நாடகக் கலைஞர்களுக்கு தமிழக அரசின் இலவச சலுகை..; நடிகர் சங்கம் நன்றி.!

நாடகக் கலைஞர்களுக்கு தமிழக அரசின் இலவச சலுகை..; நடிகர் சங்கம் நன்றி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

drama artistsஓர் இடத்துக்குச் சென்று நாடகம் நடத்த வேண்டும் என்றால், அனைத்து உபகரணங்களையும் பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் எடுத்துச் செல்ல வேண்டும்.

இதற்கும் டிக்கெட் எடுத்துத் தான், கொண்டு செல்ல வேண்டிய சூழலில் இருந்தார்கள் நாடகக் கலைஞர்கள். அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப பணத்தில், இந்த பயணத்துக்கு ஒரு பகுதி செலவிட வேண்டியதிருந்தது.

இந்தக் கட்டணத்தை இலவசமாக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருந்தது.

தற்போது, கொரோனா காலத்தில் நாடகக் கலைஞர்களின் நிலை மிகவும் பரிதாபக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சமயத்தில், நாடகக் கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.

இசைக்கருவிகள், கலைப்பொருட்கள், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்திய கருவிகள் போன்றவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.

இந்த அறிவிப்பு என்பது நாடக நடிகர்களுக்கு மிகப்பெரிய பேரூதவி ஆகும்.

இந்த அரசாணையை பிறப்பித்த தமிழக அரசுக்கு, நடிகர் – நடிகைகள் சமூகம் சார்பில் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இந்த ஆணை நாடக நடிகர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது என நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

Transport charges free for drama artists in TN

எம்ஜிஆர்-சிவாஜிக்கே சவால் விட்ட ஜெமினி கணேசன்.; காதல் மன்னனின் 100வது பிறந்தநாள் பதிவு

எம்ஜிஆர்-சிவாஜிக்கே சவால் விட்ட ஜெமினி கணேசன்.; காதல் மன்னனின் 100வது பிறந்தநாள் பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gemini ganesanதமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகிய இருவரும் உச்சத்தில் இருந்த போதே அவர்களுக்கு இணையாக ரசிகர்களை ஈர்த்தவர் ஜெமினி கணேசன்.

அப்பாவியான முகம் கொண்டிருந்தாலும் இவர் முதலில் நாயகனாக நடிக்கவில்லையாம். வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஜெமினி கணேசனுக்கும் காதல் பாடல்கள் பெருமளவு கை கொடுத்தது.

பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஏ.எம் .ராஜன் ஆகியோர் குரல்கள் ஜெமினி கணேசனின் காதல் பாடல்களுக்கு கை கொடுத்தன.

ஜெமினி கணேசன் பற்றிய சிறு துளி தகவல்கள் இதோ…

இவர் 17.11.1920-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் கணபதி சுப்பிரமணியன் சர்மா. பின்னர் அது ராமசாமி கணேசன் என்று மாறியது. நாளடையில் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிய காரணத்தால் ஜெமினி கணேசன் என்ற பெயரே நிலையானது.

இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜெமினி ஸ்டுடியோவில் இவருக்கு கிடைத்த வேலை கேஸ்டிங் டைரக்டர். அதாவது சினிமாவில் நடிக்க வரும் புதுமுகங்களின் திறமைகளை பரிசோதித்து குறிப்பு எழுதித் தரும் நபர்தான் இவர்.

* அவரிடம் வாய்ப்பு கேட்டு வந்தவர்களின் முக்கியமானவர் சிவாஜி கணேசன், எஸ். வி.ரங்காராவ், சாவித்திரி ஆகியோரும் அடங்குவர்.

சிவாஜிக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிட்டு “இந்த பையனின் கண்ணும், முகமும் அபாரம். நிச்சயம் ஒரு நல்ல நடிகராக இவர் விளங்குவார் என கம்பெனியில் குறிப்பு எழுதியுள்ளார். சிவாஜி கணேசனே இதை வெளிப்படையாக சொல்லியிருக்கிறாராம்.

தமிழில் மட்டும் 97 படங்களில் நடித்துள்ளார். இவரின் முதல் படம் “மிஸ் மாலினி’ (1947). கடைசி படம் கமலின் “அவ்வை சண்முகி'(1996).

“வல்லவனுக்கு வல்லவன்’. படத்தில் ஜெமினி கணேசன் வில்லனாக நடித்துள்ளார். ஹீரோவாக நடித்த முதல் படம் 1953-ஆம் ஆண்டு வெளியான “பெண்’.

“வஞ்சிக் கோட்டை வாலிபன்’ படத்தில் ஆக்சனில் அசத்தியிருக்கிறார்.

இவர் தயாரித்த ஒரே படம் “நான் அவனில்லை’.

நிறைய காதல் படங்களில் நடித்து காதல் மன்னன் என்ற பெயரையும் ரசிகர்களிடையே பெற்றார். தமிழ் சினிமாவின் முதல் காதல் மன்னன் பட்டம் பெற்றவர் இவரே.

1953ல் “மனம்போல மாங்கல்யம்’. என்ற படத்தில் இரட்டை வேடம் ஏற்றார். இந்த படத்தில் தன்னுடன் நடித்த, நடிகையர் திலகம் என்று புகழ் பெற்ற சாவித்திரியை ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார்.

சாவித்திரிக்கு திருமணம் செய்வதற்கு முன்பே இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. அதை அறிந்தே இவரை சாவித்ரி காதலித்து திருமணம் செய்தார்.

சினிமாவை போல நிஜ வாழ்க்கையிலும் நிறைய பெண்களை காதலித்தார். சிலரை திருமணம் செய்துள்ளார்.

இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதினை பெற்றிருக்கிறார்.

2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது 85-வது வயதில் உயிரிழந்தார்.

ஜெமினி கணேசனுக்கு இந்திய அரசு தபால் தலையும் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. அதனை ஜெமினி கணேசனின் புதல்விகள் கமலா செல்வராஜ், ரேவதி சுவாமிநாதன் பெற்றுக் கொண்டனர்.

Remembering late actor Gemini Ganesan on his birth anniversary

கெளதமி வீட்டில் சுவர் ஏறி குதித்த மர்ம நபர்; போலீசார் வழக்கு பதிவு

கெளதமி வீட்டில் சுவர் ஏறி குதித்த மர்ம நபர்; போலீசார் வழக்கு பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautamiசில வருடங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனுடன் ஒரே வீட்டில் திருமண செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தவர் நடிகை கௌதமி.

பின்னர் தன் மகளின் வாழ்க்கைக்காக கமல்ஹாசனை பிரிவதாக அறிவித்தார்.

தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் பகுதியில் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருகிறார்.

இவரது வீட்டில் இன்று அதிகாலையில் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் ஒரு மர்ம நபர் நுழைந்துள்ளார்.

இதனையடுத்து வீட்டு பணிப்பெண்கள் அந்த நபரை பிடித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரை விசாரணை செய்ததில் அந்த நபர் கொட்டிவாக்கம் மீனவ குப்பத்தை சேர்ந்த 24 வயதான பாண்டியன் என தெரியவந்தது.

பாண்டியன்(24) மீது 380, 511 என்ற இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்துள்ளனர்.

காதம்பரி பிக்சர்ஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தில் பாண்டியன் வேலை பார்த்து வருவதாகவும், அவர் மது போதையில் கௌதமி வீட்டுக்குள் நுழைந்துள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Man who illegally entered actress Gautami’s house arrested

மீண்டும் இணையும் சூர்யா – கௌதம் மேனன்..; உறுதி செய்த பி.சி. ஸ்ரீராம்

மீண்டும் இணையும் சூர்யா – கௌதம் மேனன்..; உறுதி செய்த பி.சி. ஸ்ரீராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவின் சினிமா கேரியரில் நிறைய ஹிட் படங்களை சொன்னாலும் முக்கியமாக காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களை குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும்.

சூர்யா – கவுதம் மேனன் கூட்டணிக்கு எப்போதுமே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருப்பதால் இவர்கள் மீண்டும் இணைய மாட்டார்களா? என ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இவர்கள் இணையவுள்ளதாக அடிக்கடி செய்திகள் வந்தாலும் அவையனைத்தும் வதந்தியாகவே முடிந்து போனது.

ஆனால் தற்போது சூர்யா – கவுதம் மேனன் கூட்டணி இணைவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெப் தொடரில் சூர்யா இணைந்திருக்கிறார். இந்த தகவலை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உறுதிசெய்துள்ளார்.

சூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா எனர்ஜியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது சூர்யா கை வசம் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் என படங்கள் உள்ளன.

Suriya and Gautham Menon joins for a new web series

‘அண்ணாத்த’ அப்டேட்.. : ரஜினிகாந்த் எப்போது சூட்டிங்கில் பங்கேற்பார்.?

‘அண்ணாத்த’ அப்டேட்.. : ரஜினிகாந்த் எப்போது சூட்டிங்கில் பங்கேற்பார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Annaattheசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படம் ‘அண்ணாத்த’

இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க ரூபன் எடிட்டிங் செய்து வருகிறார்.

இதன் முதற்கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்திருந்தாலும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கவில்லை.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிக்கட்சி அறிவிப்பு & மாநாட்டை ஒத்தி வைத்துள்ளார்.

இதனால் சினிமாவில் நடிப்பாரா? அல்லது அதையும் ஒத்தி வைப்பாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் எடிட்டர் ஆண்டனி எல்.ரூபனிடம் ‘அண்ணாத்த’ பட அப்டேட் கேட்டுள்ளார் ஒரு ரசிகர்.

அதற்கு பதிலளிக்கையில்… “விரைவில் அப்டேட் வரும். நானும் காத்திருக்கிறேன்” என பதிலளித்துள்ளார்.

Editor Ruben about Rajinikanth’s Annaatthe update

கேன்சரால் அவதிப்படும் நடிகர் தவசிக்கு விஜய் சேதுபதி & சௌந்தர ராஜா நிதியுதவி

கேன்சரால் அவதிப்படும் நடிகர் தவசிக்கு விஜய் சேதுபதி & சௌந்தர ராஜா நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor thavasiசிவகார்த்திகேயன் & ஸ்ரீதிவ்யா நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி.

இந்த படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் தான் இவரை படு பிரபலமாக்கியது.

தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருவதாக அவரது உறவினரே தெரிவித்துள்ளார்.

தற்போது கேன்சர் (புற்றுநோயால்) பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தனது மருத்துவ செலவுக்கு திரைப் பிரபலங்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து டாக்டரும், திருப்பரங்குன்றம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினருமான சரவணன், மருத்துவ செலவுகள் அனைத்தையும் சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் தவசியை நடிகர் சௌந்தர ராஜா நேரில் சந்தித்துள்ளார்.

தன் சார்பாக ரூ 10000/- பணத்தையும் விஜய்சேதுபதி வழங்கிய 1 லட்சத்தை உதவியாக வழங்கியுள்ளார்.

Makkal Selvan sends help for actor Thavasi’s cancer treatment

More Articles
Follows