த்ரிஷாவுக்கு வருமானத் துறை அபராதம்; ரத்து செய்தது ஐகோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை திரிஷா கடந்த 2010-11-ம் நிதி ஆண்டில் ரூ.89 லட்சம் வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியிருந்தார்.

அவர் கூடுதலாக ரூ.3.52 கோடி வருமானத்தை ஈட்டியதாக வருமானவரித்துறை ஆய்வில் தெரியவந்தது.

தவறான கணக்கு காண்பித்து ஏமாற்றியதாக திரிஷாவுக்கு ரூ.1.16 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை உத்தர விட்டது.

இதனை எதிர்த்து நடிகை திரிஷா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த விசாரணையில் திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை முழுமையாக ரத்து செய்யப்பட்டு தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

த்ரிஷா 3.52 கோடி ரூபாய் வருமானத்துக்கு கணக்கு காட்டி இருப்பதாகவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் படத்தை முடித்துவிட்டு ரஜினியை இயக்கும் ஏஆர். முருகதாஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார்.

எனவே படங்களில் நடிக்க மாட்டார் என எல்லாரும் நினைத்திருந்த நிலையில், திடீரென கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

தற்போது அதன் சூட்டிங்குக்காக மேற்கு வங்கத்தில் இருக்கிறார் ரஜினி.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையைமக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தை முடித்துவிட்டு ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் ரஜினி.

இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அல்லது சன் பிக்சர்ஸ் தயாரிக்கக்கூடும் என கிசுகிசுக்கப்படுகிறது.

தன் அரசியல் வருகையையொட்டி ஒரு பிரம்மாண்ட படத்தை கொடுத்து விட்டு பின்னர் கட்சிப் பணிகளில் தீவிரமாக பணியாற்றவிருக்கிறாராம் ரஜினிகாந்த்.

2021ல் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலையே ரஜினி குறி வைத்திருப்பதால் அதற்குள் படங்களை முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறாராம்.

After Vijay 62 movie AR Murugadoss plans to direct Rajinikanth

விநாயகர் சதுர்த்தி நாளில் தனுஷுடன் மோதும் சிவகார்த்திகேயன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக சீமராஜா படத்துக்காக சிவகார்த்திகேயனை இயக்கி வருகிறார் பொன்ராம்.

இமான் இசையமைத்து வரும் இப்படத்தை ஆர்.டி. ராஜா தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் 2 விதமான கெட் அப்புகளில் நடித்து வருகிறார்.

ஒரு தோற்றத்துக்காக தாடி வளர்த்து வருகிறார்.

இந்த கேரக்டர் ப்ளாஷ்பேக்கில் வருவதாகவும் அதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு ஜூன் 19ம் தேதி முழுவதுமாக முடிவடைய உள்ளதாம்.

இப்படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தை செப்டம்பர் 13ம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதே நாளில் தனுஷின் ‘வடசென்னை’ படமும் வெளியாகும் என தகவல்கள வந்துள்ளன.

வெற்றிமாறன் இயக்கி வரும் வட சென்னை படத்தின் ட்ரைலரை வருகிற ஜீலை 28ஆம் தேதி வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vada Chennai and Seema Raja movies may clash on Vinayagar Chathuruthi day

காலாவில் புரட்சி செய்தவர் அஜித்துக்கு புரட்சி வசனம் எழுதுகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா திரைப்படத்தில் ரஜினியின் கடைசி மகனாக நடித்தவர் மணிகண்டன்.

இவர் படத்தில் புரட்சி போராட்டங்கள் செய்துக் கொண்டு லெனின் என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.

இதற்கு முன்பே இவர் விக்ரம் வேதா படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறாராம்.

இப்படத்தின் வசனங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து தற்போது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்திலும் வசனகர்த்தாவாக ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

எனவே இதில் புரட்சிக்கரமான வசனங்களை எதிர்பார்க்கலாம்.

விரைவில் விஸ்வாசம் படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது.

Kaala and Viswasam movies connected by Dialogue Writer Manikandan

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் மம்மூட்டியின் *பேரன்பு*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ் PL. தேனப்பன் தயாரிப்பில் மெகாஸ்டார் மம்மூட்டி நடிக்கும் இயக்குநர் ராமின் பேரன்பு திரைப்படம் 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சி (Asian Premiere) நாளை (ஜூன் 16-ம் தேதி) திரையிடப்பட இருக்கிறது.

ஜனவரி மாதத்தில் நடைபெற்ற 47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படத்திற்கு கிடைத்த அங்கிகாரமும் வரவேற்ப்பும் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்பட விழாவில் பேரன்பு திரைப்படம் மூன்று காட்சிகள் திரையிடப்படவுள்ளது.

தயாரிப்பாளர் P L தேனப்பன், இயக்குநர் ராம் மற்றும் தங்கமீன்கள் சாதனா இத்திரைப்பட விழாவில் கலந்துக் கொள்வதற்காக ஷாங்காய் சென்றுள்ளனர்.

இதில் நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார்.

Peranbu Tamil movie will be screened in Shanghai International Film Festival

காட்சிகள் விபரம் பின்வருமாறு:

காட்சி 1
ஜூன் 16-ம் தேதி 03:45 p.m.
ஹால் 1, ஷாங்காய் ஹாங்கௌ ஜின்யி சினிமா

காட்சி 2
ஜூன் 17-ம் தேதி 03:45 p.m.
ஹால் 7, அரோரா இன்டர்நேஷனல் சினிமா

காட்சி 3
ஜூன் 19-ம் தேதி 08:45 p.m.
ஹால் 6, தி கிராண்ட் நியூ இன்டர்நேஷனல் சினிமா

காலா தந்த வாய்ப்பு; பாலிவுட்டுக்கு செல்லும் பா.ரஞ்சித்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்டக்கத்தி, மெட்ராஸ் என சிறிய பட்ஜெட் படங்களை இயக்கி கொண்டிருந்த ரஞ்சித்துக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது.

அதுவும் கலைப்புலி தாணுவின் தயாரிப்பு என்பதால் கபாலி படம் மூலம் உலகளவில் பிரபலமானார் ரஞ்சித்.
இதனையடுத்து ரஜினியின் காலா படத்தை இயக்கினார் ரஞ்சித்.

இப்படத்தில் ரஜினியுடன் நானா படேகர், ஹீமா குரேஷி, அஞ்சலி பாட்டீல் என பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இதனால் ஹிந்தி திரையுலகினரிடம் பரிச்சயமானார் ரஞ்சித்.

இந்நிலையில், பாலிவுட்டின் பல முன்னணி நிறுவனங்கள் ரஞ்சித்திடம் தங்களுக்கு ஒரு படம் செய்ய சொல்லி கேட்கிறார்களாம்.

இதுகுறித்து ரஞ்சித் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது… இதுவரை எதுவும் முடிவாகவில்லை. முடிவானவுடன் விரைவில் அறிவிப்போம்” என தெரிவித்துள்ளனர்.

Kaala director Ranjith going to Bollywood soon

More Articles
Follows