நிவின்பாலி – அஞ்சலி ஜோடியை இணைக்கும் சிம்பு பட புரொடியூசர்.; தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி

நிவின்பாலி – அஞ்சலி ஜோடியை இணைக்கும் சிம்பு பட புரொடியூசர்.; தேசிய விருது இயக்குனருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் நிறுவனம் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா நடிப்பில் ‘மாநாடு’ என்கிற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் தனது அடுத்த தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வி ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்.

இந்த புதிய படத்தை ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட ஆத்மார்த்தமான படங்களை இயக்கிய இயக்குநர் ராம் இயக்குகிறார்.

‘தங்க மீன்கள்’ படம் மூலம் 3 தேசிய விருதுகள் தமிழ் சினிமாவிற்கு கிடைக்கச் செய்தவர் ராம்.

‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்ட, மலையாள திரையுலகில் இளம் முன்னணி நாயகனாக வலம்வரும் நடிகர் நிவின்பாலி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

அஞ்சலி கதாநாயகியாக நடிக்க, சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்

மக்கள் தொடர்பு – A. ஜான்

V house productions next film announcement is here

உங்களுக்குன்னா ரத்தம்.. அடுத்தவங்கன்னா தக்காளி சட்னியா.? நெற்றிக்கண்ணால் நயன்தாராவை சுட்டெரிக்கும் நெட்டிசன்ஸ்

உங்களுக்குன்னா ரத்தம்.. அடுத்தவங்கன்னா தக்காளி சட்னியா.? நெற்றிக்கண்ணால் நயன்தாராவை சுட்டெரிக்கும் நெட்டிசன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் பட பூஜை, பிரஸ் மீட், இசை வெளியீடு, மூவி புரொமோசன் என எந்த நிகழ்விலும் பங்கேற்காதவர் நடிகர் அஜித்.

இவையில்லாமல் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை நிறுத்தியவர் அஜித்.

இவரின் ரூட்டில் பயணிப்பவர் நயன்தாரா.

இந்த நிலையில் தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து Rowdy Pictures என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ‘நெற்றிக்கண்’ படத்தை தயாரித்துள்ளார்.

‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலந்த் ராவ் இந்த்படத்தை இயக்கியுள்ளார்.

நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

அண்மையில் வெளியான இதன் ட்ரைலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விரைவில் வெளியாக இருக்கும் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் அவரே (அட்மின்) சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் & நெட்டிசன்ஸ் அவரை கலாய்த்து வருகின்றனர்.

தான் தயாரிக்கும் படங்களின் ப்ரோமஷனில் மட்டும் கலந்து கொள்ளும் நீங்கள் அடுத்த தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்களின் ப்ரோமஷனில் ஏன் கலந்துகொள்வது இல்லை.?

உங்கள் சொந்த பணம் படம் என்றால் ஒரு நியாயம் அடுத்தவர் தயாரித்தால் ஒரு நியாயமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

*இதை பார்த்து நயன்தாரா நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே…*

ஒரு படத்திற்கு அக்ரீமென்ட் போடும் போதே தன்னுடைய ப்ரைவேசி மற்றும் பாதுகாப்பிற்காக ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என குறிப்பிட்டுதான் ஓகே சொல்வாராம் நயன்தாரா.

அதையும் ஒப்புக்கொள்ளும் தயாரிப்பாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. என்னத்த சொல்ல..?

Netizens slams Nayanthara for participating in movie promotions

மாணவிக்கு உதவிட வெப் சீரிஸ் டைட்டில் சாங் பாடிய ஜிவி. பிரகாஷ்

மாணவிக்கு உதவிட வெப் சீரிஸ் டைட்டில் சாங் பாடிய ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்படங்களுக்கு இணையாக தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில் ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ மற்றும் ‘மோஷன் கன்டென்ட் குரூப்’ இணைந்து வழங்கும் வெப் சீரிஸ் தான் ‘ஆதலினால் காதல் செய்வீர்’.

இந்த டிஜிட்டல் டெய்லி சீரிஸின் டைட்டில் பாடலை பாடியுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் வெப் சீரிஸ் ஒன்றில் டைட்டில் பாடலை பாடுவது ஜி.வி.பிரகாஷின் கேரியரில் மட்டுமல்ல, வெப் சீரிஸ் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.

“’ஹே நண்பா.. நேத்து நாளை கவலை இல்ல.. இன்று மட்டும் போதுமே!
ஹே நண்பா… கடலும் மணலும் போலவே சேர்ந்திருப்போம் எப்போதுமே..” – என்கிற உற்சாக துள்ளலுடன் கூடிய இந்த பாடலை நித்திஷ் எழுத, மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிற ‘ஆதலினால் காதல் செய்வீர்’ ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ்.

இவர்கள் இருவருமே விகடனால் பட்டை தீட்டப்பட்ட இளம் திறமையாளர்கள் என்பது கூடுதல் தகவல்.

‘இந்தப் பாடலை பாடியதற்காக தனக்கு தரப்படும் ஊதியத்தை, முதுகலை மாணவி ஒருவரின் படிப்புச் செலவுக்கு அப்படியே ஒதுக்கி விடுவதாக ஜி.வி.பிரகாஷ் கூறியது தான் இதில் ஹைலைட்டே..

இந்த ‘ஆதலினால் காதல் செய்வீர்’ டைட்டில் பாடல் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி விகடன் டெலிவிஸ்டாஸ் யூ டியூப் பக்கத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Aadhalinaal Kaadhal Seiveer Digital Series – #HeyNanba Song Teaser Sung by GV Prakash

குழந்தைகளுக்காகவே படம் இயக்கி தயாரிக்கும் அருண் வைத்தியநாதன்

குழந்தைகளுக்காகவே படம் இயக்கி தயாரிக்கும் அருண் வைத்தியநாதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரசன்னா-சினேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அர்ஜுன் நடிப்பில் ‘நிபுணன்’, மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவரும், ‘சீதக்காதி’ இணை தயாரிப்பாளருமான அருண் வைத்தியநாதன், அவரது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தப் படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக வைத்தும், குழந்தைகளின் மனதில் வைத்தும் எடுக்கப்பட உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தைப் பற்றி அருண் வைத்தியநாதன் கூறுகையில்,…

“குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் தமிழ் படங்கள் மிகவும் குறைவு. அப்படி எடுக்கப்படும் படங்களிலும் காதல், சண்டை காட்சிகள் போன்றவை இடம் பெறும்.

அவ்வாறாக இல்லாமல், குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளுக்காக, குழந்தைகளை வைத்தே காட்ட வேண்டும் என்கிற முயற்சி தான் இந்த படம்.

குழந்தைகளுக்கான திரைப்படமாக இருந்தாலும் இது அனைத்து வயதினரையும் கவரும்,” என்றார்.

‘அன்புக்கொரு பஞ்சமில்லை’ என்பதே படத்தின் சாராம்சம் என்று அருண் வைத்தியநாதன் மேலும் கூறினார்.

“கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் தான் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளாரகள். OTT தளங்களிலும் கூட குழந்தைகளை கவரும் வகையில் படங்கள் வரவில்லை.

இந்தப் படத்தின் கதையை நான் கொரோனாவுக்கு முன்னரே எழுதி விட்டாலும், அதை எடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன்.

இந்தப் படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிட உள்ளோம். நான்கு குழந்தைகள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

இதன் கதை சென்னையில் நடைபெற்றாலும், உலகத்தில் உள்ள எந்த குழந்தையும் இதை தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். தயாரிப்பு ரீதியாகவும் படத்தின் குழுவிலும் நிறைய புதுமைகளை புகுத்த உள்ளோம்,” என்று அருண் கூறினார்.

இந்த படத்தை தனது சொந்த நிறுவனமான யூனிவெர்ஸ் கிரியேஷன்ஸ் மூலம் அருண் வைத்தியநாதன் தயாரிக்கிறார்.

Director Arun Vaidyanathan turns producer for children based film

புதுச்சேரி காரைக்காலில் பள்ளி-கல்லூரிகள் திறப்பது எப்போது.? அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரி காரைக்காலில் பள்ளி-கல்லூரிகள் திறப்பது எப்போது.? அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக தமிழகத்தை பின்பற்றியே புதுச்சேரி மாநிலத்தில் அரசு நடவடிக்கைகள் சில இருக்கும்.

தமிழ்நாடு பாடநூல் திட்டத்தை பின்பற்றியே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள் செயல்படுகிறது. பொதுத்தேர்வு முறைகளும் அப்படியே உள்ளன.

இங்கும் தமிழே வழக்கு மொழியாக உள்ளதால் தமிழ் படங்கள் ரிலீசும் தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ரிலீசாகி வருகின்றன.

இதனிடையில் தான் புதுச்சேரி & காரைக்காலில் சினிமா தியேட்டர்கள் ஆகஸ்ட் 1 முதல் திறக்க அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 15 வரை வரை தியேட்டர்கள் திறக்க அனுமதியில்லை.

இதனால் கல்வி நிலையங்கள் திறப்பது மாறுபடுமோ.? என்ற சந்தேகம் புதுச்சேரி காரைக்கால் மக்கள் மத்தியில் எழுந்தது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதன் பின்னர் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது…

“கொரோனா மூன்றாவது அலை எப்போது உறுதியாகும் என தெரியவில்லை.

இன்று மூன்று குழந்தைகள் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுள்ளது.

கல்லூரிகள் மாணவர்கள் தடுப்பூசி போடப்பட்ட பின்பு கல்லூரிகள் திறக்க முடிவு.

கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கையை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 15க்கு பிறகு ஆளுநர் மற்றும் முதலமைச்சரை ஆலோசித்து முடிவு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.” என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

When will schools reopen in Pondicherry ?

நடிகர் பிரேம்ஜி அமரன் இசையில் ERROR

நடிகர் பிரேம்ஜி அமரன் இசையில் ERROR

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘திலகா ஆர்ட்ஸ்’ சார்பாக எஸ்.டி.தமிழரசன் தயாரிக்கும் ‘Error’ படத்தை அறிமுக இயக்குனர் ஜி. பி. கார்த்திக் ராஜா இயக்குகிறார்.

இவர் தொலைக்காட்சிகளில் விஷ்வல் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

‘பேய் இருக்க பயமேன்’ திரைப்படத்தில் துணை இயக்குனராகவும் எடிட்டராகவும் பணியாற்றினார்.

நாயகனாக ‘பேய் இருக்க பயமேன்’ திரைப்பட நாயகன் கார்த்தீஸ்வரன் நடிக்கிறார்.

நாயகியாக இனியா நடிக்கிறார்.

இப்படத்திற்கு இசை பிரேம்ஜி அமரன். ஒளிப்பதிவு விவேக்.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது.

Premgi Amaren to compose music for Error

More Articles
Follows