திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை கைப்பற்றிய தமிழக அரசு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக உள்ளார் நடிகர் விஷால்.

இவரின் தலைமையை எதிர்த்து பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

எதிரணியில் உள்ள டி.சிவா, ஏஎல். அழகப்பன், சுரேஷ் காமாட்சி, எஸ்வி. சேகர் உள்ளிட்டோர் தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இறுதியில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டும் போட்டனர்.

இதுகுறித்து தெரிவித்த அவர்கள், ‘தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக் காலம் முடிந்த பிறகும் அதில் விஷால் தொடர்கிறார். வைப்புநிதியாக உள்ள 7 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளார்.

அவர் தலைவராகப் பொறுப்பேற்றபோது கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை’ என்றும் புகார் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து சங்கங்களின் பதிவாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மேலும், தயாரிப்பாளர் சங்க கணக்குகளை நிர்வகிக்க மாவட்ட பதிவாளர் என்.சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

TN Government action against Tamil cinema Producers council

அண்ணி ஜோதிகாவுடன் நடிக்கும் கார்த்தி.; அப்பாவாக சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜித்து ஜோசப்.

இவர் தற்போது இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார்.

இவர்கள் நிஜ வாழ்க்கையில் கார்த்தியின் அண்ணி என்பது தங்களுக்கு தெரிந்த ஒன்றுதானே.

இவர்களின் தந்தையாக சத்யராஜ் நடிக்கவுள்ளார்.

வில்லனாக மலையாள நடிகர் அன்சன் பால் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இன்று ஏப்ரல் 27ஆம் தேதி முதல் இதன் சூட்டிங் ஆரம்பமாகியுள்ளது.

ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

வயாகாம் 18 என்ற நிறுவனம் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இப்படத்தை தயாரிக்கிறது.

Jyothika Sathyaraj and Karthis film with Jeethu Joseph starts rolling

அஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசமாக மாறிய சன் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019 பொங்கலை முன்னிட்டு வெளியான படம் அஜித்தின் ‘விஸ்வாசம்’.

இயக்குனர் சிவா இயக்கிய இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருந்தது. நயன்தாரா நாயகியாக நடிக்க, இமான் இசையமைத்திருந்தார்.

இப்படம் சூப்பர் ஹிட்டாகி வசூலை அள்ளியது.

இந்நிலையில் இந்த படத்தின் சாட்லைட் உரிமையை வாங்கியிருக்கும் சன் டிவி நிறுவனம் ‘விஸ்வாசம்’ படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பு செய்யவுள்ளது.

இந்த அறிவிப்பால் தல ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

Viswasam will be telecasted on Sun tv on Ajith Birthday

விஜய் கூட லைலா நடிக்கலையே.. அப்புறம் இது எப்படி.? உள்ளே படிங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம், அஜித், சூர்யா, பிரசாந்த் ஆகியோருடன் நடித்து பிரபலமானவர் நடிகை லைலா.

இவர் பல வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது ஆலிஸ் என்ற படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார்.

இந்நிலையில் இவர் விஜய்யுடன் ஜோடியாக போட்டோவை வெளியிட்டு ‘எங்கிட்ட எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ’ என கமெண்ட் அடித்திருந்தார்.

இது என்ன திரைப்படம்? என சவாலும் விட்டிருந்தார்.

விஜய்யோடு லைலா நடிக்கவில்லையே? அப்புறம் எப்படி என பலர் கன்ப்யூஸ் ஆனார்கள்.

ஆனால் ஒரு சிலர் மட்டும் சரியாக கண்டு பிடித்தனர்.

விக்ரமன் இயக்கிய, ‘உன்னை நினைத்து’ படத்தில் முதலில் விஜய்தான் நடித்தார். பின்னர் அப்படத்திலிருந்து விலகினார். அதன் பின்னர்தான் சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூவே உனக்காக படத்தில் காதலை போற்றும் வகையில் தன் இதயத்தில் ஒருத்திக்கே இடம் என டயலாக் பேசியிருப்பார் விஜய். இப்படம் விஜய் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அதன்பின்னர்தான் உன்னை நினைத்து படத்தில் கமிட் ஆனார்.

இந்த படத்தில் காதல் தோல்விக்கு பிறகு வேறு ஒரு பெண்ணை மணப்பதாக கதை இருந்தது.

எனவே, பூவே உனக்காக ஏற்படுத்திய தாக்கத்தை உடனே மாற்றக்கூடாது என விஜய் அப்போது முடிவெடுத்தாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Actress Laila released rare movie click with Vijay goes viral

இஸ்லாமிய முறைப்படி குறளரசனின் திருமணம் நடந்தது; ஸ்லிம் லுக்கில் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டி.ராஜேந்தரின் இளைய மகனும் சிம்புவின் தம்பியுமான குறளரசனின் திருமணம், நேற்று சென்னையில் நடைபெற்றது.

இவர் சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்திற்கு இசையைமத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் எந்த படங்களுக்கும் இசையமைக்கவில்லை.

தான் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நபீலா என்ற பெண்ணை காதலித்த காரணத்தால் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

இந்நிலையில் தான் குறளரசன் -நபீலா அஹமத் ஆகியோரது திருமணம் சென்னை, அண்ணா நகரில் உள்ள மணமகள் வீட்டில் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது.

இந்த திருமண வரவேற்பு வரும் 29-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெறவுள்ளது.

தன் தம்பி திருமணத்தில் கலந்துக் கொள்வதற்காக லண்டனில் இருந்த சென்னை வந்திருந்தார் சிம்பு.

அப்போது அவர் பார்ப்பதற்கு மிகவும் ஸ்லிம்மாக இருந்தார். அந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விரைவில் `மாநாடு’ பட ஷூட்டிங்கில் கலந்துக் கொள்ளவிருக்கிறார் சிம்பு.

அதன் பின்னர் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் `மஃப்டி’ பட ரீமேக், எம்.ஆர்.ராதா பயோபிக் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

Kuralarasan ties the knot as per Islam customs STRs slim look at function

கடலோரகவிதைகள் ரேகா மகனாக யோகிபாபு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரதிராஜாவின் கடலோர கவிதை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரேகா . இவர் ,1990 – களில் தமிழ்,மலையாள முன்னணி கதா நாயகர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜோடியாக நடித்து, பிரபல கதாநாயகிகள் பட்டியலில் இருந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் இவர் , தற்போது அம்மா,அக்காள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் தர்மபிரபு படத்தில் அவருக்கு அம்மாவாக ரேகா நடித்து இருக்கிறார். யமன் மற்றும் யாமலோக பின்னணி கொண்ட கதை இது. ஜனனி அய்யர், ராதாரவி, ரமேஷ் திலக், போஸ் வெங்கட் , மனோபாலா,மொட்டை ராஜேந்திரன், கும்கி அஸ்வின் ,மாஸ்டர் கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். அழகம்பெருமாள் வில்லனாக நடித்துள்ளார். யுகபாரதி எழுதிய பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி டைரக்டு செய்திருப்பவர் முத்து குமரன்.
யோகிபாபுவுடன் ரேகா மற்றும் படத்தில் இடம் பெரும் நடிகர் நடிகைகள் நடித்த காட்சிகள், பிரம்மாண்டமாக அமைக்க பட்டிருந்த யாமலோகம் அரங்கில் படமாக்கப்பட்டது. ஏ. வி. எம் . ஸ்டூடியோ,மற்றும் சென்னை, பொள்ளாச்சி சுற்றுவட்டரங்களில் வளர்ந்துள்ள இப்படம் மே மாதம் திரைக்கு வருகிறது.

More Articles
Follows