கர்நாடகாவில் தலை.. தமிழகத்தில் முண்டம்..; இது டோனி-யின் ‘பார்டர்’

கர்நாடகாவில் தலை.. தமிழகத்தில் முண்டம்..; இது டோனி-யின் ‘பார்டர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண்விஜய் நடிக்கும் பார்டர் படத்திற்கு முன்பே தணிக்கை செய்யப்பட்ட படம் டோனி சினிமாஸின் “பார்டர்” பலகட்ட டைட்டில் பிரச்சினைகளை முடித்து வருகிற 12 ஆம் தேதி வெளியாகிறது பார்டர் திரைப்படம்.

தமிழக, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி என்னும் பார்டரில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் இது.

தலையை கர்நாடகவிலும், முண்டத்தை தமிழகத்திலும் போட்டு போலீஸை திசை திருப்பும் கேங்ஸ்டர் திரைப்படம் பார்டர். காலம் காலமாக நடக்கும் காவிரி பிரச்சினையை திசை திருப்ப இப்படியான சம்பவங்கள் நடப்பதாக மக்கள் நம்புகிறார்கள்.

ஆனால் உண்மையில் தலைவிரித்தாடும் கூலிப்படைகளின் கோரமுகத்தை விவரிக்கிறது படம்.

ஆதரவற்றவர்கள் நல்லவர்கள் கைகளில் கிடைத்தால் பூவோடு நாறும் மணக்கும் என்பது போல அவர்கள் வாழ்வில் ஒளியேறும், அவர்கள் தீயவர்கள் கைகளில் சிக்கினால் வாழ்க்கையே இருட்டு பக்கமாகிவிடும். காட்சிக்கு காட்சி திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.

பிரபல பேஷன் டிசைனரும், லேண்ட் டெவலப்பருமான ஒசூர் தேன்கனிக்கோட்டையை சேர்த்த டோனி கதை நாயகனாக நடித்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இவர் ரூல்நெம்பர் 4, பேராண்டி, கன்னட திரைப்படமான காடி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருடன் ரஞ்சிதா, சாய்தினா, பில்லி முரளி, கன்னட நடிகர் அவினேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு: செல்வகுமார் சங்கரலிங்கம்

இசை: அலென் விஜய்

எடிட்டிங்: அதுல் விஜய்

ஸ்டண்ட்: ராக்கெட் விக்ரம்.

கதை, திரைக்கதை, இயக்கம்

வெங்கடேஷ்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள “பார்டர்” திரைப்படத்தை ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனிஷ் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறார்.

Tony cinemas in Border will release on Nov 12

ரஜினிக்கு ஜோடியாவும் என் மகள் நடிப்பாள்..; கீர்த்தி அம்மா மேனகா ஓபன் டாக்

ரஜினிக்கு ஜோடியாவும் என் மகள் நடிப்பாள்..; கீர்த்தி அம்மா மேனகா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இளம் வயதிலேயே மகாநடி படத்திற்காக சிறந்ந நடிகைக்கான தேசிய விருதை வென்றவர் இவர்.

முன்னணி நடிகையாக இருக்கும்போதே ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக கூட என் மகள் நடிப்பாள் என கீர்த்தியின் அம்மா மேனகா தெரிவித்துள்ளார்.

கிட்டதட்ட 40 வருடங்களுக்கு முன் (1980களில்) வெளியான நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மேனகா நடித்தவர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

முன்னணி ஊடகத்திற்கு அளித்த சமீபத்திய பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார் மேனகா.

“’அண்ணாத்த படம் ட்ராமா மாதிரி இருக்குனு சொல்றாங்க, செண்டிமெண்ட்னு வந்துட்டா கொஞ்சம் ட்ராமா மாதிரிதான் இருக்கும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு புடிச்ச ஒரு படத்தை நாலு இளைஞர்களுக்கு பிடிக்காது. அதேபோல இளைஞர்களுக்கு புடிச்ச ஒரு படம் நடுத்தர வயதுக்காரங்களுக்குப் பிடிக்காது.

வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் மாறல’ன்னு ஒரு டயலாக் படையப்பா படத்துல வரும். அது நிஜம்தான். 70 வயதிலேயும் எனர்ஜெட்டிக்கா இருக்கார் ரஜினி

ரஜினி பொண்ணு வயசு கீர்த்திக்கு இருக்கும். அவ ரஜினிக்கு தங்கச்சியா நடிக்கலாமானு என்னிடம் கேட்டாங்க.

சினிமா ஒரு கனவுலகம். இது நடிப்புதானே?

அவர் பிராக்டிகல் லைப்ஃல தலைமுடிக்கு டை அடிக்கல. விக் வைக்கல. தான் எப்படி இருக்குமோ? அப்படியே வெளியே வர்றார்.

தன் தொழிலான சினிமாவில் நடிக்கும்போது கேரக்டருக்கு ஏத்தபடி தன்னை மாத்திக்கிறார். அவருக்கும் அது செட் ஆகுது. அவர் மனசுக்கு அவர் ஹீரோவா தெரிகின்ற வரை நடிக்கட்டும்.

இதுல மத்தவங்களுக்கு என்ன பிரச்சினை. இந்த படத்துல தங்கச்சி. அடுத்த படத்துல ஜோடியா நடிக்கக் கேட்டாலும் கீர்த்தி நடிப்பாள்’’ என்றார் மேனகா.

Keerthy Suresh mother talks about Rajinikanth

மெய்நிகர் ஆன்லைன் உலகில் முதல் இந்திய நடிகராகிறார் கமல்ஹாசன்

மெய்நிகர் ஆன்லைன் உலகில் முதல் இந்திய நடிகராகிறார் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் பிறந்த நாளன்று, ∴பாண்டிக்கோ என்ற கம்பெனி துவக்கும் மெய்நிகர் ஆன்லைன் உலகில் (மெட்டாவெர்ஸில்) இணையதள அவதாரமாகும் முதல் இந்திய நடிகராகிறார் பத்மஸ்ரீ. கமல்ஹாசன் அவர்கள்.

இந்த புதிய முயற்சியில், கமல் ஹாசன் முதன் முறையாக, லோட்டஸ் மீடியா என்டர்டைன்மெண்ட் கம்பெனி மூலம் ∴பாண்டிக்கோவுடன் இணைந்து தன் டிஜிட்டல் அவதாரங்களையும், NFT (Non fungible Token) சொத்துக்களையும் மெய்நிகர் ஆன்லைன் உலகில் (மெட்டாவெர்ஸில்) பிரத்யேகமாக வெளியிடுகின்றார். இவை www.kamal.fantico.in எனும் இணைய தளத்தில் துவங்கப்படும்.

∴பாண்டிக்கோ கம்பெனி துவக்கும் ஒரு கேம் சார்ந்த மெட்டாவெர்ஸில், கமல்ஹாசனுக்கென்று தனி உலகம் இருக்கும். இதில் உலகெங்கும் இருக்கும் அவர் ரசிகர்கள் அவருடனும் அவரின் டிஜிட்டல் அவதாரங்களுடனும் அளவளாவி, அதன் நினைவாக டிஜிட்டல் டோக்கன்கள் மற்றும் நினைவு சின்னங்களையும் வாங்கலாம்.

அவருடைய மெய்நிகர் உலகின் விவரங்கள் மற்றும் மெட்டாவெர்ஸின் ஆச்சர்யங்கள் வெளியில் அறிவிக்கப்படாமல் இருந்தாலும், கம்பெனியின் டிஜிட்டல் மேடையில் முதலில் அவர் ரசிகர்களுக்காக பிரத்தேயேக NFTகள் அறிமுகப்படுத்தப்படும். தொடர்ந்து அவரின் மெய் நிகர் உலகின் ஆச்சர்யங்கள் துவங்கப்படும் என்பதே எதிர்பார்ப்பு.

தன் படங்களில் கமல்ஹாசன் அவர்கள் புதுமையை புகுத்துவதில் ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர் மட்டுமன்றி, என்றுமே பொழுபோக்கு உலகின் புதிய டெக்னாலஜி பயன் படுத்த முன்னிருப்பார். அதையே எதிர்கால டிஜிட்டல் உலகிலும் முன்னெடுக்கிறார் என்பது ஆச்சரியத்திற்குரியதில்லை: எதிர்பார்ப்பதுதான்…

“உருவாகி கொண்டிருக்கும் மெய்நிகர் உலகின் சாத்தியக்கூறுகள் எனக்கு உத்வேகம் தருபவை. மெட்டாவேர்ஸ் இன்று பாப்புலர் ஆகிக்கொண்டிருக்கிறது. என் அறுபது வருட வாழ்க்கை பயணத்தின் பிரதிபிம்பமாக என் டிஜிட்டல் உலகம் இருக்கும்” என்று திரு.கமல்ஹாசன் அவர்கள் கூறினார்.

தொடர்ந்து, ∴பாண்டிக்கோ கம்பெனியின் முதன்மை அதிகாரி திரு.அபயானந் சிங் பேசும் போது “எங்களுக்கு இந்த கேம் சார்ந்த மெட்டாவெர்ஸ் துவங்குவதில் மிக்க மகிழ்ச்சி. அதுவும், கமல்ஹாசன் போன்ற Iconனுடன் இணைந்து, இந்தியாவில் முதல் முறையாக இது போன்ற முன்னெடுப்பை எங்கள் டிஜிட்டல் மேடையில் துவக்குவது ரசிகர்களுடனான அமர்வுக்கு ஒரு புதுமையான முன் மாதிரியாக அமையும்” என்றார்.

Kamal Haassan to launch virtual avatar on metaverse by Fantico

மகேஷ்பாபு இயக்கத்தில் மாடர்ன் மங்கையாக மாறும் அனுஷ்கா

மகேஷ்பாபு இயக்கத்தில் மாடர்ன் மங்கையாக மாறும் அனுஷ்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளான இன்று (நவம்பர் 7), சாஹோ, ராதே ஷியாம் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் அனுஷ்காவுடனான தனது மூன்றாவது திரைப்படத்தை அறிவித்தது.

2018-ல் பாகமதியில் “அச்சமில்லா அரசி”-யாக நம்மை ஆட்கொண்டார்.

தற்போது, “அரசி” அனுஷ்கா ஷெட்டியும் யூவி கிரியேஷன்ஸும் மூன்றாவது முறையாக இணைகின்றனர்.

அனுஷ்காவின் 48-வது (#Anushka48) படமான இந்த நவீன கால பொழுதுபோக்கு சித்திரத்தை மகேஷ் பாபு பி எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஸ்வீட்டி (அனுஷ்காவின் செல்ல பெயர்)” என்று கூறியுள்ளது.

அனுஷ்காவின் பிறந்த நாளன்று செய்யப்பட்டுள்ள இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாடர்ன் மங்கையாக புதிய தோற்றத்தில் இப்படத்தில் அனுஷ்கா தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யூவி கிரியேஷன்ஸ், அனுஷ்கா கூட்டணியில் உருவான பாகமதி படம் நான்கு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றதோ, அதே போல் இப்படத்தையும் நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், மகேஷ் பாபு பி இயக்கத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் தலைப்பு, இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே, அனுஷ்காவின் பிறந்தநாளான நேற்று நவம்பர் 7ஆம் தேதி திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Anushka Shetty next film announcement is here

மீண்டும் நடிக்கவரும் பிரசாந்தின் ‘வண்ண வண்ண பூக்கள்’ பட நாயகி

மீண்டும் நடிக்கவரும் பிரசாந்தின் ‘வண்ண வண்ண பூக்கள்’ பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரசாந்த் நாயகனாக நடித்த “வண்ண வண்ண பூக்கள்” படம் மூலம் தமிழக இளைஞர்களின் மனதை கிறங்கடித்தவர் நடிகை வினோதினி.

தானு தயாரித்த இந்த படத்தை பாலுமகேந்திரா இயக்க, இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன.

இயக்குநர் நடிகர் விசு மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை வினோதினி. சிறு வயதிலேயே “நாயகன்” படம் முதலாக பெரும் நடசத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

16 வயதில் கஸ்தூரி ராஜாவின் ‘ஆத்தா உன் கோயிலிலே’ படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் இந்திய அளவில் பெரும் பிரபலத்தை பெற்று தந்தது.

கன்னட, மலையாள மொழிகள் உட்பட, பல மொழிகளில் நாயகியாகவும், குணச்சித்திர வேடங்களிலும், முன்னணி நாயகர்களுடனும் பல படங்களில் நடித்து, தென்னிந்தியாவில் பிரபல நட்சத்திரமாக திகழ்ந்தவர்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த அவருக்கு இப்பொழுது நல்ல வாய்ப்புக்கள் தேடி வருவதால் மீண்டும் நடிப்பில் களமிறங்கவுள்ளதாக கூறியுள்ளார்.

தனது மலரும் நினைவுகள் குறித்தும் மீண்டும் நடிக்க இருப்பதை குறித்தும் நடிகை வினோதினி கூறியதாவது…

“என் அம்மா ஒரு நாடக நடிகை, அப்போதே நாடகங்கள் நடிக்க செல்லும் போது என்னை அழைத்து செல்வார். அந்தப்பழக்கம் மூலமாக நான் சிறு வயதிலேயே விசு சார் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அவர் படங்களில் மட்டுமே தொடர்ந்து 7 படங்கள் நடித்தேன்.

தொடர்ச்சியாக எனக்கு நிறைய வாய்புகள் குவிந்தன. மணிரத்னம் சாரின் நாயகன் படத்தில் சிறு வயது சாராவாக நடித்தேன். மும்பையில் தான் ஷூட்டிங் நடந்தது. அங்கு தங்கியது நடித்தது எல்லாமே மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.

மணிரத்னம் சாரை அந்தப்படத்திற்கு பிறகு நான் பார்த்ததே இல்லை. சுஹாசினி மேடத்தை பார்க்கும்போது இதைப்பற்றி பேசிக்கொண்டிருப்பேன். மணிரத்னம் சாரை சந்தித்து உங்கள் நாயகன் படத்தில் நான் நடித்தேன்..!ஞாபகம் இருக்கிறதா எனக் கேட்க வேண்டும் என நினைப்பேன்.

என் வாழ்க்கை முழுவதுமே சினிமாவை சுற்றித்தான் இருந்தது. 16 வயதிலேயே நாயகியாகிவிட்டேன். கஸ்தூரிராஜா சார் எங்கள் வீட்டுக்கு அருகில் தான் குடியிருந்தார்கள். அவரது ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தினார். அந்தப்படம் 100 நாட்கள் ஓடியது.

அதைப் பார்த்து தான் பாலுமகேந்திரா சார் வண்ண வண்ண பூக்கள் படத்தில் நடிக்க வைத்தார். அந்தப்படம் இந்திய அளவில் பிரபலமாகிவிட்டது. கதை எல்லாம் சின்ன கதைதான். ஆனால் அதை அவர் படமாக்கிய விதம் தான் அற்புதமாக இருந்தது.

பாலுமகேந்திரா எனக்கு ஒரு தந்தை போல் இருந்தார். எனக்கு திரைத்துறையில் மிகவும் பிடித்தவர். தமிழை விட கன்னடத்தில் நிறைய படங்களில் நாயகியாக நடித்தேன்.

கன்னடத்தில் நிறைய வாய்ப்புகள் வந்ததால் தமிழில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை, நான் திரும்பி வரும்போது இங்கு நிறைய புது நடிகைகள் வந்துவிட்டனர் அதனால் குணச்சித்திர பாத்திரங்கள் தான் செய்தேன்.

தமிழ் திரையுலகம் பிடிக்கும் என்பதால் அதிலும் தொடர்ந்து நடித்தேன். அப்போதைய நடசத்திரங்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளேன் என இப்போது நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

திருமணத்திற்கு பிறகு ஒரு கட்டத்தில் அம்மா அப்பாவை, அத்தை மாமா மற்றும் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பும் சேர்ந்து வந்துவிட்டதால், சினிமாவிலிருந்து, ஒதுங்க வேண்டியதாகிவிட்டது.

இது பெண்களின் வாழ்க்கையில் இயல்பான ஒன்றுதான். அந்த காலகட்டத்திலும் தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் என்னால் தான் நடிக்க முடியவில்லை.

கரு.பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் படத்தில் ஒரு சின்ன பாத்திரத்தில் நடித்தேன். அவரது சதுரங்கம் படத்திலும் நடித்திருந்தேன். இடையில் எனக்கு நேரமே இல்லை.

இப்போது தான் கொஞ்சம் நேரம் கிடைக்க ஆரம்பித்துள்ளது. என் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள், அவர்களே நீ நடிக்கலாமே அம்மா எனக் கூறுகிறார்கள். நல்ல நல்ல வாய்ப்புக்களும் தேடி வருகிறது. அதனால் நடிக்கலாம் என்றிருக்கிறேன்.

நான் இருந்த போது இருந்த சினிமா , இப்போது இல்லை, நிறைய மாறிவிட்டது. சினிமா டெக்னாலஜியில் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இப்போது சினிமா ஓடிடி மூலம் வீட்டுக்கே வருகிறது. கதைகளுக்கு நிறைய முக்கியத்துவம் தந்து, வெப் சீரிஸ்களும் வருகின்றன.

எல்லோருக்குமான கதைகளும் இருக்கிறது. எனக்கு பொருந்தும் வித்தியாசமான பாத்திரங்களில் திரைப்படங்கள், வெப் சீரிஸில் நடிக்க ஆசைப்படுகிறேன். விரைவில் என்னை நீங்கள் மீண்டும், திரையில் பார்க்கலாம்” என்றார் வினோதினி.

கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார் இந்த ‘வண்ண வண்ண பூக்கள்’ பட நாயகி. அவரை வாழ்த்தி வரவேற்போம்.

Vanna Vanna Pookkal fame Vinothini re entry in Kollywood

‘கேக் வெட்டாதீங்க… கிணறு வெட்டுங்க..’ என கூறிய கமலே கேக் வெட்டி கொண்டாட்டம்.; உலகநாயகனே ஊருக்குதான் உபதேசமா.?

‘கேக் வெட்டாதீங்க… கிணறு வெட்டுங்க..’ என கூறிய கமலே கேக் வெட்டி கொண்டாட்டம்.; உலகநாயகனே ஊருக்குதான் உபதேசமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவம்பர் 7ஆம் தேதி நேற்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

தன் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் உறுப்பினர்களோடு காணொளி வாயிலாக கமல் உரையாடினார்.

அப்போது பேசியதாவது…, “நான் ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கூறியதை தான் இப்போது சொல்கிறேன். ‘எனக்காக கேக் வெட்டாதீர்கள்; கிணறு வெட்டுங்கள்’ என்று. இன்றும் அதைத்தான் என் பிறந்தநாள் செய்தியாகச் சொல்கிறேன்” என்றார்.

முடிந்த வரை சேவை செய்யுங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுங்கள். நீங்கள் பத்திரமாக இருங்கள். மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கும் வழிகாணுங்கள். நம் நற்பணிகள் எல்லாருக்கும் நல்ல முன்னுதாரணமாக அமையட்டும்” என பேசினார்.

ஆனால் நேற்று நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் கேக் வெட்டி கொண்டாடினார். அந்த கேக்கை பார்வையாளர்களுக்கும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுக்க சொன்னார்.

ஊருக்கு உபதேசம் செய்யும் கமல்ஹாசனே…. கேக் வெட்டாதீர்கள் கிணறு வெட்டுங்கள் என சொன்ன நீங்களே அதை செய்து முன்னுதாரணமாக இருந்திருக்கலாமே.. ஆனால் நீங்கள் மட்டும் கேக் வெட்டுவது எப்படி நியாயம் சாரே…

இந்த பார்ட்டி இல்லாமல் நேற்று ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அலுவலுகத்தில் கமலின் பிறந்தநாள் கொண்டாட்டமும் களைகட்டியது.

சினிமா பிரபலங்கள் பலருக்கு மதிய உணவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், லோகேஷ் கனகராஜ், அருண் வைத்யநாதன், நடிகர்கள் நரேன், மன்சூரலிகன், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், , தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், ஆர்த்தி – கணேஷ், பேராசிரியர் ஞான சம்பந்தன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு கமலை வாழ்த்தினர்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இத்துடன் கோயம்புத்தூர் ராஜவீதி துணி வணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளியில் காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மநீம உறுப்பினர்கள் இந்தப் பள்ளி வகுப்பறைகளுக்கு பெயிண்ட் அடித்து கொடுத்துள்ளனர்.

டாக்டர் ரகுபதி தலைமையில் 75 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. ‘ஐயமிட்டு உண்’ எனும் பெயரில் தமிழகம் முழுவதும 7 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Host Kamal Haasan’s birthday in Bigg Boss 5 Tamil

More Articles
Follows