ஆக்ஸிஜன் தயாரிக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக கட்சிகள் தீர்மானம்

ஆக்ஸிஜன் தயாரிக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக கட்சிகள் தீர்மானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tuticorin sterliteஇந்தியா முழுவதும் எவருமே எதிர்பாராத நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இது கொரோனா 2வது அலை என கூறப்பட்டாலும் இது சுனாமியாக உருவெடுத்து உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

இந்தியாவில் வட மாநிலங்கள் பலவற்றில் ஆக்ஸிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மோடி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க இங்கும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்த நிலையில், தங்களுக்கு அனுமதி வழங்கினால் தங்களுடைய ஆலையிலிருந்து 500 டன் ஆக்ஸிஜனை இலவசமாக தயாரித்து வழங்க தயாராக உள்ளதாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக பதிலளித்த தமிழக அரசு, ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்தது.

அதே சமயம் மாநில அரசு விரும்பினால் ஸ்டெர்லைட் ஆலையை மாநில அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

இது தொடர்பாக திங்கட்கிழமையன்று பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க இன்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில்…”ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் தயாரிப்புக்காக 4 மாதங்களுக்கு மட்டும் இயக்க அனுமதிக்கலாம் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது.

ஸ்டெர்லைட்டைத் திறக்க திமுக, காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டத்தில் ஒருமித்த ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தற்காலிக அனுமதி வழங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை அனுமதிக்கலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிக அனுமதியளிக்கலாம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

TN parties endorse reopening of Sterlite plant in Tuticorin for oxygen production

ரெண்டு படம் போதும்.; இனி போனிகபூர் வேண்டாம்..; அஜித்தின் அடுத்த படத் தயாரிப்பாளர் இவரா.?

ரெண்டு படம் போதும்.; இனி போனிகபூர் வேண்டாம்..; அஜித்தின் அடுத்த படத் தயாரிப்பாளர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்து வரும் படங்களில் நடித்து வந்தார் அஜித்.

இதில் இதில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது ‘வலிமை’ படம் உருவாகி வருகிறது.

இந்த இரு படங்களையும் வினோத் இயக்கினார்.

ஆனால் ‘வலிமை’ பட படப்பிடிப்புகள் முடியாமல் தள்ளி கொண்டே செல்கிறது.

இதனால் பர்ஸ்ட் லுக்கை கூட ரிலீஸ் செய்யவில்லை. தற்போது கொரோனா 2வது அலையும் இதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

இதனையடுத்து போனிகபூர் தயாரிப்பில் மீண்டும் அஜீத் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் ஒரே தயாரிப்பாளருடன் தொடர்ந்து படங்கள் செய்ய வேண்டாம். சின்ன இடைவெளி இருக்கட்டும் என நினைக்கிறாராம் தல அஜித்.

எனவே தன் அடுத்த பட கால்ஷீட்டை கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் என்பவருக்கு கொடுத்து விட்டாராம் தல.

‘வலிமை’ பட தமிழ்நாட்டு உரிமையை அன்புச்செழியன் தான் வாங்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Ajith next film with this production house?

மருத்துவமனையில் பெட் வசதியில்லை.; ‘அரசு’ & ‘திருப்பதி சாமி குடும்பம்’ படத்தயாரிப்பாளர் பாபு ராஜா மரணம்

மருத்துவமனையில் பெட் வசதியில்லை.; ‘அரசு’ & ‘திருப்பதி சாமி குடும்பம்’ படத்தயாரிப்பாளர் பாபு ராஜா மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Babu Rajaசூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய பாபு ராஜா இதய கோளாறு காரணமாக வடபழநி விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா பரிசோதனை செய்துள்ளனர் அதில் அவருக்கு 10 சதவீதம் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதை சரி செய்து விடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் பெட் வசதி இல்லாததால், வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருந்த நிலையில், நேற்றிரவு மரணமடைந்து விட்டார்.

அவருக்கு மும்தாஜ் என்ற மனைவியும், ஜாவித் அஷ்ரப், ஜாகின் அஷ்ரப், ஜாபர் அஷ்ரப் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

53 வயதாகிய பாபுராஜா, தனது இரு மகன்களை வைத்து ‘திருப்பதி சாமி குடும்பம்’ என்ற படத்தை தயாரித்து சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

மேலும் ‘அரசு’ & ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’ படங்களையும் தயாரித்துள்ளார்.

பாபு ராஜா உடல் நேரடியாக பள்ளிவாசலுக்கு எடுத்துச் செல்ல உள்ளதாக அவரது மகன் ஜாகின் அஷ்ரப் தெரிவித்தார்.

தொடர்புக்கு…

+919344991121

Arasu film producer Babu Raja dies due to corona

‘தளபதி 65’ பட நாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா.; என்ன சொல்கிறார் பூஜா..?

‘தளபதி 65’ பட நாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா.; என்ன சொல்கிறார் பூஜா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pooja hegdeமாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.

அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மலையாள நடிகை அபர்ணா தாஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

மேலும் முதல்முறையாக விடிவி கணேஷ் இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்துள்ளார்.

தற்காலிகமாக ‘தளபதி 65’ என்று அழைக்கப்படும் இந்தப் பட ஷூட்டிங்கிற்காக கடந்த சில தினங்களாக ஜார்ஜியாவில் இருந்தனர் படக்குழுவினர்.

இதில் நாயகிக்கான காட்சிகள் இல்லை என்பதால் அவர் ஜார்ஜியா செல்லவில்லை.

நேற்று விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியா திரும்பினர்.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், நாயகி பூஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவரே தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

எனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதி. எனவே வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

என்னை சமீபத்தில் சந்தித்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

தங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. நான் குணமாகி வருகிறேன்.

தயவு செய்து வீட்டில் இருங்கள், பத்திரமாக இருங்கள் என அறிவுறுத்தி உள்ளார் பூஜா ஹெக்டே.

Thalapathy 65 heroine tests positive for COVID 19

விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்

விவேக் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivek Vijay (2)‘சின்ன கலைவாணர்’ நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் ஏப்ரல் 17 அதிகாலை 4.45 மணியளவில் விவேக் காலமானார். அவருக்கு வயது 59.

அப்போது நடிகர்கள் நேரிலும் சிலர் ட்விட்டரிலிம் இரங்கல் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விஜய் ஜார்ஜியாவில் தளபதி 65 பட படப்பிடிப்பில் இருந்ததால் விவேக்கின் இறுதி ஊர்வலத்திற்கு அவரால் வரமுடியவில்லை.

இந்த நிலையில் நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய விஜய் இன்று விவேக்கின் குடும்பத்தினரை சாலிக்கிராமத்தில் நேரில் சந்தித்துள்ளார்.

அவர்களிடம் துக்கம் விசாரித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இத்தகவலை விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அஹ்மது தெரிவித்துள்ளார்.

Thalapathy Vijay paid a condolence visit to late actor Vivek’s home.

BREAKING ஏப்.26 முதல் தியேட்டர்கள் & வழிபாட்டு தலங்கள் ஜிம் பார்கள் சலூன் மூடல்.; இ-பாஸ் கட்டாயம்.. தமிழக அரசு ஆர்டர்

BREAKING ஏப்.26 முதல் தியேட்டர்கள் & வழிபாட்டு தலங்கள் ஜிம் பார்கள் சலூன் மூடல்.; இ-பாஸ் கட்டாயம்.. தமிழக அரசு ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு.

உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி.

ஏப்.26ஆம் தேதி முதல் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதியில்லை.

புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம்.

சென்னை உள்பட மாநகராட்சிகளில், நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை.

உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக 16 சிறப்பு ரயில்கள் ரத்து.

கூடுதல் தகவல்..

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் : மத்திய அரசு.

Worship places Theatres Bars Saloons to be closed from April 26

More Articles
Follows