தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
க்யூப் டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் திரையுலகினர் கடந்த மார்ச் 1 முதல் வேலை நிறுத்தப் போராட்டம் செய்து வருகின்றனர்.
இதனால் புதுப்படங்கள் வெளியாகவில்லை, சூட்டிங் மற்றும் சினிமா நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
திரையுலகைச் சேர்ந்த பல்வேறு சங்கங்கள் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் சுமூகமான தீர்வு ஏற்படவில்லை.
இதனிடையில் சினிமா துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று கடம்பூர் ராஜூவை, விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
அந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு 2 நாளில் ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
எனவே விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
TN Govt will arrange Tripartite talks to resolve Tamil Cinema Strike