‘வாரிசு’ படத்துடன் கனெக்ட்டான ‘வாத்தி’.; விஜய்யை தொடர்ந்து தனுஷ் படமும் இணைந்தது

‘வாரிசு’ படத்துடன் கனெக்ட்டான ‘வாத்தி’.; விஜய்யை தொடர்ந்து தனுஷ் படமும் இணைந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘வாத்தி’.

இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மட்டும் தெலுங்கில் உருவாகி வருகிறது.

தெலுங்கு பதிப்பிற்கு சார் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த படம் அடுத்த ஆண்டு 2023 பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ‘வாத்தி’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக லலித்குமார் பெற்றுள்ளார்.

இதே நிறுவனம் தான் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் தமிழக வெளியீடு உரிமையும் பெற்றுள்ளது.

மேலும் லோகேஷ் உள்ள ‘தளபதி 67’ படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘Vaathi’ connected with ‘Varisu’.; Dhanush’s film followed Vijay

நடிகர்களின் சம்பளம் & OTT பிரச்சனைக்கு ஒரு முடிவு..; கே. ராஜன் திட்டவட்டம்

நடிகர்களின் சம்பளம் & OTT பிரச்சனைக்கு ஒரு முடிவு..; கே. ராஜன் திட்டவட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான (லேட்) அண்ணாமலை-க்கு மரியாதை தரும் விதமாக, அவரின் திருவுருவப்படத்தை “அபிராமி” ராமநாதன் திறந்து வைத்தார்.

ரோகினி திரையரங்கு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய K.ராஜன்…

“அண்ணன் அண்ணாமலையின் மறைவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னை பல சமயங்களில் அவர் பாராட்டியுள்ளார்.

உதாரணமாக, திருட்டு VCD களுக்கு எதிராக, பர்மா பஜாரில் நான் கடைகளை அடித்த போது. என்னை அவர் பாராட்டினார். மேலும், பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பலவற்றை பேசியுள்ளோம்.

அவரை போல் நிர்வாகம் செய்து, விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபம் பெற்றுத்தர “ரோகினி” பன்னீர் செல்வம் நினைத்தால் தான் முடியும்.

விரைவில், ஒரு குழுவாக நடிகர்களின் சம்பளம் குறித்தும். OTT பிரச்சனை குறித்தும் அனைவரும் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்”. என்றார்.

‘பாபா’ நஷ்டத்தை கொடுத்தார் ரஜினி.; அது எப்படி வந்ததுன்னு எங்களுக்கு மட்டுமே தெரியும். – அபிராமி ராமநாதன்

‘பாபா’ நஷ்டத்தை கொடுத்தார் ரஜினி.; அது எப்படி வந்ததுன்னு எங்களுக்கு மட்டுமே தெரியும். – அபிராமி ராமநாதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான (லேட்) அண்ணாமலை-க்கு மரியாதை தரும் விதமாக, அவரின் திருவுருவப்படத்தை “அபிராமி” ராமநாதன் திறந்து வைத்தார்.

ரோகினி திரையரங்கு வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், “ரோகினி” திரையரங்கு உரிமையாளர் பன்னீர் செல்வம் அவர்களுடன், கலைப்புலி.S.தாணு, “அபிராமி” ராமநாதன் அருள்பதி, அழகன், K.ராஜன், சக்தி பிலிம் பேக்ட்ரி B.சக்திவேலன், “திருச்சி” மீனாட்சி சுந்தரம், “ராக் போர்ட்” முருகானந்தம், “சேலம்” மனோகரன், ஈஸ்வரன் என திரைத்துறையை சேர்ந்த பலர் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்தனர்.

அவ்விழாவில் பேசிய பலரும் (லேட்) அண்ணாமலை அவர்களுடனான நட்பையும், நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டனர்.

“ரோகினி” திரையரங்கு உரிமையாளர் பன்னீர் செல்வம் பேசியதாவது,

அண்ணாமலையின் மறைவு எங்கள் சங்கத்திற்கு மட்டுமல்லாமல், பல திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களின் வாழ்வில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அதை நிரப்ப யார் வருவார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை.

அவருக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கும் விதத்தில் இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். இங்கு வந்து சிறப்பு சேர்த்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி, என்றார்.

அதனைத் தொடர்ந்து (லேட்)திரு.அண்ணாமலை அவர்களின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார் “அபிராமி” ராமநாதன்.

அப்போது பேசிய “அபிராமி” ராமநாதன்,

இந்த படத்திறப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கும் என் இனத்தவருக்கு வணக்கம். என் இனம் என்றால் திரையுலகம் தான். நாங்கள் பலரையும் மகிழ்வித்திருக்கோம். மேலும் பேசிய அவர், அண்ணாமலை எங்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் முன்பு, கண்ணாயிரம் என்பவர் தான் தலைவராக இருந்தார். அவரின் மறைவுக்கு பின், யாரை தலைவராக்குவது என்பது திரு.D.R அவர்களுக்கு குழப்பமாக இருந்தது.

அந்த சமயத்தில், கண்ணாயிரம் அவர்களின் பணி காலம் முடிய 9 மாதங்கள் உள்ளன. அந்த 9 மாதங்கள் மட்டும் நான் தலைவராக இருக்கட்டுமா? என்றார் அண்ணாமலை.

அப்போது, தலைவராக அதவியேற்ற அண்ணாமலையின் நிர்வாகத்தை கண்டு திரு.D.R அவர்கள் மீண்டும் அண்ணாமலையை தலைவராக்கினார். அந்த அளவிற்கு சிறப்பாக நிர்வாகம் செய்யக்கூடியவர் அண்ணாமலை.

மேலும், ‘பாபா’ படத்தின் தோல்விக்கு ரஜினி நஷ்ட ஈடு கொடுத்தது தான் அனைவருக்கும் தெரியும். அது எப்படி வந்தது என்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியும்” என்றார்.

லவ் டுடே 50வது நாள்.; யோகிபாபு & ராதிகாவை மறந்த பிரதீப் ரங்கநாதன்

லவ் டுடே 50வது நாள்.; யோகிபாபு & ராதிகாவை மறந்த பிரதீப் ரங்கநாதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.

இவர் தனது இரண்டாவது படத்திலேயே நாயகனாகி ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கி நடித்தார்.

இந்த படம் சமீபத்தில் வெளியாகி 10 – 15 மடங்கு லாபத்தை பெற்று தந்துள்ளது.

தற்போது ‘லவ் டுடே’ படம் 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில் ஒரு புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த போஸ்டரில் பிரதீப், இவானா, சத்யராஜ், ரவீனா உள்ளிட்டோர் படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இந்த படத்தில் முக்கியமான கேரக்டர்களில் ராதிகா & யோகி பாபு உள்ளிட்டோ நடித்திருந்தனர். இவர்களின் கேரக்டரும் இவர்கள் பேசிய வசனங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது.

ஆனால் இவர்கள் இருவரின் படங்களை அந்த போஸ்டர்களில் இடம்பெற செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ‘லவ் டுடே’ படத்தின் வெற்றி விழாவில் யோகி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டது இங்கே கவனிக்கத்தக்கது.

lovetoday movie 50th day celebiration

முதல் முறையாக இணைய போகும் ரஜினி – யுவன் கூட்டணி

முதல் முறையாக இணைய போகும் ரஜினி – யுவன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டான் இயக்குனர் சிபி சொன்ன படத்தின் ஸ்கிரிப்ட் ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தற்போது அந்த வாய்ப்பு லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியின் 171வது படத்தை அவர் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

தற்போது படத்தின் கதையை தயாரிப்பாளர் சுபாஷ்கரனிடம் கூற லண்டன் சென்றுள்ளார் பிரதீப். மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது உறுதி செய்யப்பட்டால், ரஜினிகாந்த் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் முதல் படம் இதுவாகும்.

கமலுடன் நடித்த பிரபல நடிகர் “கைகலா சத்ய நாராயணா” காலமானார்…

கமலுடன் நடித்த பிரபல நடிகர் “கைகலா சத்ய நாராயணா” காலமானார்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்தவரும், முன்னாள் எம்பியுமான பிரபல நடிகர் கைகலா சத்திய நாராயணா.

இவர் கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ திரைப்படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

மேலும் தமிழ், தெலுங்கு என 750-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

கைகலா சத்ய நாராயணா சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின், குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில், 23.12.2022 இன்று அதிகாலை ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் இல்லத்தில் காலமானார்.

actor Kaikala Satyanarayana passes away

More Articles
Follows