விஜய்க்கும் சிம்புக்கும் ஏற்பட்ட காஸ்ட்யூம் கனெக்ஷன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ எப்போது முடியும் என்பது சம்பந்தபட்டவர்களுக்கே தெரியாது.

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘AAA’ என்ற ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சிம்பு.

யுவன் ஷங்கர் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தை தொடர்ந்து கிருஷ்ணன் வசந்த் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு அந்தோணி ரூபன்.

இப்படத்தில் சிம்பு மூன்று வேடம் ஏற்கிறார். எனவே பிரபல காஸ்ட்யூம் டிசைனரான சத்யா இப்படத்திற்கு விதவிதமான காஸ்ட்யூம்களை தயார் செய்ய இருக்கிறாராம்.

இவர்தான் விஜய்யின் தெறி மற்றும் தளபதி 60 ஆகிய படங்களுக்கும் காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் – அஜித் ரசிகர்களே… எதுல விளையாடுறதுன்னே தெரியாதா…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 10 நாட்களாக தமிழத்தை உலுக்கிய சம்பவம் ஸ்வாதி என்ற பெண் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட கொடுமைதான்.

இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர்.

நேற்று முன்தினம் கொலைக்காரன் ராம்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

இதனிடையில் அந்த கொலைக்காரனின் முகம் பத்திரிகைகளில் காவல் துறையினரால் வெளியிடப்பட்டது.

அந்த கொலைக்காரன் முகத்தை மார்ப்பிங் செய்த விஜய் ரசிகர்கள் அஜித் முகத்தை ஒட்ட வைத்துள்ளனர்.

அதுபோல் அஜித் ரசிகர்கள் விஜய் முகத்தையும் இணைத்துள்ளனர்.

என்னதான் நடிகர்களின் படங்களுக்குள் போட்டி இருந்தாலும், அவர்களுக்குள் அடித்து சண்டை போட்டுக் கொள்ளட்டும்.

அதை விடுத்து இதுபோன்ற விஷயங்களில் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்ளலாமா? என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் இது போன்ற ரசிகர்களின் செயலை கண்டித்தால் நன்றாக இருக்கும் என்பதே எல்லாருடைய எதிர்பார்ப்பும்.

https://www.youtube.com/watch?v=L0FiXsRKEsc

உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் தளபதி…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனிதன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மளமளவென படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார் உதயநிதி.

சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட படம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கௌரவ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் எழில் இயக்கத்தில் ஒரு படம் என ஒப்புக் கொண்டுள்ளார் உதயநிதி.

இந்நிலையில் இதனையடுத்து இயக்குனர் பொன்ராமின் உதவி இயக்குனர் தளபதி இயக்கவுள்ள ஒரு படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கபாலி ரஞ்சித்துக்கு கல்தா..? முத்தையாவுடன் இணையும் சூர்யா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கவுள்ள படத்தை ரஞ்சித் இயக்குவார் என செய்திகள் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில், புதிதாக ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. கிடைத்த தகவலை இங்கே பகிர்கிறோம்.

அதாவது கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.

இப்படத்தில் தந்தை-மகன் பாசத்தை ஆக்ஷன் உடன் சொல்லவிருக்கிறாராம் இயக்குனர்.

தந்தையாக ராஜ்கிரண் நடிக்க, முழுக்க முழுக்க கிராமத்து இளைஞராக நடிக்கி உள்ளார் சூர்யா.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினியின் வாழ்க்கையை மணல் ஓவியமாக வரைந்த ரசிகர் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்.. 140க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் தமிழகத்தையும் மீறியும் மற்ற மாநிலங்களிலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ரஜினி ரசிகர் ராகுல் ஆர்யா என்பவர் ரஜினியின் மணல் ஓவியத்தை வரைந்துள்ளார்.

ரஜினியின் ஆரம்ப கால வாழ்க்கை முதல், மணல் ஓவியமாக வரைந்து அதை வீடியோவாக ரெக்கார்டு செய்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ 200 நொடிகள் ஓடக்கூடியது. (3.20 நிமிடம்)

அந்த வீடியோவை இணைத்துள்ளோம் பாருங்கள்….

கமல் – விஜய் – அஜித்…. ஆளுக்கொரு பண்டிகை…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வருடம் தன் ரசிகர்களுக்காக மூன்று படங்களை கொடுத்தார் கமல்.

இவ்வருடம் விஸ்வரூபம் மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய இரண்டு படங்களை கொடுக்கவிருக்கிறார்.

இதில் விஸ்வரூபம் படத்தை தீபாவளி வெளியீடாக கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் கம்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் மட்டும் மீதமுள்ளதால், விரைவில் அதை முடித்துவிடுவோம் என ஆஸ்கார் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறாராம்.

இதனை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி-60’ படத்தை அடுத்த வருடம் 2017 பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் பின்னணி நெல்லை மாவட்டம் என்பதால் அங்கே சூட்டிங் நடத்தவிருந்தனர்.

தினமும் விஜய் ரசிகர்களின் கட்டுங்கடங்காத கூட்டம் கூடியதால், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அதே போன்று செட் போட்டு நடத்தி வருகிறார்களாம்.

இதனையடுத்து சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள தல 57 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

பெரும்பாலும் இதன் படப்பிடிப்பை ஜார்ஜியா, பல்கேரியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலேயே நடத்த இருக்கிறார் இயக்குனர்.

திரில்லர் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் இந்திய உளவாளியாக நடிக்கிறார் அஜித்.

நாயகிகளாக அனுஷ்கா மற்றும் ‘இறுதிச்சுற்று” ரித்திகா சிங் நடிக்கிறார்கள். ரித்திகாவுக்கு போலீஸ் அதிகாரி வேடம் என கூறப்படுகிறது.

இப்படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் 14-ம் தேதி (தமிழ்ப் புத்தாண்டு) அன்று திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows