தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் 2வது அலையால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. தினம் தினம் லட்சக்கணக்கான உயிர்கள் மரணிக்கின்றன.
இந்தியாவிலும் நிலைமை கை மீறி போய்விட்டது.
இதனை தொடர்ந்து இன்று ஏப்ரல் 18ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட ஆலோசனைப்படி சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்
கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த ஏப்ரல் 20 முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
அந்த சமயத்தில் இரவு நேர ஊரடங்கின் போது, தனியார்/ பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.
தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை செயல்பட அனுமதியில்லை.
ஆனால் அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம் , மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.
அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி, மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
மேலும் ஊடகம் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்
பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்
தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
மேலும் இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.
அத்துடன் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் ,சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட் அனுமதிக்கப்படமாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
TN Govt says Complete lockdown on Sundays. Night Curfew from 10PM to 4 AM
மற்ற விவரங்கள் இதோ…
*தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.*
தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்.
இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை.
முழு ஊரடங்கு நாளில் இறைச்சி, மீன், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்பட தடை – தமிழக அரசு.
முழு ஊரடங்கு நாளில் ஞாயிறு அன்றும் திருமண நிகழ்ச்சியில் 100 பேர் வரை பங்கேற்கலாம் – தமிழக அரசு
வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை. அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி – தமிழக அரசு.
அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அனைத்து நாட்களிலும் தடை.உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல் – தமிழக அரசு.
இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல் – தமிழக அரசு.
ஊடகங்களுக்கு 24X7 அனுமதி அத்தியாவசிய உற்பத்திகளுக்கு 24X7 அனுமதி – தமிழக அரசு.
கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.
டீக்கடைகள், ஹோட்டல்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி – தமிழக அரசு.
ஷாப்பிங் மால்கள், ஜவுளிக் கடைகள் உள்ளிட்டவை இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி – தமிழக அரசு…