தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வடிவேலு நடிக்க, சிம்புதேவன் இயக்கத்தில் டைரக்டர் ஷங்கர் தயாரிப்பில் உருவான இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் கடந்த கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியானது.
இதன் இரண்டாம் பாகத்திற்கு இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என பெயரிட்டு பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார்கள்.
சூட்டிங் தொடங்கி ஒரு வாரத்திற்கு பிறகு சில பிரச்சினைகளால் வடிவேலு படத்தில் நடிக்க மறுத்தார்.
ஆடை வடிவமைப்பாளரிடம் தொடங்கிய சிக்கல் வடிவேலுக்கு தடை விதிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது.
தயாரிப்பாளர் (டைரக்டர்) ஷங்கர் வடிவேலுவால் தனக்கு இழப்பான ரூ.9 கோடியை அவரிடம் இருந்து வாங்கி தர வேண்டும் என்று புகார் கொடுத்து இருக்கிறார்.
எனவே தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
ஆனால் வடிவேலு தொடர்ந்து மறுத்து வந்தார்.
பின்னர் மனம் இறங்கி வந்த வடிவேலு ரூ.2 கோடி வாங்கிக் கொடுத்தால் படத்தில் நடிக்க தயார்’ என்று கூறினாராம்.
ஒருவேளை இதற்கு தயாரிப்பு தரப்பு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் விரைவிலேயே வடிவேலு நடிக்க தடை வரலாம் எனவும் கூறப்படுகிறது.
Vadivelu demands extra 2 crores to act in Imsai Arasan 24m Pulikesi