சினிமா இல்லனா வெப் சீரிஸ்.. வடிவேலு எடுத்த அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வடிவேலு இல்லாத சினிமா… உப்பு இல்லாத உணவாக மாறிவிட்டது.

அவர் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அவரின் காமெடி மற்றும் மீம்ஸ்களே என்றும் டிரெண்ட்டிங்கில் உள்ளது.

ஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்து வந்தார் வடிவேலு.

அப்போது ஏற்பட்ட சில கருத்து மோதல்களால் படத்திலிருந்து விலகினார் வடிவேலு.

இதனையடுத்து ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

மெர்சல், கத்தி சண்டை உள்ளிட்ட ஓரிரு படங்களில் மட்டுமே தலைகாட்டினார்.

ஆனால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குவதால் புதிய படங்களில் வடிவேலு நடிக்கவில்லை.

இந்த நிலையில், வடிவேலுவை வெப் தொடரில் நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடப்பதாக தெரிய வந்துள்ளது.

இதற்காக ஆன்லைன் முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், வடிவேலுவுக்கு பெரிய தொகையை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க காமெடி தொடராக இது உருவாகவுள்ளதாம்.

எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை படத்தில் கார்த்தி-ராஜ்கிரண்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர் முத்துராமலிங்கத் தேவர்.

ஆன்மிகவாதியாகவும் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கிய இவர் அக்டோபர் 30, 1908 பிறந்து அக்டோபர் 30, 1963 மரணமடைந்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும்.

இவரது பிறந்த நாளை தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் தேவர் குருபூஜை விழா என்ற பெயரில் கொண்டாடி வருகின்றது.

இந்த நிலையில் தற்போது முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை ஒரு திரைப்படமாக உள்ளது.

தேசிய தலைவர் என்ற பெயரில் அதை படமாக தயாரிக்கவிருக்கிறாராம் ஜெ.எம்.பஷீர்.

இதில், ராஜ்கிரண், கார்த்தி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் தயாரிப்பாளர் பஷீர் நடிக்கிறார்.

மறைந்த சிவாஜி கணேசன் அவர்களுக்கு ‘மேக்கப்’ போட்ட நடராஜன் என்பவர் தான் தேவர் கேரக்டருக்கும் மேக்கப் செய்யவுள்ளார்.

Pasumpon Muthuramalinga Thevar biopic news updates

நடிகைகளின் தொப்புள் இடையளவுக்கு மதிப்பெண்கள் போடும் ஓதேசி நாய்.. ஷான் ரோல்டனின் ஷாக் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஷான் ரோல்டன்.

இவர் சதுரங்க வேட்டை, முண்டாசுப்பட்டி, ஜோக்கர், பவர் பாண்டி, விஐபி 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அண்மையில் இவரது இசையில் வெளியான மெஹந்தி சர்க்கஸ் மற்றும் தாராள பிரபு பட பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சற்று முன் அவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரை இந்தளவு ஆவேசமாக பேச வைத்தது யார்? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. அதிலும் மோசமான வார்த்தைகளை பதிவிட்டுள்ளார். அது ஏனோ? என்பதுதான் தெரியவில்லை.

அவரின் 3 பதிவுகள் இதோ…

நடிகைகளின் தொப்புள் இடையளவுக்கு மதிப்பெண்கள் போடும் ஓதேசி நாய்களிடம் என் இசையைப்பற்றி பேச எனக்கு என்ன அவசியம் உள்ளது?

பேட்டி கொடக்கவில்லையென்றால் எதிர் பிரச்சாரம் செய்யும் புதிய டிரெண்ட் “மீடியா டெரரிசம்”.

என்னை வேண்டுமென்றே வாரிக்கொண்டே இருக்கும் ஒரு ஊடகம், என்னை அவர்களுக்கு பேட்டி தரச்சொல்லி தொல்லை கொடுக்கின்றனர். இதுதான் அக்மாரக் எச்சைத்தனம்.

Music composer Sean Roldan slam Media

ஆபாச காமெடியை படத்தலைப்பாக்கிய சந்தானம் பட பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் முதன் முறையாக 3 வேடங்களில் நடித்து வரும் படம் டிக்கிலோனா.

ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி காட்சியில் இந்த டிக்கிலோனா என்ற வார்த்தை ஒரு விளையாட்டுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும்.

அதாவது ஒருவரின் பின்னால் உள்ள பகுதியை மற்றொருவர் வந்து பின்னாலேயே மோதுவதாக காட்சி இருக்கும். அந்த ஆபாச விளையாட்டுதான் தற்போது இப்பட டைட்டில் ஆகியுள்ளது.

இந்த படத்தில் சந்தானம் உடன் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் இப்பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

நாளை மற்றும் நாளை மறுநாள் அடுத்தடுத்து போஸ்டர் லுக்குகள் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

Santhanam 3 roles in Dikkiloona movie First Look released

ரஜினிகாந்தை அடுத்து டிஸ்கவரி சேனலில் நடிகர் பிரகாஷ் ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில மாதங்களுக்கு முன் டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிப்பரப்பான இன் டு த வைல்ட் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

தற்போது அதே டிவி நடத்தும் மற்றொரு நிகழ்ச்சியில் ஒரு வர்ணனையாளராக பங்கேற்றுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் வைல்ட் கர்நாடகா எனும் நிகழ்ச்சிக்கு வாய்ஸ் கொடுக்கவிருக்கிறாராம்.

இது குறித்து அவர் கூறியதாவது.. “ஓர் அர்த்தமுள்ள பயணம். இயற்கையின் குரலாக மாறப்போகிறேன். இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு மிகுவும் சிரமப்பட்டு உருவாக்கப்பட்ட இந்திய வன வாழ்க்கையின் ஆவணப்படம். தமிழ் & தெலுங்கில் தொகுத்து வழங்கியதை பெருமையாக உணர்கிறேன்”

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

Prakash Raj lends voice for television documentary Wild Karnataka

பள்ளிகள் திறப்பது எப்போது..?: காலை & மாலை எந்தெந்த வகுப்புகள்.? விரிவான தகவல்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வருடம் கோடை விடுமுறை என்பதை விட கொரோனா விடுமுறை என்றே சொல்லலாம்.

கொரோனா பொது முடக்கத்தால் தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி தொடங்குகிறது.

இதன் முடிவுகள் ஜூலை மாத இறுதியில் வெளியாகும் என தெரிகிறது.

அதுபோல் ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட 11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

நாளை முதல் 11, 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கவுள்ளது.

இதற்காக திருத்தும் மையங்கள் 203 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் மற்ற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளது.

மேலும் விடைத்தாள் திருத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது குறித்து தகவல்கள் தெரிய வந்துள்ளது.

ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் துவங்கப்படும் என தெரிய வந்துள்ளது.

அதாவது 6 முதல் 8ம் வகுப்பு வரை காலையிலும், 9 முதல் 12ம் வகுப்பு வரை பிற்பகலிலும் வகுப்புகள் நடக்கும் என கூறப்படுகிறது.

மேலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிய வந்துள்ளது.

Tamilnadu Schools re open date and details here

More Articles
Follows