தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையில் இன்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது.
தமிழகமே இந்த போராட்டங்களால் கொந்தளிப்பில் உள்ள நிலையில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ஐபிஎல் போட்டியாளர்கள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு செல்வதற்கு முன் அந்த ஓட்டல் முன்பும் போராட்டம் நடத்தினர்.
நாம் தமிழர் கட்சி சீமான், கவிஞர் வைரமுத்து, இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், கௌதமன், தங்கர் பச்சான் ஆகியோரும் சென்னையில் நடைபெறும் போராட்டங்களில் கலந்துக் கொண்டனர்.
ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கு நடைபெறும் நிகழ்வுகளை இங்கே தொகுத்துள்ளோம்…
டி.டி.கே சாலை, சென்னை
• வீரர்கள் அழைத்து வரப்படும சாலையில் மறியல்
• கிரிக்கெட் வீரர்கள் வரும் சாலையில் மறியல் போராட்டம்
• தமிழர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்தவர்கள் மறியல்
• போராட்டத்தால் டி.டி.கே சாலையில் போக்குவரத்து பாதிப்பு
• சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்கிறது போலீஸ்
அண்ணாசாலை, சென்னை
• எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அண்ணா சாலையில் மறியல்
• ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம்
சேப்பாக்கம், சென்னை
• சென்னை சேப்பாக்கத்தில் ரஜினி ரசிகர்கள் கைது
• காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என அடையாள அட்டை விநியோகித்தவர்கள் கைது
• அண்ணாசலையில் வந்த ஆம்புலன்சை மறித்தனர் போராட்டக்காரர்கள்
TN Peoples protest against IPL Match to support Cauvery & Sterlite Issue