கவுண்டமணியின் மங்கிஸ்தா கிங்கிஸ்தா டயலாக்கை பாடலாக்கிய டிஆர்

கவுண்டமணியின் மங்கிஸ்தா கிங்கிஸ்தா டயலாக்கை பாடலாக்கிய டிஆர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TRajendar records Mokinstha Kinkistha for Film KOOTHANசரத்குமார் இரு வேடங்களில் நடித்த நாட்டாமை படத்தில் மங்கிஸ்தா கிங்கிஸ்தா என்ற டயலாக்கை கவுண்டமணி பேசுவார்.

இப்போது அந்த வார்த்தையே டிஆர். குரலில் பாடலாகியுள்ளது.

இதன் விவரம் வருமாறு…

நீல்கிரிஸ் ட்ரீம் என்டேர்டைன்மெண்ட் “நீல்கிரிஸ் முருகன்” தயாரிக்கும் திரைப்படம் “கூத்தன்” இதில் புதுமுக நாயகனாக நடிக்கிறார் ராஜ்குமார்,பாலாஜி இசையமைக்க எழுதி இயக்குகிறார் வெங்கி.A.L.

டி.ஆர் பாடல் பாடினாலே சோசியல் மீடியாவில் வைரல் தான்.

இதை அறிந்த நிறைய தயாரிப்பாளர்கள் டி.ஆர் வீட்டில் படையெடுத்து வருகிறார்கள்.

ஆனால் டி.ஆர்ரோ தனக்கு பாடலின் மெட்டும் வரிகளும் பிடித்திருந்தால் மட்டுமே க்ரீன் சிக்னல் காட்டுகிறார்.

இந்நிலையில் கூத்தன் பட குழு மற்றும் இசையமைப்பாளர் பாலாஜி அவரை முதலில் அணுகிய போது நோ என்று சொன்ன அவர் பாடலின் மெட்டை கேட்ட உடன் குஷியாகிவிட்டார்.

மேலும் இந்த பாடலை யார் பாடினாலும் சூப்பர் ஹிட் ஆகக்கூடிய மெட்டும் வரியும் தான் இந்த “மங்கிஸ்தா கிங்கிஸ்தா” என்று கூறினார்.

ஆனால் இசையமைப்பாளர் பாலாஜி, சார் நீங்கள் இந்த பாடலை பாடவேண்டும்மென்றுதான் நான் இசையமைத்தேன்.

வேறுயாரையும் வைத்து இந்த பாடலை ஓலிப்பதிவு செய்ய விருப்பமில்லை என்று கூறியவுடன் அதை கேட்டு நெகிழ்ந்து போன டி.ஆர் நானே இந்த பாடலை பாடுகிறேன் என்று ஒப்புக்கொன்டு மெர்சலாக பாடிக் கொடுத்திருக்கிறார்.

என்னதான் ஜாலி பாடல் ஆக இருந்தாலும் ஒரு வரி செண்டிமெண்ட் இதில் வைத்துயிருந்தார்கள் “ஒன்னும் இல்ல ரத்தத்தில சொந்தம் தான் டா மொத்தத்தில” என்ற ரோகேஷ் எழுதிய வரியை பாடி முடித்தவுடன் கண்கலங்கி டி.ஆர் இந்த வரிகளை நான் பாடவில்லை மைக்கின் முன் நடித்திருக்கிறேன் என்று அவர் கூறியவுடன் நெகிழ்ந்துப்போனது கூத்தன் படக்குழு.

இந்த பாடலை மிக பெரிய பொருட் செலவில் பிரமாண்ட அரங்கில் அசோக் ராஜா நடன அமைப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரிப்பில் படமாக்க இருக்கிறார்கள்.

TRajendar records Mokinstha Kinkistha for Film KOOTHAN

TRajendar records Mokinstha Kinkistha for Film KOOTHAN

விரைவில் 200 கோடியை நெருங்கும் மெர்சல்.; காத்திருக்கும் ரசிகர்கள்

விரைவில் 200 கோடியை நெருங்கும் மெர்சல்.; காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mersal near to touch Rs 200 crores collection worldwideதீபாவளி திருநாளை முன்னிட்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதுவே படத்திற்கு பெரும் விளம்பரத்தை கொடுக்க, மக்கள் வெள்ளத்தால்வ அரங்குகள் நிறைந்தன.

மேலும் படத்தில் அந்த ஜிஎஸ்டி காட்சி நீக்கப்பட்டு விடுமோ? என்ற சந்தேகத்தினால் கூட்டம் அதிகரிக்க, காட்சிகளும் அதிகரித்தன.

பல பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு அதிகாலை காட்சியும் திரையிடப்பட்டது.

மேலும் சென்னையில் மூடப்பட்டிருந்த ஐநாக்ஸ், பிவிஆர் தியேட்டர்களும் மெர்சலுக்காக திறக்கப்பட்டன.

உலகளவில் 3 நாட்களில் சுமார் 100 கோடி வசூலைக் கடந்த, இப்படம் தற்போது 150 கோடியை நெருங்கிவிட்டதாக வியாபார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் உலகளவில் 200 கோடி வசூலை தொட்டுவிடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இப்போதே இதை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கத் தொடங்கி விட்டார்களாம்.

தமிழகத்தில் முதல் 5 நாட்களில் வசூலில், ‘பாகுபலி 2’ மற்றும் ‘எந்திரன்’ ஆகியவற்றுக்கு பின்னால் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Mersal near to touch Rs 200 crores collection worldwide

தளபதி-62 அப்டேட்ஸ்… மலையாள கலைஞரை தமிழுக்கு அழைக்கும் விஜய்

தளபதி-62 அப்டேட்ஸ்… மலையாள கலைஞரை தமிழுக்கு அழைக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 62 cinematographerமெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கவிருப்பதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

இந்நிலையில் இதில் ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இவர் இதுவரை களி, சோலோ உள்ளிட்ட மலையாள படங்களில் மட்டுமே பணிபுரிந்துள்ளார்.

கடந்த 2016ல் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான குப்பி படத்திற்காக கேரள அரசின் விருதைப் பெற்றிருக்கிறார்.

இவர் விஜய்யுடன் இணைவதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

cinematographer Girish Gangadharan joins with Murugadoss for Vijay 62

தியேட்டரை போல அரசு அலுவலகத்திலும் தேசிய கீதம் ஒலிக்கலாமே… அரவிந்த்சாமி கேள்வி

தியேட்டரை போல அரசு அலுவலகத்திலும் தேசிய கீதம் ஒலிக்கலாமே… அரவிந்த்சாமி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why not singing National Anthem in all Govt Offices Says Arvindswamiதியேட்டர்களில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தேசிய கீதம் இசைக்கப்படும் போது தியேட்டர்களில் மக்கள் எழுந்து நின்று தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை என்று சுப்ரீக் கோர்ட் உத்தரவிட்டது.

இது தொடர்பாக என் தேசப்பற்றை பொது இடத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றார் கமல்.

தற்போது அரவிந்த்சாமியும் இதுகுறித்து தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நான் எப்போதுமே தேசிய கீதம் இசைக்கப்படும்போது பெருமையோடு எழுந்து நின்று, பாடுவேன்.

அது தியேட்டர்களில் மட்டும் ஏன் கட்டாயம்? என்பது எனக்கு புரியவில்லை.

ஏன் அனைத்து அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சட்டப்பேரவை, பாராளுமன்றக் கூட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு தினமும் இசைக்கக் கூடாது?

இவ்வாறு அரவிந்த்சாமி கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

arvind swami‏Verified account @thearvindswami

I will always stand up for our Natl Anthem & sing along,which I do with great pride.Never understood why it ws mandatory n cinema halls only

arvind swami‏Verified account @thearvindswami

Why not everyday in all govt offices, courts, before assembly and parliament sessions?

Why not singing National Anthem in all Govt Offices Says Arvindswami

மெர்சல் பிரச்சினையில் ஆதரவளித்தவர்களுக்கு ஜோசப் விஜய் நன்றி

மெர்சல் பிரச்சினையில் ஆதரவளித்தவர்களுக்கு ஜோசப் விஜய் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay thanksமெர்சல் படம் பல பிரச்சினைகளைத் தாண்டி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜோசப் விஜய் என்ற விஜய் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது…

மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாரட்டுக்களுடன், நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மாபெரும் வெற்றி அடைந்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச்சார்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தேசிய அளவில் பிரபல மான அரசியல் தலைவர்கள் மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையைச் சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பா, நண்பிகள் (ரசிகர், ரசிகைகள்) பொதுமக்கள் அனைவரும் எனக்கும் மெர்சல் படகுழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள்.

மேலும் மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும் , ஆதரவு கொடுத்ததற்கும், அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி கலந்த வணக்கத்துடன் உங்கள் விஜய் என குறிப்பிட்டு உள்ளார்.

தன் லெட்டர் பேடில் ஜோசப் விஜய் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது இங்கே கவனித்தக்கது.

Joseph Vijay Thanks letter to all in Mersal issue

joseph vijay thanks letter

கீதன்-வர்ஷா இணையும் சீமத்துரை பர்ஸ்ட் லுக்கை ஆர்யா வெளியிட்டார்

கீதன்-வர்ஷா இணையும் சீமத்துரை பர்ஸ்ட் லுக்கை ஆர்யா வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aryaபுவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E.சுஜய்கிருஷ்ணா தயாரிக்கும் புதிய படம் “சீமத்துரை”.

கீதன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் தியாகராஜன் எழுதி இயக்குகிறார்.

நாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். ஜோஷ் ஃப்ராங்க்ளின் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Arya revealed first look of Seemathurai movie

More Articles
Follows