தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தை அச்சுறுத்தும் விதமாக நாளொரு மரணம் டெங்குவால் நடந்து வருகிறது.
எனவே டெங்கு காய்ச்சலுக்கு உடனடியான தீர்வை அரசு மேற்கொள்ள வேண்டும் என சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்திருந்தார் கமல்.
தற்போது சென்னை கோபாலபுரம் பகுதி பள்ளியைச் சேர்ந்த பார்க்கவ் என்ற மாணவர் டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்தார்.
எனவே சற்றுமுன் மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.
அதில்.. செவிடன் காதில் ஊதிய சங்குபோல் உள்ளது. அரசு எதற்கு செவி சாய்க்கவில்லை.
இதுபோன்ற மரணங்களை தடுக்க முடியாத அரசு பதவி விலக வேண்டும்.
அரசு தூங்குகிறது. பெற்றோரே விழித்திருங்கள். இனி நாம்தான் காவலர்.
நமக்கு வேண்டிய பதிலை பெறும் வரை அமைதியாக இருக்காதீர்கள்” என பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Kamal HaasanVerified account @ikamalhaasan 14m14 minutes ago
அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்.
Kamal HaasanVerified account @ikamalhaasan 14m14 minutes ago
செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும்.
TN ADMK Govt must resign Parent must get aware of Dengue fever says Kamal