தானா சேர்ந்த கூட்டத்தால் விஜய்யை முந்திய சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தன் பிறந்தநாளை கடந்த ஜீலை 23ஆம் தேதி கொண்டாடினார்.

எனவே அவர் நடிப்பில் உருவாகிவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இப்பட போஸ்டரை 62K அதிகமானோர் ரிட்வீட் செய்துள்ளனர்.

இதற்கு முன்பு விஜய் வெளியிட்ட அவரது மெர்சல் போஸ்டர்களை பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை 51k மற்றும் 42k பேர் மட்டுமே ரிட்வீட் செய்துள்ளனர்.

இதனால் விஜய்யை விட சூர்யா முந்திவிட்டார் என கூறப்படுகிறது.

ஆனால் சூர்யாவை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ட்விட்டர் பின் தொடர்கின்றனர்.

விஜய்யை 12 லட்சம் பேர் மட்டுமே பாலோ செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TSK first look broke Mersal retweet records

பெப்சி இல்லாம சூட்டிங் நடத்துங்க; பாத்துப்போம்… விஷால் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சினிமா சூட்டிங் என்றால் அதில் மிக முக்கியமானவர்கள் தொழிலாளர்கள்தான்.

இவர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விதிமுறைகள் அமைத்து செயல்படும் அமைப்பே பெப்சி.

தயாரிப்பாளர்களுக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்துக்கும் (பெப்சி) இடையே, 3 ஆண்டுக்கு ஒரு முறை புதிய சம்பளம் நிர்ணயிப்பது வழக்கம்.

ஆனால் கடந்த முறை நியமித்த புதிய சம்பள விகிதம் குறித்து ’பெப்சி’யில் உள்ள சில சங்கங்களுக்குள் பிரச்னைகள் நிலவி வருகிறது.

எனவே அவ்வப்போது சில படங்களின் சூட்டிங்கின் போது படப்பிடிப்புகள் திடீரென நிறுத்தப்படும்.

பின்னர் சமாதானம் ஆகி சூட்டிங் நடைபெற்று வருவது வாடிக்கையானது.

ஆனால் இப்பிரச்சினை விவகாரங்கள் விஸ்வரூபம் எடுக்கவே தயாரிப்பாளர்களின் அவசரக் கூட்டம் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் தலைமையில் நடைபெற்றது.

கூட்டம் முடிந்தபின்னர் விஷால் கூறியதாவது…

’ஊதிய பிரச்சினையை காரணம் காட்டி சூட்டிங்கை நிறுத்த பெப்சி ஊழியர்களுக்கு அதிகாரம் இல்லை.

ஊழியர்கள் மீது எப்போதும் மரியாதை உள்ளது. ஆனால் தயாரிப்பாளர்களை அவமானப்பட அனுமதிக்க மாட்டோம்.

எனவே பெப்சி அமைப்பில் இல்லாத தொழிலாளர்களை வைத்து இனி சூட்டிங்கை நடத்திக் கொள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது’ என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவால் திரையுலகில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

Producer Council President Vishal decision on FEFSI

எங்களின் அசுர உழைப்பை ‘விவேகம்’ காட்டும்… அக்ஷராஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விவேகம்.

இப்படம் பற்றி கமலின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் கூறியதாவது…

”இயக்குனர் சிவா சார் என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த பொழுது, அது என்னை உடனே கவர்ந்தது.

அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவமும், கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் கருவியாகவும் அது இருந்தது.

பல பரிமாணங்கள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அஜித் சாருடன் பணி புரிந்தது ஒரு அருமையான அனுபவம்.

தான் ஒரு மிகப்பெரிய ஸ்டார் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் எல்லோர்க்கும் உதவியாக இருப்பார்.

எங்கள் இருவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம் என்பதால் அதனை பற்றி ஷூட்டிங் இடைவேளைகளில் நிறைய பேசினோம்.

பல்கேரியா மற்றும் செர்பியாவின் கடும் குளிரிலும் உறையும் பணியிலும் இப்பட குழுவினர் மிகக்கடுமையாக உழைத்தனர்.

அந்த அசுர உழைப்பின் பலனை மக்கள் விரைவில் திரையில் காணப்போகின்றனர்.

‘விவேகம்’ படத்தின் ரிலீஸை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

Vivegam movie will say our hardwork says Aksharahassan

பாகிஸ்தானிலும் அஜித் பாட்டு ஹிட்டு; அனிருத் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்-அனிருத்-சிவா இணைந்த வேதாளம் படம் இரண்டு ஆண்களுக்கு முன்பு வெளியானது.

இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் இன்று வரையிலும் ஏதாவது ஒரு இடத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு புருனே நாட்டு இளவரசி இப்பாடலை விரும்பி பார்த்து கேட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்த்து தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இப்பாடல் தற்பாது பாகிஸ்தானிலும் பட்டைய கிளப்புகிறதாம்.

பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல எஃப்எம்மில் பணிபுரியும் ஆர்ஜே அட்லீல் கான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஆலுமா டோலுமா’ அருமையான பாடல்.

எனக்கு ஒரு வார்த்தை கூட புரியவில்லை. ஆனால் கேட்க கேட்க சந்தோஷமாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

அவரது அந்த டுவிட்டை ரீடுவிட் செய்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

அத்துடன் ‘இசைக்கு மொழியே கிடையாது’ எனவும் பதிவிட்டுள்ளார் அனிருத்.

In Pakistan also Vedhalam movie song Aaluma Doluma goes viral

Anirudh Ravichander Retweeted
RJ Adeel Khan‏ @rj_adeel
@anirudhofficial Aaluma Doluma is an amazing song! Even I can’t understand a single word but enjoying! From PAKISTAN

விஜய் விக்ரம் இயக்கத்தில் டிராபிக் ராமசாமியாக எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற சமூக பிரச்சனைகளை இயக்கியவர் புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

இவர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து இயக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

ஆனால் இப்படத்தை விஜய் விக்ரம் என்பவர் இயக்க, எஸ்ஏசி நடிக்க மட்டும் செய்கிறாராம்.

தமிழக மக்களின் நலனிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது நல வழக்குகளை தொடர்ந்தவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி.

இவரது பல வழக்குகள் மக்களுக்கு சாதகமான தீர்ப்புகளை பெற்று தந்துள்ளது.

எனவே இவரால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள், ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இவரை தாக்க முயற்சித்துள்ளனர்.

ஆனால் எதையும் பொருட்படுத்தாமல், இன்றும் மக்களுக்காக போராடி வருகிறார்.

இப்படம் பற்றி இயக்குனர் விஜய் விக்ரம் கூறுகையில்…

இப்படம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுப்பதால் பல திருப்புமுனை சம்பவங்களும், திருப்பங்களும் எதார்த்தமாவே அமைந்திருக்கிறது.

இந்த படம் திரைக்கு வரும்போது சமூகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. இப்படத்தை கிரீன் சிக்னல் பட நிறுவனம் தயாரிக்கிறது.” என்றார்.

SA Chandrasekaran act in Traffic Ramasamy biopic

மூன்று ஹீரோயின்களுடன் ‘தடம்’ பதிக்கும் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டிய அருண்விஜய் அவர்கள் குற்றம்-23 படத்தில் மீண்டும் தன் ஹீரோயிசத்தை நிரூபித்தார்.

தற்போது ‘மீகாமன்’ பட இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் தடம் படத்தில் நடித்து வருகிறார்.

இதன் சூட்டிங்கின்போது அருண்விஜய்க்கு காலில் சிறு விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இப்படத்தில் இவருடன் 3 நாயகிகள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தெலுங்கில் ஜெகபதி பாபுவுடன் ‘பட்டேல் S.I.R.’ படத்தில் நடித்த தன்யா ஹாப் மற்றும் புதுமுகம் ஸ்மிரிதி ஆகியோர் நடிக்கின்றனர்.

மூன்றாவது நாயகியாக ‘சைவம்’ படப்புகழ் வித்யா நடிக்கிறார்.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஒவ்வொரு நாயகியாக இணைவார்கள் என கூறப்படுகிறது.

அருண் ராஜ் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

‘குற்றம்-23’ தயாரிப்பாளர் இந்தர்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

இவர் தற்போது ‘கொடிவீரன்’ படத்தில் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

3 heroines romance with Arun Vijay in Thadam movie

More Articles
Follows