1 கோடி பேர் என் கட்சியில் இணையவில்லை; உண்மையை சொன்ன ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான இன்று செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

தமிழருவி மணியன் தலைமையில் உள்ள காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைய உள்ளதா? என்று கேட்டனர்.

இணைந்தால் மகிழ்ச்சி. என்றார்.

ரஜினி மக்கள் மன்றத்தில் இதுவரை ஒரு கோடி இணைந்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளதே இது உண்மையா? என்று கேட்டனர்.

அந்த செய்தி தவறானது. அந்த இலக்கை நோக்கி பயணிக்கிறோம். என்றார்.

பொதுவாக புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் கூட எங்கள் கட்சியில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இரண்டு கோடி மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பார்கள்.

ஆனால் முதன்முறையாக அரசியலில் இறங்கும் ரஜினி இப்படி உண்மைய சொல்லியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் காமராஜர் போன்ற தலைசிறந்த அரசியல்வாதிகள் தமிழகத்தில் உருவாக வேண்டும் எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Till now 1 crore members not joined in Rajini Makkal Mandram says Rajini

நேர்மை சிறுவன் யாசினை பாராட்டி கல்வி செலவை ஏற்றார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடுரோட்டில் கிடந்த ரூ. 50,000 பணத்தை தானே எடுத்துக் கொள்ளாமல் காவல் துறையிடம் ஒப்படைத்த சிறுவன் யாசின் பற்றி பார்த்தோம்.

அவனுடைய நல்ல உள்ளத்துக்கு பலரும் உதவி செய்ய காத்திருக்க, அவனோ எனக்கு உதவிகள் வேண்டாம். ரஜினி அங்கிளை பார்க்கனும் என்றான்.

இத்தகவலை அறிந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் ரஜினிக்கு தகவலை தெரிவித்தனர்.

அதன்படி ஈரோட்டில் இருந்து தன் வீட்டுக்கு அந்த சிறுவனை வரவைத்து அவனை பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

அந்தச் சிறுவனின் செயலைப் பாராட்டி அவனுக்கு ஒரு தங்க சங்கிலியையும் பரிசாக வழங்கினார்.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி…

“பணத்துக்காகக் கொலை, கொள்ளை எனப் பல விசயங்கள் நடக்கும் இந்தக் காலகட்டத்தில், யாசின் தனக்கு கிடைத்த பணத்தை எண்ணுடையது இல்லை எனப் திருப்பி தந்துள்ளான்.

இந்தக் குணம், இந்த மனம் இதை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இவனைப் பெற்றவர்கள் இவ்வளவு பண்பானவனாக வளர்த்தவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

தற்போது சிறுவன் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார். அவன் அங்கேயே படிக்கட்டும் என நான் பெற்றோர்களிடம் கூறியுள்ளேன்.

யாசின் எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டுமென ஆசைப்பட்டாலும், அவனை என் பிள்ளைபோல் நினைத்து நான் படிக்க வைப்பேன்.

இவர்களைப் போன்ற குழந்தைகள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள் . காமராஜரின் பிறந்த நாளான இன்று யாசினை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்.

Rajini met Yaasin who handed rupees 50 thousands to police from road

உதவி வேண்டாம்.; ரஜினி அங்கிளை பார்க்கனும்…; நேர்மை சிறுவனின் ஆசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் யாசின், அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த வாரம், பள்ளிக்குச் செல்லும் வழியில் அவனது கண்களில் தென்பட்டது ஒரு பை. சாலையோரத்தில் நாதியற்று கிடக்கும் அந்தப் பையை திறந்து பார்த்த சிறுவன் திகைத்து நிற்கும்படி கத்தை கத்தையாக பணம்.

மொத்த பணத்தையும் ஆசிரியரிடம் ஒப்படைக்க, ஆசிரியர் அவனை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடந்ததைக் கூறினார்.

பணத்தைப் பார்த்து சிறுவனுக்கு வராத ஆசையைக் கண்டு வியந்த போலீசார், அவன் நேர்மைக்கு ஒரு சல்யூட் அடித்தனர்.

யாசினின் நேர்மையைப் பாராட்டி வாழ்த்துகளும் கூறினார்.

மேலும் பலரும் இவனுக்குத் தேவையான உதவிகள் செய்ய முன்வந்தபோது யாசினின் பெற்றோர்கள் அதனை மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் ஈரோடு ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் யாசின் மற்றும் அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தனர். அப்போது யாசினுக்கு ஏதேனும் உதவிகள் தேவையென்றால் அதனைச் செய்ய தயாராக உள்ளதாகக் கூறினார்கள்.

“உதவிகள் எதுவும் வேண்டாம். ஆனால் ரஜினி ஆங்கிளை நேரில் பார்க்கணும், நான் அவருடைய ரசிகன். எனக்கு அவரை பார்க்கணும் ரொம்ப நாள் ஆசை” என்று கூறியுள்ளான்.

நேர்மையாக வாழ நினைக்கும் இந்தச் சிறுவனின் ஆசையை விரைவில் பூர்த்தி செய்வோம், ரஜினிகாந்தை சந்திக்க ஏற்பாடுகள் செய்வோம் என்று மக்கள் மன்றத்தினர் உறுதி அளித்துள்ளனர்.

Erode boy 6 years Yaasin handed 50000 rupees wants to meet Rajinikanth

ரஜினி படத்தில் பஹத் பாசில் நடிக்கிறாரா..? கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலா படம் ரிலீஸ் ஆகும் முன்பே கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் ரஜினிகாந்த்.

ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலும் நடிப்பதாக செய்தி வெளியானது.

ஆனால் இந்த தகவலில் சிறிதும் உண்மையில்லை என்று மறுத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

டபுள் ரோபோஸ்; சிங்கிள் லவ்… 2.0 பட ஸ்டோரி ஒன்லைன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர்-ரஜினி-சன் பிக்சர்ஸ் ஆகியோரது கூட்டணியில் உருவான படம் எந்திரன்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த அப்படத்தில் சில பாடல்களை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருந்தார்.

தற்போது அது போன்ற ரோபோ கதை கொண்ட 2.0 படத்திலும் இவர் பாடல்களை எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது…

’எந்திரன்’ படத்தில் பாட்டு எழுதும்போது ஒருதலைக் காதல் பற்றி சொன்னேன்.

ஒரு பெண் மீது எந்திரத்துக்கு வரும் காதலை எழுதினேன்.

`2.0’ படத்துல இரண்டு எந்திரங்களுக்கு இடையேயான காதலை எழுதியிருக்கேன்’ என தெரிவித்துள்ளார்.

அநேகமாக இது ரஜினி மற்றும் எமி ஜாக்சன் ஆகிய இரு ரோபோக்களை பற்றிய காதலாக இருக்கும் என கூறப்படுகிறது.

நடிகை ஸ்ரீரெட்டி படுக்கை வரிசையில் ஸ்ரீகாந்த்-லாரன்ஸ்?; மிரட்டும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தன்னுடன் படுக்கை பகிர்ந்த ஒவ்வொரு திரையுலகினரின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.

தனக்கு சினிமா சான்ஸ் வாங்கி தருவதாக கூறி அவர்கள் என்னுடன் செக்ஸ் வைத்துக் கொண்டார்கள். ஆனால் எவரும் வாய்ப்பு தரவில்லை என குற்றம் சாட்டி வருகிறார்.

இதுநாள் வரை தெலுங்கு நட்சத்திரங்களை பற்றி கூறி வந்த இவர், தற்போது தமிழ் நட்சத்திரங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகிறார்.

முதலில் ஏஆர். முருகதாஸ் பெயரை கூறியிருந்தார். தற்போது அந்த வரிசையில் நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோரின் பெயரையும் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய சமூக வலைத்தள முகநூல் பக்கத்தில்…

விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், ஆனாலும் கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிடுவேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகர்கள் பற்றி நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். இது தென்னிந்திய திரையுலகிற்கே அவமானம்.

சில முக்கிய நபர்கள் உண்மையை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள். இதோடு முடிந்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால் நியாயம் கிடைப்பதற்கான முயற்சிகளை எடுக்க அவர்கள் முன்வரவில்லை.” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

More Articles
Follows