சின்னத்திரை டூ வெள்ளித்திரை..; சிவகார்த்திகேயன் வழியில் சித்தார்த் குமரன்

சின்னத்திரை டூ வெள்ளித்திரை..; சிவகார்த்திகேயன் வழியில் சித்தார்த் குமரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தற்போதைய காலகட்டத்தில் சின்னத்திரையில் புகழ் பெறும் நடிகர்களும் வெள்ளித்திரையிலும் கொடி நாட்டி வருகிறார்கள்.

மக்களும் தங்கள் சொந்தங்களை போல் அவர்களை கொண்டாடுகிறார்கள்.

சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் சமீப காலத்தில் அதற்கு பல உதாரணங்கள் உண்டு.

அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் கோலோச்சும் நடிகர் சித்தார்த் குமரன் கூடிய விரைவில் வெள்ளித்திரைக்கு பயணமாகிறார்.

சின்னத்திரை மூலம் தமிழக மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கும் பிரபல நடிகர் தான் சித்தார்த் குமரன். முதலில் சின்னத்திரையில் ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ் என்று பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை மகிழவைத்தவர்.

பிறகு என் பெயர் மீனாட்சி, ஆபீஸ், சரவணன் மீனாட்சி என்று தொடர்ந்து பல மெகா சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.

பின் “ரெக்க கட்டி பறக்குது மனசு” நெடுந்தொடரில் கதாநாயகனாக ஆழமான ஒரு பாத்திரத்தில், தனது அற்புதமான நடிப்புத்திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.

“அச்சமில்லை, அச்சமில்லை” முதல் பல ரியாலிடி ஷோக்களில் நாயகனாக பலராலும் பாராட்டப்பெற்றார்.

இப்பொழுது Vijay Tvயின் “தேன்மொழி BA” தொடரில் ஜாக்குலினுடன் அழகான ஹீரோவாக hero sir எனும் அடைமொழியில் கலக்கி வருகிறார் சித்தார்த்.

தமிழக மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக கொண்டாடும் அளவு புகழ் பெற்றுள்ள இவர்
கடல் கடந்து, கண்டங்கள் கடந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களிலும் இடம் பிடித்து விட்டார்.

நடிகர் சித்தார்த்துக்கு Sidharth_kumaaran_fanclub என்ற பெயரில் கனடா, அமேரிக்கா, ஐரோப்பா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்ரீலங்காவில் ரசிகர் மன்றங்கள் சில ஆண்டுகளாகவே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் மாடலிங், திரைப்பட, விளம்பர படப்பிடிப்புகளுக்கு மத்தியில் தற்போது வெள்ளித்திரையை நோக்கி சித்தார்த்தின் பயணம் 2021இல் துவங்கியுள்ளது.

மிக விரைவில் இந்த திறமையான, அழகான நாயகனை வெள்ளித்திரையில் ரசிகர்கள் காணலாம்.
www.actorsidharth.com

TV Actor Sidharth Kumaran movie updates

அரசியலுக்கு முற்றுப்புள்ளி..; ஆறு மாசத்துக்கு ‘அண்ணாத்த’ வேண்டாம்.. அமெரிக்கா பறக்கும் ரஜினி.!

அரசியலுக்கு முற்றுப்புள்ளி..; ஆறு மாசத்துக்கு ‘அண்ணாத்த’ வேண்டாம்.. அமெரிக்கா பறக்கும் ரஜினி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு 2020 டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது.

ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்த நிலையில் டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானது.

ஆனாலும் ரத்த அழுத்தம் சீராக இல்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிக்கு உடல்நிலை எப்போது சரியாகிறதோ அப்போது படப்பிடிப்பை தொடங்கிக் கொள்ளலாம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாம்.

இதனிடையில் தன் உடல்நிலை காரணத்தால் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என கடிதம் வெளியிட்டு அறிவித்தார்.

விரைவில் மேற்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருக்கிறாராம் ரஜினி.

மறுபுறம் ரஜினி தன் அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ பட சூட்டிங் 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தான் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெரிகிறது.

Rajini health and Annatthae movie shoot updates

‘வலிமை’ அப்டேட் தந்தா ஓட்டு.. ஆள்பவர் முதல் ஆட்டோ வரை விடாத அஜித் ரசிகர்கள்..; இதுக்கு இல்லையா சார் ஒரு என்ட்டு.?

‘வலிமை’ அப்டேட் தந்தா ஓட்டு.. ஆள்பவர் முதல் ஆட்டோ வரை விடாத அஜித் ரசிகர்கள்..; இதுக்கு இல்லையா சார் ஒரு என்ட்டு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

இந்த படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித்.

இது போன்ற சில தகவல்கள் மட்டுமே வெளியே தெரிய வந்துள்ளது.

எனவே அஜித் ரசிகர்கள். அப்டேட் தராத போனி கபூரை கண்டித்து வால் போஸ்டர் கூட ஒட்டி வந்தனர்.

சில தினங்களுக்கு முன் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூட ‘வலிமை அப்டேட் கேட்டு சொல்லுங்க, உங்களுக்கு ஓட்டு போடுறோம் என ஒரு சில அஜித் ரசிகர்கள் கோஷம் போட்டனர்.

நாட்டு பிரச்னைகளை பேசாமல் இதையா முதல்வர் கிட்ட கேட்பீங்க என அங்கிருந்தவர்களே பேசினர்.

இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் ‘வெயிட்டிங் ஃபார் வலிமை அப்டேட்’ என தனது ஆட்டோவில் வாசக ஸ்டிக்கரை ஒட்டியுள்ளார்.

இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் முடியும் வரை வலிமை அப்டேட் & ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம் என அஜித் சொன்னாராம்.

ஆனால் இந்த தகவலை படக்குழு உறுதிப்படுத்தவில்லை.

வலிமை அப்டேட் வரவில்லை என்றால் இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ அஜித் பேஃன்ஸ்? தெரியலையே…

Valimai updates and Ajith fans atrocity

திரையரங்கே கோயில்… ஓடிடி பூஜை அறை.; அரசியல் குறித்து பேச மறுப்பது பயமில்லை.. – சசிகுமார்

திரையரங்கே கோயில்… ஓடிடி பூஜை அறை.; அரசியல் குறித்து பேச மறுப்பது பயமில்லை.. – சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பொங்கல் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சுப்ரமணியபுரம் இயக்குநர் நடிகர் சசிக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அவருக்கு சங்கம் சார்பில் பாராட்டு மடல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் சசிகுமார் பேசுகையில்…

இந்த விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை நான் கிராமத்தில் பிறந்து இப்போதும் அங்கேயே வாழ்ந்து வருவதால் அந்த மண் மணம் குறையாமல் இன்றளவும் அத்தனை பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம்.

இன்றைக்கும் கூட பொங்கல் பண்டிகை என்றால் எங்கள் வீட்டு மாட்டு தொழுவத்தில் தான் பொங்கல் வைத்து வணங்குவது வழக்கம் பரம்பரை பரம்பரையாக இன்னமும் அந்த பழக்கத்தை மாற்ற வில்லை.

கொரோனா பலரது வாழ்க்கை யிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது அதை மறுக்க முடியாது.

என்னைப் பொறுத்தவரை திரையரங்கில் பார்க்கும் சினிமா என்பது கோவிலில் இருக்கும் சாமியை பார்ப்பதற்கு சமம்.

OTT என்பது வீட்டில் இருக்கும் பூஜை அறை போல…. வீட்டில் இருக்கும் சுவாமியை தினம்தினம் பூஜித்தாலும் கோயிலுக்கு போகும் போது ஏற்படும் மகிழ்ச்யை போல சினிமாவை திரையரங்கில் கண்டு களிப்பது தான் ரசிகனாகவும் கலைஞனாகவும் நான் விரும்புகிறேன்.

எனது அடுத்த படங்களாக ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய் உட்பட படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

அடுத்ததாக தொரட்டி இயக்குனர் மாரிமுத்து இயக்கத்திலும், இயக்குனர் விருமாண்டி இயக்கத்திலும் நடிக்க இருக்கிறேன்.

சுப்ரமணியபுரம் ஆரம்பித்த காலத்திலிருந்து இப்போது வரை பத்திரிக்கையாளர்களின் பங்கு என் வாழ்வில் எப்போதும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

சினிமா உள்ளவரை பத்திரிக்கையாளர்களும் நிச்சயம் இருப்பார்கள்.

அவர்களுக்கு நான் நிறைய கடமை பட்டிருக்கிறேன். இப்போதும் நான் மாணவன் தான். ரொமான்ஸ் என்றாலே கொஞ்சம் கூச்சமா தான் இருக்கிறது. எனினும் அடுத்தடுத்த படங்களில் நிச்சயம் மாற்றிக் கொள்வேன்.

அரசியல் குறித்து பல நடிகர்கள் பேசுவதில்லை என என்னிடமும் ஏன்? என சிலர் கேட்பதுண்டு. இது ஏதோ பயமோ அல்லது ஒதுங்கிப் போகும் எண்ணமோ கிடையாது. எங்களுக்கு பின்னால் பலரின் வாழ்க்கையும் பெரும் தொகையும் இதில் அடங்கியுள்ளது.

ஏதேனும் ஒரு வார்த்தையை விட்டு விட்டு அதனால் எங்களை சேர்ந்தவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதாலேயே நடிகர்கள் கவனமாக இருக்கிறார்கள் அவ்வளவே.

மேலும் இந்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பொங்கல் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

OTT is Home Pooja room but Theatres were Temple says Sasikumar

விஜய் & சிம்புக்கு லெட்டர்.: இப்படியொரு விளம்பரம் தேவையா டாக்டர் சார்..? காண்டான ‘காட்டேரி’ பட டைரக்டர்.!

விஜய் & சிம்புக்கு லெட்டர்.: இப்படியொரு விளம்பரம் தேவையா டாக்டர் சார்..? காண்டான ‘காட்டேரி’ பட டைரக்டர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1610253173325பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு விஜய் நடித்த மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளது.

அந்த சமயத்தில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தது தமிழக அரசு.

மூடப்பட்ட திரையரங்குகளில் கொரோனா தொற்று வேகமாக பரவும் என பலரும் எச்சரித்த நிலையில் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் விஜய் மற்றும் சிம்புவுக்கு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டார்.

அந்த கடிதத்தில்…, “விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு… “நாங்கள் அனைவரும் சோர்வாக உள்ளோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான டாக்டர்கள் சோர்வாக இருக்கிறார்கள். சுகாதாரத் துறை ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர்.

நாங்கள் ஹீரோக்கள் இல்லை. எங்களுக்கும் மூச்சுவிட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.

ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை.” என விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் ‘காட்டேரி’ பட இயக்குநர் டிகே என்பவர் இது குறித்து கூறியதாவது…

“ஏ.சி. உள்ள பார்கள் மற்றும் கிளப்புகள் எல்லாம் திறக்கப்பட்டபோது இந்த டாக்டர் ஏன் கடிதம் எழுதவில்லை என்று வியக்கிறேன்.

சினிமாவை தாக்கிப் பேசினால் 15 நிமிடத்தில் எளிதில் பிரபலமாகவிடலாம் என்பதால் தான்” என பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார்.

Katteri movie Director Condemns Doctor on Vijay Simbu letter issue

 

 

JUST IN சினிமா தியேட்டர்களில் 50% சீட் அனுமதி..; ஸ்பெஷல் ஷோ போட்டுக்கலாம்.. தமிழக அரசின் தடாலடி சலுகை

JUST IN சினிமா தியேட்டர்களில் 50% சீட் அனுமதி..; ஸ்பெஷல் ஷோ போட்டுக்கலாம்.. தமிழக அரசின் தடாலடி சலுகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் 17ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு நவம்பர் 10 முதல் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது.

50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டது.

எனவே இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும் இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்தும் தியேட்டர்கள் இயங்கி வந்தன.

இதனால் சிறிய படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீசாகின.

இந்த நிலையில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என விஜய், சிம்பு உள்ளிட்ட திரையுலகினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்

இவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

சினிமா தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுடன் படங்கைளை பார்க்க தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது.

திரையரங்கு என்பது மூடிய அரங்கு என்பதால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும் மத்திய அரசும் தமிழக அரசின் உத்தரவை கண்டித்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது 100% அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு.

ஆனால் சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி அளித்துள்ளது.

பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் & சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் தியேட்டர்களில் ரிலீசாகிறது.

TN government announced only 50% occupancy till next announcement

More Articles
Follows