தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மாதம் ஜனவரி 9ஆம் தேதி ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் உலகமெங்கும் 3 மொழிகளில் வெளியானது.
இந்த படம் உலகமெங்கும் வசூல் வேட்டை செய்த போதிலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் நஷ்டம் அடைந்துள்ளதாக சில விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்த நிலையில் தர்பார் நஷ்டம் குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களிடம் செய்தியாளர்களிடம் கேட்டுள்ளனர்.
தர்பார் திரைப்படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அவர்களுக்கு அரசு உதவ தயாராக உள்ளது.
ரஜினியின் ‘தர்பார்’ MASS? LOSS?; என்ன நடக்கிறது..? ஒரு பார்வை
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நடக்கவில்லை. எனவே புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. அரசு அதிகாரி ஒருவர் தான் பார்க்கிறார். எனவே அவர்கள் அரசை அனுகினால் தேவையானவற்றை செய்ய அரசு தயாராக உள்ளது என்றார்.
மேலும் ஆன்லைன் மூலம் அரசே டிக்கெட் விற்பனை செய்யும் விவகாரத்தில் முடிவு எடப்பட்டுள்ளதாகவும், விரைவில் விலை நிர்ணயிக்கப்படும் எனவும், பண்டிகை காலங்களில் சிறப்பு காட்சிகளுக்கும் அரசே டிக்கெட் விலையை நிர்ணயிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
திருட்டு வி.சி.டி.யை ஒழிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், திருட்டு விசிடியை ஒழிக்க அரசால் மட்டும் முடியாது எனவும், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மூன்று துறையினரும் ஒத்துழைத்தால் தான் அரசால் கட்டுப்படுத்த முடியும் எனவும் திரையரங்கில் படத்தை வெளியிடும் போது தான் திருட்டு விசிடி வெளி வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
TN Minister says Govt ready to help in Darbar movie loss