தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓர் இடத்துக்குச் சென்று நாடகம் நடத்த வேண்டும் என்றால், அனைத்து உபகரணங்களையும் பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் எடுத்துச் செல்ல வேண்டும்.
இதற்கும் டிக்கெட் எடுத்துத் தான், கொண்டு செல்ல வேண்டிய சூழலில் இருந்தார்கள் நாடகக் கலைஞர்கள். அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப பணத்தில், இந்த பயணத்துக்கு ஒரு பகுதி செலவிட வேண்டியதிருந்தது.
இந்தக் கட்டணத்தை இலவசமாக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருந்தது.
தற்போது, கொரோனா காலத்தில் நாடகக் கலைஞர்களின் நிலை மிகவும் பரிதாபக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சமயத்தில், நாடகக் கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.
இசைக்கருவிகள், கலைப்பொருட்கள், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்திய கருவிகள் போன்றவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
இந்த அறிவிப்பு என்பது நாடக நடிகர்களுக்கு மிகப்பெரிய பேரூதவி ஆகும்.
இந்த அரசாணையை பிறப்பித்த தமிழக அரசுக்கு, நடிகர் – நடிகைகள் சமூகம் சார்பில் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இந்த ஆணை நாடக நடிகர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது என நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
Transport charges free for drama artists in TN