ரஜினியின் பேட்ட ரிலீசில் சிக்கல்..; பிரபல தயாரிப்பாளர் புலம்பல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019ஆம் வருடம் பிறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது.

இந்த வருடப் பொங்கலுக்கு தமிழில் ரஜினியின் ‘பேட்ட மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு பெரிய படங்கள் ரிலீசாகின்றன.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை போல தெலுங்கில் சங்க்ராந்தி கொண்டாடப்படுகிறது.

அந்த பண்டிகையை முன்னிட்டு ‘என்டிஆர், வினய விதேய ராமா, எப் 2’ ஆகிய மூன்று பெரிய படங்களும் அங்கு வெளியாகவுள்ளன.

தெலுங்குகிலும் ரஜினிக்கு நல்ல மார்கெட் உள்ளதால் பேட்ட திரைப்படத்தை அங்கும் வெளியிடுகின்றனர்.

ஆனால் அங்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை அங்கு வெளியிடும் பிரபல தயாரிப்பாளர் அசோக் வல்லபனேனி இது குறித்து நேற்று நடந்த ‘பேட்ட’ தெலுங்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் புலம்பியிருக்கிறார்.

மூன்று பெரிய படங்களும் அதிக அளவில் தியேட்டர்களைப் பிடித்துக் கொண்டார்கள் என அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதனால் வேறு வழியின்றி மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

கனா ஹீரோவின் 2வது படத்திற்கு இசையமைக்கும் அனிருத் & விவேக்-மெர்வின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரித்த ‘கனா’ படத்தில் அப்பாவியான புன்னகை, யதார்த்தமான நடிப்பு, பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் போன்றவை மூலம் அனைவரின் மனதிலும் பதிந்தவர் நடிகர் தர்ஷன்.

இந்த படத்தையும், இதை வெற்றி படமாக்க உழைத்த ஒவ்வொரையும் மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

நடிகர் தர்ஷன் மட்டும் விதிவிலக்கல்ல. தர்ஷன் தற்போது இளைஞர்கள் மட்டுமல்லாமல், அனைத்து வயதினருக்கும் பிடித்த ஒருவராக மாறியிருக்கிறார்.

இந்நிலையில் ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP & ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கான கலை அரசு மற்றும் சுரேகா நியாபதி தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

‘ப்ரொடக்‌ஷன் நம்பர் 1’ என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஹரிஷ் ராம் LH இயக்குகிறார்.

அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இந்த படத்துக்கு இசையமைப்பது அனைவரின் கவனத்தையும் படத்தின் மீது திசை திருப்பியிருக்கிறது.

நகைச்சுவையான குடும்ப சாகச பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படத்தின் நாயகன் கதாபாத்திரத்துக்கு தர்ஷன் மிக பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியதால் தயாரிப்பாளர்கள் அவரை நாயகனாக்கி இருக்கிறார்கள்.

“குறிப்பாக கனாவில் அவரது குளிர்ச்சியான, எளிமையான, கவரும் நடிப்பை பார்த்த பிறகு, இந்த கதாபாத்திரத்துக்கு அவர் உயிர் கொடுக்க அவர் தான் சரியாக இருப்பார் என்று உணர்ந்தோம்” என்கிறார் இயக்குனர் ஹரிஷ் ராம் LH.

அறிமுக இயக்குனரான இவர் இதற்கு முன்பு இயக்குனர் துரை செந்தில்குமாரின் எதிர் நீச்சல், காக்கி சட்டை மற்றும் கொடி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

தங்களின் மாயாஜால இசையால் இளைஞர்களை மயக்கியிருக்கும் அனிருத் மற்றும் விவேக்-மெர்வின் இசையமைத்திருப்பதால், இந்த படம் ஒரு இசை விருந்தாக இருக்கும் என தெரிகிறது.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உதவியாளர் நரேன் இளன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கலைவாணன் (படத்தொகுப்பு), நூர் (ஸ்டண்ட்ஸ்), ராம் ராகவ் மற்றும் பிரபாகரன் AR (உரையாடல்), வாசுகி பாஸ்கர் & பல்லவி சிங் (ஆடை வடிவமைப்பு), ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி (ஒலி வடிவமைப்பு) டி உதயகுமார் & வினய் ஸ்ரீதர் (ஆடியோகிராஃபி) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

இந்த படத்தில் நிறைய VFX காட்சிகள் இருப்பதால், VFX உலகின் மிகப்பெரிய திறமையாளர்களான வில்லவன் கோதை G, (VFX கிரியேட்டிவ் இயக்குநர்), ரெங்கராஜ் J (VFX இயக்குனர்) மற்றும் சந்திரமோகன் J (VFX தயாரிப்பாளர்) ஆகியோரை படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

சுரேஷ் காமாட்சியின் மிக மிக அவசரம் படத்திற்கு தனஞ்செயன் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீபிரியங்கா நடிப்பில் சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ள படம் மிக மிக அவசரம்.

ஜகன்நாத் என்பவர் கதை எழுதியுள்ளார். இப்படத்தில் பெண் காவலர்களின் நிலை குறித்து பேசப்பட்டுள்ளது.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை பிரபலங்கள் பலரும் பார்த்துள்ளனர்.

இப்படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

அனைருவருக்கும் விருப்பமான நல்ல கருத்துடன் மிக மிக அவசரம் படத்தை சுரேஷ் காமாட்சி உருவாக்கியுள்ளார்.

படம் ரிலீசாவுடன் அனைவரின் பாராட்டும் படத்திற்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

இப்படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய க்ராஸ்ரூட் பிலிம்ஸ் பேனரில் மிக மிக அவசரம் படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது

ராயல்டி தொகையில் ஒரு பகுதியை 2 சங்கங்களுக்கு வழங்கும் இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது.

அதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த மகேந்திரா வோர்ல்டு சிட்டிக்கும், மகேந்திரா வோர்ல்டு ஸ்கூல்-க்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும், அனைத்து தமிழ் திரையுலகம் சங்கம் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த மாமேதை இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்திய திரையுலகம் சார்பாக விழா எடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்நிகழ்ச்சி 2019 பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது சாதாரணமான நிகழ்ச்சி அல்ல. மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளோம்.

ஆகையால், அதற்கான வேலைகள் நிறைய உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் கடின உழைப்பு தேவைப்படுகிறது. அதனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ‘பெப்சி’ சார்பாக ஆர்.கே.செல்வமணி ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறார்.

முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பிரபலங்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடவிருக்கிறார்கள்.

இரண்டாவது நாள் இளையராஜா பாடவிருக்கிறார்.

இந்நிகழ்ச்சி மூலம் இளையராஜாவை பெருமைப்படுத்துவதைத் தாண்டி, அவரால் வரும் நிதியைக் கொண்டு தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர்களின் நலனுக்கு பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

அதேபோல், அவருக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை இசை சங்க அறக்கட்டளைக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கும் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்.

அதற்கான ‘MO’ -வில் கையெழுத்திடவிருக்கிறோம். விரைவில் அதுசார்ந்த செய்திகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.

மற்ற இசையமைப்பாளர்களும் வரவிருக்கிறார்கள். அதேபோல், அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம்.

ஏ.ஆர்.ரகுமான் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரையும் நேரில் சென்று அழைப்போம். அவர்களும் வருவார்கள் என்று நம்புகிறோம்.

ரஜினி, கமல் இருவருக்கும் விண்ணப்பம் வைத்திருக்கிறோம். பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகள் திரைப்பட துறையில் இருக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பிற்கு விடுமுறை அறிவித்திருக்கிறோம்.

யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என்பதை பற்றி விபரம் ஜனவரி 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.

இந்நிகழ்ச்சி பிப்ரவரி 2ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும். இரண்டு நாட்களும் இதே நேரம் தான் இருக்கும். இதற்கான டிக்கெட் தொகைக்கான ஒப்பந்தம் பற்றி ‘bookmyshow’ – வுடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.

ரூ.500 லிருந்து ரூ.25000 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இரண்டு நாட்களுக்கு சீசன் பாஸ்-ம் இருக்கிறது.

இவ்வாறு தலைவர் விஷால் கூறினார்.

Vishal talks about Ilayaraaja 75 event and Ilayaraaja songs royalty amount

மணிகர்னிகா-ஜான்சியின் ராணி பட சென்னை பிரஸ் மீட்டில் கங்கனா ரனாவத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கமல் ஜெயின் இணைந்து மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் திரைப்படம் “மணிகர்னிகா – ஜான்சியின் ராணி”.

ராதாகிருஷ்ணா ஜாகர்லமுடி மற்றும் கங்கனா ரனாவத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ராணி மணிகர்ணிகாவாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்.

அங்கிதா லோகண்டே, ஜீஷூ சென்குப்தா, டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் வரும் ஜனவரி 25ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

ஜான்சியின் ராணி, லக்‌ஷ்மி பாய் கதை சினிமாவில் சொல்லப்பட வேண்டிய ஒரு கதை. 2017 தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறோம். கங்கனா ரனாவத் இந்த கதையின் நாயகியாக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் மிகவும் பொருத்தமான தேர்வு.

ராணி லக்‌ஷ்மி பாய் தேசிய அளவில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு ராணி. அதனால் இந்த படத்தை தென்னிந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட முடிவு செய்தோம்.

மேலும் தமிழ், தெலுங்கு என்பது இந்திக்கு அடுத்து மிகப்பெரிய மார்க்கெட்டை கொண்டிருக்கிறது, கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகச்சிறப்பாக வந்திருக்கின்றன என்றார் தயாரிப்பாளர் கமல் ஜெயின்.

”தேசபக்தி பற்றிய ஒரு கதையில் நான் நடிக்கும் முதல் படம். 12 வருடங்களாக இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்கவில்லையே என வருத்தம் இருந்தது.

இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளான விஜயேந்திர பிரசாத், டேனி டென்சாங்போ, அதுல் குல்கர்னி உட்பட பல முக்கியமான திறமையாளர்களுடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த படம் தொடங்கிய போது என் உடல் எடை 50 கிலோ. மிகவும் ஒல்லியாக இருந்தேன். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும் போது என்னுடைய உடல் அதற்கு உகந்ததாக இல்லை என என் சண்டைப்பயிற்சியாளர் கூட சொன்னார்.

தினமும் 10-12 மணி நேரம் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கேற்ற வகையில் நிறைய சிரமம் இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டன.

அதன் பிறகு தான் நான் படத்தை இயக்கினேன். நான் டிராமா காட்சிகளை தான் இயக்கினேன். நான் நிறைய நேரம் எழுத்தாளர்களுடன் செலவு செய்திருக்கிறேன், அது எனக்கு உதவிகரமாக இருந்தது.

காட்சிகளை படம் பிடிப்பது எளிதாக இருந்தது, ஆனால், என்ன காட்சிகளை எடுக்க வேண்டும், அதற்கு தயாராவது தான் சவாலாக இருந்தது.

அதே போல ராணி லக்‌ஷ்மி பாய் கதாப்பாத்திரம் நாம் நடிக்கும் வழக்கமான ஒரு கதாப்பாத்திரம் போன்றது அல்ல.

அதை செய்ய எனக்கு நிறைய நம்பிக்கை தேவைப்பட்டது, அர்ப்பணிப்பு தேவைப்பட்டது, அனைத்து மொழி மக்களையும் இந்த கதை சென்றடையும் என நம்புகிறேன்.” என்றார் நாயகி.

Bollywood Actress Kangana Ranaut at Chennai Manikarnika Movie Press Meet

கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் காசுக்காக இப்படி செய்யலாமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்களை எப்போதுமே வாட்டும் விஷயங்களில் மிக மிக முக்கியமானது விலைவாசி உயர்வு தான்.

தினம் தினம் பெட்ரோல் விலை உயர்வதால் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தினம் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது.

இதனால் எதிர்க்கட்சிகள் இந்த குற்றச்சாட்டை வைத்தே அரசியல் செய்து வருகின்றனர்.

அரசியலுக்கு வரும் புதுமுகங்களும் இந்த குற்றச்சாட்டை கூறாமல் இருப்பது இல்லை.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஸ்டார் விஜய் டிவி விளம்பரத்தில் கேபிள் டிவி சந்தா கட்டணம் குறைவாக இருப்பதாக கூறி இன்னும் அதிக விலைக்கு விற்கலாமே என சொல்வதாக காட்சிகள் உள்ளது.

பொதுவாக பேரம் பேசி பணத்தை குறைக்கச் சொல்வோம். ஆனால் கடைக்காரர் பசுபதி விலை குறைவாக சொன்ன போதும், அதற்கு அதிக பணம் தருவதாக கமல் சொல்வது போல் விளம்பரம் உள்ளது.

அது விளம்பரம் தான் என்றாலும் மக்களே விலைவாசி உயர்வால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது, மக்கள் பிரச்சினையை பேசும் கமல், காசுக்காக இப்படி பேசலாமா? என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

KamalHaasans Vijay Star Value Pack Promo in controversy

More Articles
Follows