Breaking: மத்திய அரசின் எடுபிடிதான் தமிழக அரசு : கமல் கடும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

அதற்கு முன் தற்போது சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது….

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை.

அதிமுக அரசு ஒரு போலியான உண்ணாவிரதத்தை நேற்று மேற்கொண்டது. அதனால் எதுவும் நடக்கப்போவதில்லை.

மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசுக்கு எடுபிடி வேலை பார்த்து வருகிறது.

இன்று நடக்கும் எங்கள் பொதுக்கூட்டம் காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்கும் என்று பேசினார் கமல்ஹாசன்.

TN Govt is working for Central Govt not for Peoples says Kamalhassan

சமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாரிசாக நடிகர் விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனி ஒருவன் நினைத்தால் எதையும் தைரியமாக எதிர்த்து போராடலாம் என வாழ்ந்து காட்டி வருபவர் 80 வயது இளைஞர் டிராபிக் ராமசாமி.

அண்மையில் இவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

ஜெயலலிதா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளை கலங்கடித்தவர் இவர்.

பெரும் அரசியல் போராட்டங்கள் நிறைந்த இவரின் வாழ்க்கையை டிராபிக் ராமசாமி என்ற பெயரில் படமாக எடுத்து வருகின்றனர்.

விக்கி என்பவர் இயக்கி வரும் இப்படத்தில் டிராபிக் ராமசாமியாக விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் நடித்து வருகிறார்.

இவருடன் விஜய்சேதுபதி, ரோஹினி, சீமான், பிரகாஷ் ராஜ், குஷ்பு, விஜய் ஆண்டனி, எஸ்.வி சேகர் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.

இந்த படம் குறித்து டிராபிக் ராமசாமியின் உதவியாளர் பாத்திமா செய்தியாளர்களிடம் பேசும்போது…

இந்த படத்தின் க்ளைமாக்ஸில் டிராபிக் ராமசாமி தன் அரசியல் வாரிசாக விஜய்யை கை காட்டுகிறார் என்றும், விஜய்யின் அரசியல் விளம்பரத்திற்காக டிராபிக் ராமசாமியின் புகழை பயன்படுத்திக்கொள்வதாக் குற்றம்சாட்டினார்.

ஆனால் பாத்திமாவின் இந்த கருத்தை நிஜ டிராபிக் ராமசாமியும் படக்குழுவினரும் மறுத்துள்ளனர்.

Actor Vijay connected with Traffic Ramasamy life history

சில்க் படத்தில் ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி பாய் கேரக்டரில் நட்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒளிப்பதிவில் செய்த மேஜிக் மூலம் தனது எல்லைகளை மொழி கடந்து விரிவாக்கிய நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணியம், சிறந்த நடிகராகவும் சாதித்தவர்.

தனித்துவமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தும், கச்சிதமாக கதாபாத்திரங்களில் பொருந்தியதும் அவரது வெற்றிக்கு காரணம். நட்டி மீண்டும் நம்மை வசீகரிக்க மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தனித்துவமான த்ரில்லர் கதையோடு வந்திருக்கிறார்.

சில்க் என்ற அந்த படத்தில் தான் அடுத்து நடிக்கிறார்.

வழக்கத்துக்கு மாறான தலைப்பு குறிப்பாக திரில்லர் படத்துக்கு இல்லையா.

இரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ் அந்த சந்தேகத்தை விளக்குகிறார்கள்.

ஆ மற்றும் அம்புலி படங்களின் இயக்குனர் ஹரீஷ் கூறும்போது, “படத்தில் சில்க் புடவைக்கும், ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்யும் நாயகனுக்கும் ஒரு தொடர்பு உண்டு.

மேலும் படத்தின் கதைக்களம் காஞ்சிபுரம் பின்னணியை கொண்டது.

இந்த கதையை நட்டிக்கு சொன்னவுடன் அவர் இந்த மாதிரி ஒரு கதைக்கு தான் காத்திருந்தேன் என்றார்.

படத்தின் நாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை, சென்சேஷனல் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

சத்யா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த அருண்மணி படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

படத்தை பற்றிய எந்த தகவலையும் வெளியிடாத இரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ், நிச்சயமாக இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்கிறார்கள்.

Natty as Online shopping delivery boy in Silk movie

கர்நாடாகாவில் ரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு; காலா ரிலீஸ் ஆகுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த மார்ச் 2018ல் ஒரு தமிழ் படம் கூட வெளியாகவில்லை.

தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஒட்டு மொத்த திரையுலகினரும் ஆதரவு கொடுத்துள்ளதால் பெரும்பாலான படங்கள் ரிலீசுக்கு தயாராகியும் வெளியாகவில்லை.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகிய காலா திரைப்படம் அறிவித்தப்படி ஏப்ரல் 27ல் வெளியாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் இப்படத்தை வெளியிடும் லைகா நிறுவனம், தயாரிப்பாளர்கள் சங்க நடவடிக்கைக்கு நாங்கள் கட்டுபட்டு நடப்போம் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் காவிரி நீர் விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால் கன்னட அமைப்பை சேர்ந்த வட்டாளு நாகராஜ் என்பவர் தலைமையில் ரஜினிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் காலா படத்தை கர்நாடாகவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து வருகின்றனர்.

இதனால் காவிரி பிரச்சினையால் காலா ரீலீஸ் மேலும் சிக்கல்கள் உருவாகும் எனத் தெரிகிறது.

இதுவரை உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.

இதனால் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கடை அடைப்பு உள்ளிட்ட பல போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அறம் 2 படத்திற்காக ஜாதி-மத கொடுமைகளை பேசும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து மாபெரும் ஹிட்டான படம் ‘அறம்’.

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை, கலெக்டரான நயன்தாரா காப்பாற்றப் போராடுவதுதான் படத்தின் கதை.

இந்த கதையும் இதன் உருவாக்கமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

எனவே இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்தார் கோபி நயினார்.

இதன் படப்பிடிப்பு வருகிற 2018 செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது.

இதில் மத ரீதியிலான வன்முறைகள், சாதிய கொடுமைகளை எதிர்த்து நயன்தாரா போராடுவது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

நயன்தாரா தற்போது பிஸியாகவுள்ளதால் குறுகிய காலப் படம் ஒன்றை கோபி நயினார் உருவாக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

Gopi Nayinar gearing up to make Aramm sequel

சதீஷ்-சூரி இல்லாமல் சிவகார்த்திகேயனுடன் இணையும் மற்றொரு காமெடியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்ஜிஆருக்கு நாகேஷ், சத்யராஜீக்கு கவுண்டமணி என்பதுபோல ஒவ்வொரு ஹீரோவுக்கும் சில காமெடியன்களோடு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்.

இன்றைய தலைமுறை நடிகர்களில் சிவகார்த்திகேயனுக்கு சூரி மற்றும் சதீஷ் உடன் நன்றாகவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி வருகிறது.

பெரும்பாலும் சிவகார்த்திகேயன் படங்களில் இவர்கள் இருவரும் மாறி மாறி ஜோடி சேர்ந்து காமெடி செய்து வந்தனர்.

தற்போது உருவாகியுள்ள சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயனுடன் சூரி இணைந்துள்ளார்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவரின் இன்று நேற்று நாளை படத்தில் கருணாகரன் காமெடியில் கலக்கியிருந்தார்.

எனவே அவரைத்தான் சிவகார்த்திகேயனுடன் காமெடி செய்ய வைக்கவுள்ளாராம்.

ரகுல் பிரித்தி சிங் நாயகியாக நடிக்கவுள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, 24ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

More Articles
Follows