ஸ்டாலினுடன் இணைந்து கொண்ட ரஜினிக்கு நன்றி..; உதயநிதி கிண்டல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி அதிக நேரம் கடை திறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சிறைக்கு அழைத்து சென்று கொடூரமாக போலீசார் தாக்கினர்.

இந்த தாக்குதலால் இருவரும் உயிரிழந்தனர்.

மதுரை ஐகோர்ட் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று ரஜினிகாந்த்..

“தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது” என்று கூறி #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் பதிவிட்டார்.

இதனையடுத்து ரஜினியின் ட்வீட்டை குறிப்பிட்டு நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

“தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் ‘பல’ நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதிகிடைக்க தமிழக முதல்வரை எழுப்பும் தலைவர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

ரஜினியின் கருத்தை போல பலர் இதுவரை சொல்லி வந்துள்ளனர். ஆனால் அவர்களை பற்றி உதயநிதி எதையும் சொல்லவில்லை.

ஆனால் ஸ்டாலினுடன் தன்னை இணைத்துக் கொண்டதாக ரஜினியை கிண்டல் செய்யும் உதயநிதி இப்படி ட்வீட் செய்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தனுஷின் பிறந்தநாளில் ரகிட ரகிட பாடல்…; ஜகமே தந்திரம் அப்டேட்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேட்ட படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம்.

இப்படத்தில் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

கடந்த மே 1-ம் தேதி ஜகமே தந்திரம் படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் செய்யப்படவில்லை.

இந்நிலையில் தனுஷின் பிறந்தநாள் அன்று ஜூலை 28-ம் தேதி ரகிட ரகிட என்ற பாடல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

விஜய் படங்களை பார்த்ததே இல்லை. அவரின் வளர்ச்சி தெரியாது; நெப்போலியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வில்லன், ஹீரோ என பல படங்களில் நடித்தவர் நடிகர் நெப்போலியன்.

மேலும் அரசியலில் நுழைந்து சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் இவர்.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அவர் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

இவரின் புதிய படமான டெவில்ஸ் நைட் என்ற ஹாலிவுட் படம் கனடாவில் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. மற்ற நாடுகளிலும் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து வீடியோ பேட்டியளித்துள்ளார் நெப்போலியன்.

அப்போது நெப்போலியனிடம் போக்கிரி படத்தில் விஜய்க்கும் உங்களுக்குமிடையே என்ன பிரச்சினை நடந்தது என்று கேள்வி கேட்டுள்ளனர்.

14 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம். அதை நான் சொல்ல விரும்பவில்லை.

பிரபுதேவா கேட்டு கொண்டதால் அந்த படத்தில் நடித்தேன்.

ஷாட் முடிந்து வெளியே வரும் போது அந்த சம்பவம் நடைபெற்றது. அந்த மாதிரி ஒரு சூழ்நிலை யாருக்கும் வரக்கூடாது.

அப்படி யாரும் என்னிடம் பேசியதில்லை. அதிலிருந்து அவரிடம் பேசுவதில்லை. அதன் பின்னர் விஜய் படங்களை நான் பார்த்ததே இல்லை. சினிமாவில் அவருடைய வளர்ச்சி குறித்து எனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் போலீஸ் ரேவதியின் துணிச்சலுக்கு ஜிவி. பிரகாஷ் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தை மகன் இருவரும் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

எனவே மதுரை ஐகோர்ட் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்துவருகிறது.

உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது.

அதன் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை தொடரலாம். டிஜிபியின் உத்தரவிற்காக காத்திருக்காமல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக விசாரணையை கையிலெடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டுள்ளது.

“சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக் காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியதில், ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய கடுமையாக தாக்கியதையும், இதனால் காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக்கறை ஏற்பட்டதையும் தெரிவித்தார்.

தலைமைக் காவலர் ரேவதி சாட்சியம் அளிக்கும் போது மிகுந்த பயத்திலேயே இருந்துள்ளார்.

காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் விசாரணையை வீடியோ எடுத்தும் வாக்குமூலம் கொடுத்த ரேவதியை மிரட்டும் தொனியிலும் ஈடுபட்டனர்.

எனவே ரேவதி கடைசியில், வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

மிகவும் சிரமப்பட்டே கையெழுத்தை பெற முடிந்தது” என்று நீதித்துறை நடுவர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் காவலர் ரேவதிக்கு ஜிவி. பிரகாஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில், “நீதி வென்றிட யாருக்கும் அஞ்சிடாத நெஞ்ச துணிவோடு உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலைவணங்குகிறேன். உங்களோடு தேசம் துணை நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

BREAKING #சத்தியமா_விடவே_கூடாது.; போலீசை கண்டித்து ரஜினி ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இருவரும் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குடும்பத்தினரிடம் சில தினங்களுக்கு முன்பு ரஜினி போனில் பேசியிருந்தார். தற்போது காவலர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

அவரது ட்விட்டரில் பதிவில்…

தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்த கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது.

#சத்தியமா_விடவே_கூடாது. என பதிவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

Rajinikanth slams TN Police for Sathankulam incident

https://twitter.com/rajinikanth/status/1278215149204062208

போன மாசம் ரூ 6000; இப்போ ரூ. 50000.. மின்கட்டணத்தால் ஷாக்கான காலா நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் பிரபலமான நடிகை ஹீமா குரேஷி.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் காலா படத்தில் நடித்திருந்தார். முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவரது வீட்டிற்கு வந்துள்ள மின் கட்டணம் குறித்து கடும ஷாக்காகியுள்ளார்.

அதாவது ரூ. 50 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளதாக சமூக வலை தளத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை 6 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் செலுத்திய தமக்கு இந்த முறை 50 ஆயிரம் மின் கட்டணம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கோலிவுட்டில் நடிகர் பிரசன்னா இதுபோல மின்கட்டணம் குறித்த தன் கருத்தை தெரிவித்து அதன் பின் பல்டி அடித்தார்ர் என்ற கதை தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows