண்டனி பட அறிவிப்பு..; எந்த படத்தின் 2ஆம் பாகம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் இசையப்பாளரும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனி வருகிற ஜூலை 24ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.

அன்றைய தினத்தில் அவரின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

அவரது ட்விட்டரில் பக்கத்தில் இது எந்த படத்தின் 2ஆம் பாகமாக இருக்கும் என கருத்து கணிப்பு நடத்தி வருகிறார்.

அதில் நான் / சலீம்.. பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன், கொலைகாரன் உள்ளிட்ட பட பெயர்கள் உள்ளன.

அனேகமாக இது பிச்சைக்காரன் படத்தின் 2ஆம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

விஜய் ஆன்டனி பிக்சர்ஸ் பி லிட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் இப்படம் உலகெங்கும் 2021ஆம் ஆண்டு திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி தற்போது ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’, ‘காக்கி’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இத்துடன் ஆனந்த் கிருஷ்ணன், விஜய் மில்டன் மற்றும் பாலாஜி கே.குமார் ஆகியோரின் பெயரிடப்படாத படங்களிலும் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Antonys new film announcement on his birthday

More Articles
Follows