தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு காலத்தில் விலங்குகளை முக்கிய கேரக்டர்களாக வைத்தே பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் உண்டு.
ஆனால் இன்று விலங்குகள் நல வாரியம் முதல் ப்ளுகிராஸ் வரை ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதால் கிராபிக்ஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால் விலங்குகளை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் தயங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் நாயை மையப்படுத்தி ஒரு படம் உருவாக உள்ளது.
இந்த படத்தை உறுமீன் பட இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார்.
காக்டைல் சினிமாஸ் மற்றும் யுனைடெட் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
நாய்க்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் உறவையும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் விதத்தையும் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கதையை உருவாக்கியுள்ளனர்.
மேலும் குழந்தைகளைக் கவரும் விதத்தில் ஒரு அட்வென்சர் படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.