நடிகையாகனுமா அட்ஜஸ்ட் பண்ணு சொல்வாங்க… – ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகையாகனுமா அட்ஜஸ்ட் பண்ணு சொல்வாங்க… – ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

To became heroine cine industry forcing to adjust says Aishwarya Rajeshதன் அழகான நடிப்பின் மமூலம் கோலிவுட்டை கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது டாடி என்ற படம் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் சினிமாவில் ஒரு நடிகையாக எந்த மாதிரியாக பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என அதிரடியாக தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சில உப்புமா படங்களுக்கு கூட சினிமாவில் நடிக்கனுமா? அட்ஜஸ்ட் செய்துகொள்வீர்களா என கேட்பார்கள்.

அதற்கு அவர்கள் வைக்கும் பெயர்கள் என்ன தெரியுமா? அக்ரீமெண்ட், அட்ஜஸ்ட்மென்ட், காண்ட்ராக்ட் என அழைப்பார்கள்.

ஒரு பெண்ணை நடிகையாக ஜெயிக்க வைக்க பெண்களை இப்படி வற்புறுத்துவது மிகவும் கேவலமான செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

To became heroine cine industry forcing to adjust says Aishwarya Rajesh

aishwarya rajesh hot

துப்பறிவாளன் ஓடும் தியேட்டர்களில் விஷால் பறக்கும் படை கண்காணிப்பு

துப்பறிவாளன் ஓடும் தியேட்டர்களில் விஷால் பறக்கும் படை கண்காணிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal flying squad will supervise in Thupparivalan theaters to avoid piracyமிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனுஇமானுவேல், பிரசன்னா, வினய் உள்ளிட்டோர் நடித்துள்ள துப்பறிவாளன் படம் இன்று செப்டம்பர் 14ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.

இதனையொட்டி தியேட்டர்களில் படத்தை செல்ஃபோனில் பதிவு செய்து பரபரப்புவதை தடுப்பதற்காகவும் அப்படி பதிவு செய்பவர்களை கண்காணித்து காவல் துறையினரிடம் பிடித்து கொடுக்கவும் தமிழகமெங்குமுள்ள விஷால் நற்பணி இயக்கம் சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஐந்து பேர் கொண்ட குழுக்களாக தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், எல்லா காட்சிகளையும் கண்காணிக்க இருக்கிறார்களாம்.

இதற்காக இந்த பறக்கும் படைக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாம்.

இது தொடர்பான கடிதங்களில் யார்? யார்? வருவார்கள் என ஒவ்வொரு தியேட்டருக்கும் விஷால் அனுப்பியுள்ளார்.

Vishal flying squad will supervise in Thupparivalan theaters to avoid piracy

vishal letter

விஷாலின் துப்பறிவாளன் பட ரிலீஸில் சிக்கல்; கோர்ட் நிபந்தனை இதுதான்!

விஷாலின் துப்பறிவாளன் பட ரிலீஸில் சிக்கல்; கோர்ட் நிபந்தனை இதுதான்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal stillsமிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படத்தை விஷால் தயாரித்து நடித்துள்ளார்.

இப்படத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளின் விநியோக உரிமை தர்மபுரியை சேர்ந்த டி.என்.சி. சினி ஸ்கிரின்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

இதன்பின்னர் இந்த படத்தின் முழுமையான விநியோக உரிமையை நடிகர் விஷாலின், விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி பெற்றது.
இதனால் தாங்கள் கொடுத்த 55 லட்ச ரூபாயை திருப்பி தரக்கோரி டி.என்.சி நிறுவனம் கேட்டது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து படத்தை வெளியிட தடைகோரி டி.என்.சி. சார்பில் சென்னை 5 வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டி.என்.சி. நிறுவனத்துக்கு உடனடியாக 25 லட்ச ரூபாயை தரத் தயாராக இருப்பதாகவும், 18 திரையரங்குகளில் மட்டும் வெளியிடும் உரிமையை தருவதாகவும் விஷால் பட நிறுவனம் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, உத்தரவாதம் அளித்தபடி பணம் கொடுக்கப்படாவிட்டால், படத்தை இன்று வெளியிடக்கூடாது என தெரிவித்த நீதிபதி வழக்கை வருகிற 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

எனவே துப்பறிவாளன் ரிலீஸில் இழுபறி நீடித்து வருகிறது.

Vishal movie Thupparivaalan release issue Court stay order

ரஜினி குடும்பத்தினர் கலந்துக் கொண்ட பாரத் யாத்ரா

ரஜினி குடும்பத்தினர் கலந்துக் கொண்ட பாரத் யாத்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush latha rajinikanthகுழந்தைகளுக்கு எதிராக நடக்கும் சமூக குற்றங்களை கண்டித்து நடக்கும் பாரத் யாத்ரா கன்னியாகுமரியில் தொடங்கி புதுடில்லியில் முடியும் ஒரு விழிப்புணர்வு நடைபயணமாகும்.

குழந்தைகளுக்கு நடக்கும் சமூக குற்றங்களான பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் முறை போன்றவற்றிலிருந்து குழந்தைகளை காப்பாற்றும் விழிப்புணர்வு நடை பயணமாக இந்த பயணம் நடைபெறுகிறது.

செப்டம்பர் 11 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கும் இப்பயணம் அக்டோபர் 15 புதுடில்லியில் முடிவைடகிறது.

வரையறுக்கப்பட்ட பாதையில் பாரத் யாத்ரா ஏறத்தாழ 22 மாநிலங்களில் 11,000 கிமீ பயணமாக நடைபெற்று வருகிறது.

சென்னையில், ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் லதா ரஜினிகாந்த் அவர்கள் தலைமையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கொடியிடப்பட்டு நடை பயணம் தொடங்கியது.

இதில் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் நோபல் பரிசு பெற்ற ஸ்ரீ கைலாஷ் சத்யார்திஜி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியில் மந்திரி மா.பா.பாண்டியராஜனும் டாக்டர். அன்புமனி ராமதாஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.

Rajini family participated in Shree Dayaa Foundations Bharat Yatra

நாளை லவ்வர் பாய் சிம்புவின் மெகா ட்ரீட்

நாளை லவ்வர் பாய் சிம்புவின் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tr stillsபாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து குறளரசன் இசையமைத்த படம் ‘இது நம்ம ஆளு’.

தமிழில் வெற்றிப் பெற்ற இப்படம் இப்போது தெலுங்கில் ‘சரஸுடு’ என்கிற பெயரில் நாளை செப்-15ல் ரிலீஸாகிறது.

இதன் டைட்டில் அருகே லவ்வர் பாய் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது டப்பிங் படமாக உருவாக்கப்படவில்லையாம்.

படத்தை உருவாக்கும்போதே தமிழில் சூரி நடித்த 40 நிமிட காட்சிகளை , தெலுங்கில் சத்யம் ராஜேஷ் என்கிற காமெடி நடிகரை வைத்து படமாக்கினார்களாம்.

அதுமட்டுமல்ல, தமிழில் நயன்தாரா, சிம்பு இருவரும் இணைந்து நடித்த சிம்பு எழுதிய பாடல் ஒன்றை, டி.ராஜேந்தர் சுந்தர தெலுங்கில் எழுதியுள்ளார்.

‘முன்ன மன்மதா.. நின்ன வல்லபா.. நேனு சரஸுடு” என சிம்புவின் ஹிட் படங்களின் பெயர்கள் எல்லாம் அந்தப்பாட்டில் இடம்பெறுகின்றனவாம்.

இப்படம் கர்நாடகாவிலும், தமிழகத்தில் உள்ள சில முக்கிய தியேட்டர்களிலும் தெலுங்கிலேயே ரிலீஸாகிறது.
தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட தெலுங்கு படமான இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநில அரசுகளும் ஜி.எஸ்.டி வரியில் இருந்து விளக்கு அளித்துள்ளன.
இப்படத்தை முதன்முறையாக ஆந்திரா முழுவதும் தானே ரிலீஸ் செய்கிறார் டி.ராஜேந்தர்.

மேலும் இது தொடர்பான புரமோசன் நிகழ்ச்சிகளில் டி.ராஜேந்தர் கலந்துக் கொண்டு வருகிறார்.

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது பீப் விவகாரத்தில் பொங்கிய மகளிர் அமைப்பினர் அனிதாவுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? எனவும் நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டவர்கள் நீட்டை எப்படி எதிர்ப்பார்கள்..? எனவும் பல அதிரடி கேள்விகளை எழுப்பினார் டி.ராஜேந்தர்.

Tomorrow Simbus Sarasudu release Movie sub titled A Lover Boy

lover boy simbu

அரசியல்வாதி எப்படி இருக்கக்கூடாது என சொல்லும் சிவா மனசில புஷ்பா

அரசியல்வாதி எப்படி இருக்கக்கூடாது என சொல்லும் சிவா மனசில புஷ்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Siva Manasula Pushpa movie about Bad politiciansசர்ச்சை நாயகன் வாராகி இயக்கி, தயாரித்து நடித்த சிவா மனசில புஷ்பா படப்பிடிப்பு திட்டமிட்டபடி கச்சிதமாக முடிவடைந்துள்ளது.

அரசியல் களத்தை மையப்படுத்தி வாராகி உருவாக்கியுள்ள சிவா மனசில புஷ்பா படத்தில் ஷிவானி குரோவர், ஜிஸ்மி என இரண்டு நாயகிகள். இருவரும் வாராகியின் ஜோடியாக வருகின்றனர்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான பெண்ணுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு, சண்டைதான் இந்தப் படத்தின் கதை.

ஒரு அரசியல்வாதி எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது என்கிறார் வாராகி.

இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மே மாதம் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 40 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. படத்தின் இறுதிக் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.

படப்பிடிப்பில் செய்தியாளர்களை வாராகி மற்றும் நாயகிகள் ஷிவானி குரோவர், ஜிஸ்மி ஆகியோர் சந்தித்தனர்.

வாராகி கூறுகையில், “இது ஒரு அரசியல் படம். ஆனால் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். மக்களை ஆளும் அரசியல்வாதிகள் எப்படி இருக்கக் கூடாது, இரட்டை வேடதாரிகளாக நாடகமாகக் கூடாது என்று சொல்ல எடுத்துள்ள படம். நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் வெற்றிப் பெறும்,” என்றார்.

நாயகி ஷிவானி குரோவர் கூறுகையில், “நான் ஏற்கெனவே தமிழில் நடித்திருந்தாலும், சிவா மனசில புஷ்பா எனக்கு முக்கியமான படம். என் பாத்திரம் என்னவென்று விளக்கமாக சொல்லித்தான் ஒப்பந்தம் செய்தார்கள்.

இந்த வேடத்தில் நடிப்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் வராது. எனது இயக்குநர் – ஹீரோ வாராகி அதைப் பார்த்துக் கொள்வார். அந்த அளவு துணிச்சலான மனிதர் அவர். மிகச் சிறப்பாகவும் நடித்துள்ளார்,” என்றார்.

நாயகி ஜிஸ்மி கூறுகையில், “மலையாளத்தில் சிறுவயதிலிருந்தே படங்களில் நடித்துள்ளேன். தமிழில் எனக்கு இது முதல் படம். எனக்கு மிகப் பெரிய அறிமுகத்தைத் தந்துள்ளார் வாராகி. அவருக்கு மனைவியாக இந்தப் படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் நடிப்பதைக் கேள்விப்பட்டு நிறைய வாய்ப்புகள் வருகின்றன.

நான் இந்தப் படம் வெளியாகும்வரை வேறு படத்தில் நடிப்பதாக இல்லை. அந்த அளவு நம்பிக்கை உள்ளது எனக்கு,” என்றார்.

சிவா மனசில புஷ்பா படத்தில் கே ராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தவசி ராஜ், விஜயகுமார், நியூஸ் 7 சுப்பையா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Siva Manasula Pushpa movie about Bad politicians

More Articles
Follows