தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என தமிழக இளைஞர்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ஆனால் ஜல்லிக்கட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால், மத்திய அரசு ஒன்றும் செய்ய முடியாது என மோடி தெரிவித்து விட்டார்.
இதனையறிந்த போராட்டக்காரர்கள் தங்கள் அறவழிப் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இவர்களுக்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை சென்னை திரும்ப இருந்த முதல்வர் தன் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.