தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியா முழுவதும் எவருமே எதிர்பாராத நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இது கொரோனா 2வது அலை என கூறப்பட்டாலும் இது சுனாமியாக உருவெடுத்து உயிர்களை கொன்று குவித்து வருகிறது.
இந்தியாவில் வட மாநிலங்கள் பலவற்றில் ஆக்ஸிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மோடி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க இங்கும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், தங்களுக்கு அனுமதி வழங்கினால் தங்களுடைய ஆலையிலிருந்து 500 டன் ஆக்ஸிஜனை இலவசமாக தயாரித்து வழங்க தயாராக உள்ளதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக பதிலளித்த தமிழக அரசு, ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்தது.
அதே சமயம் மாநில அரசு விரும்பினால் ஸ்டெர்லைட் ஆலையை மாநில அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக திங்கட்கிழமையன்று பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.
அந்த கூட்டத்தில்…”ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் தயாரிப்புக்காக 4 மாதங்களுக்கு மட்டும் இயக்க அனுமதிக்கலாம் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.
ஸ்டெர்லைட்டைத் திறக்க திமுக, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டத்தில் ஒருமித்த ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தற்காலிக அனுமதி வழங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை அனுமதிக்கலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிக அனுமதியளிக்கலாம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
TN parties endorse reopening of Sterlite plant in Tuticorin for oxygen production