‘டிக்டாக்’ பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி..; என்ன பிரச்சனையாம்.?

‘டிக்டாக்’ பிரபலம் ஜி.பி முத்து தற்கொலை முயற்சி..; என்ன பிரச்சனையாம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GP Muthuடிக்டாக் செயலி மூலம் இந்தியாவில் பல பிரபலங்கள் உருவாகினர். அவர்களில் ஒருவர்தான் ஜி.பி முத்து.

டிக்டாக்க்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட போது மனம் உடைந்த அவர், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.

தற்போது டிக்டாக் தடை காரணமாக இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் குடும்ப பிரச்சனை காரணமாக வீடியோக்களை பதிவிட முடியவில்லை என வருத்தத்துடன் வீடியோ வெளியிட்டார் ஜி.பி முத்து.

இந்த நிலையில் திடீரென அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதால் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் படத்தையும், பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜிபி. முத்து.

Tik Tok fame GP Muthu shocks by suicide attempt

மத்திய அரசு கட்டாயமாக தியேட்டர்களை திறக்க சொல்லவில்லை..; அமைச்சர் தந்த அதிர்ச்சி

மத்திய அரசு கட்டாயமாக தியேட்டர்களை திறக்க சொல்லவில்லை..; அமைச்சர் தந்த அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kadambur rajuதூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி பயணியர் விடுதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

வருகிற அக்டோபர் 13ந் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு வருகிறார்.

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர்.செ.ராஜூ ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர். அப்போது…

கொரோனா ஊரடங்கு காலத்திலும் திரைப்படத்துரையினருக்கு அரசு சில தளர்வுகளை வழங்கியுள்ளது.

திரையரங்குகளை திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் தான் வெளியிட்டுள்ளது. ஆனால் கட்டாயமாக திரையரங்குகளை திறக்க சொல்லவில்லை.

திரையரங்குகள் திறப்பது பற்றிய மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி உள்ளோம்.

மேலும் திரைத்துறை ரீதியாக ஆய்வு செய்து வருகிறோம்.

மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை, தொழிலாளர்களின் நலன் கருதி ஆலோசனை செய்து விரைவில் திரையரங்கு திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

TN Minister talks about theatre re opening in Tamil Nadu

பாரதிராஜா சாதனையாளர்.; நான் அப்படி பேசியிருக்க கூடாது..; ‘இரண்டாம் குத்து’ இயக்குனரின் செம பல்டி

பாரதிராஜா சாதனையாளர்.; நான் அப்படி பேசியிருக்க கூடாது..; ‘இரண்டாம் குத்து’ இயக்குனரின் செம பல்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathi raja santhosh p jeyakumarகடந்த வாரம் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள ‘இரண்டாம் குத்து’ பட டீசர் வெளியானது.

இது ஆபாச படங்களை மிஞ்சும் வகையில் இருந்தது.

இது தொடர்பான செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.

இப்பட டீசருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார் பாரதிராஜா.

அதில்….

“இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்.

இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்??

எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்?

கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?.. என தெரிவித்திருந்தார் பாரதிராஜா.

இந்த செய்தியை காலையில் பார்த்தோம்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்…

1981 ல் கமல், மாதவி நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தை எடுத்தீர்கள். அதை பார்த்து கூசாத கண்ணு இப்போ கூசுறீச்சோ..? என கேள்வி கேட்டு டீ பீஸ் உடையில் மாதவி & கமல் இருக்கும் படங்களை தன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இந்த நிலையில் இப்போ என்ன ஞானதோயம் வந்து விட்டதோ தெரியவில்லை.

திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

நான் அப்படி சொல்லியிருக்க கூடாது. பாரதிராஜா ஒரு சாதனையாளர். என் ட்வீட்டுக்கு (பேச்சுக்கு) வருத்தம் தெரிவித்துள்ளார்.

Irandam Kuthu director apologized for his comment to Bharathi raja

Irandam Kuthu director apologized for his comment to Bharathi raja

‘எனக்கு இந்தி தெலுங்கு தமிழ் எதுவுமே தெரியாது போடா’.; ‘பேய் மாமா’ வடிவேலு இடத்தில் யோகி பாபு

‘எனக்கு இந்தி தெலுங்கு தமிழ் எதுவுமே தெரியாது போடா’.; ‘பேய் மாமா’ வடிவேலு இடத்தில் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேய் மாமா’.

இப்படத்தில் முதலில் வடிவேலு நடிப்பதாக இருந்தது.

பின்னர் பல்வேறு காரணங்களால் வடிவேலு நடிக்காமல் போகவே யோகிபாபு நாயகனாக நடிப்பது உறுதியானது.

இவருடன் ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘பேய் மாமா’ பட முழு சூட்டிங்கும் முடிவடைந்துவிட்ட சூழலில் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் திரை பிரபலங்கள் ‘இந்தி தெரியாது போடா’என்ற டி சர்ட்களை அணிந்து சர்ச்சையை ஏற்படுத்தினர்.

அதனை கலாய்க்கும் விதமாக ‘பேய்மாமா’ பட போஸ்டர் ‘எனக்கு இந்தி, தெலுங்கு, தமிழ் எதுவுமே தெரியாது போடா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

pei mama first look

Pei Mama first look creates controversy

முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘800’

முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘800’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiவிஜய்சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி, மாஸ்டர், மாமனிதன் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.

இத்துடன் யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக், தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல், லாபம் ஆகிய படங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது-

இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதையில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் விஜய்சேதுபதி.

முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை கொண்டவர் என்பதால் தமிழகத்தில் உள்ள சில அமைப்புகள் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என எதிர்த்தன.

இந்த நிலையில் முத்தையா முரளிதரன் கேரடரில் விஜய்சேதுபதி நடிப்பது உறுதி என அந்த படத்தை தயாரிக்கும் மூவி ட்ரைய்ன் மோசன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதால் இப்படத்துக்கு 800 எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

கனிமொழி படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளார்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

Official – Vijay Sethupathi to play Muttiah Muralitharan in soon-to-be-released biopic

க்ரைம் த்ரில்லர் படத்திற்காக தான்யாவை இயக்கும் எஸ்ஆர். பிரபாகரன்

க்ரைம் த்ரில்லர் படத்திற்காக தான்யாவை இயக்கும் எஸ்ஆர். பிரபாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tanya Ravichandranசுந்தர பாண்டியன், இது கதிர் வேலன் காதல், சத்ரியன் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் கொம்பு வைச்ச சிங்கம்டா படங்களை இயக்கிய S.R.பிரபாகரன் தற்போது பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியிருக்கிறார்.

தன் நிறுவனம் மூலம் தற்போது புதிதாக ஒரு படத்தை தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார்.

கிரைம் த்ரில்லாராக உருவாகும் ‘பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ் No 1’ படத்தில் நடிகை தான்யா ரவிசந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிதான தோற்றத்தில் தான்யா ரவிசந்திரன் நடிக்கின்றார்.

நடிகர்கள் ஜெயபிரகாஷ் (JP), ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ராம்நாத் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சுவாதிஷ் ராஜா, பிரபா, நிதிஷா, மெரின் ஆகியோரை இயக்குனர் S.R.பிரபாகரன் அறிமுகப்படுத்தும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – S.R.பிரபாகரன்
தயாரிப்பு நிறுவனம் – பங்கஜம் டிரிம்ஸ் புரொடக்‌ஷ்ன்ஸ்
ஒளிப்பதிவு – கணேஷ் சந்தானம்
கலை – மைக்கேல் ராஜ்
படத்தொகுப்பு – பிஜு.V. டான் பாஸ்கோ
ஸ்டில்ஸ் – பாலு
தயாரிப்பு நிர்வாகம் – P.சுரேஷ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Actress Tanya Ravichandran plays lead role in SR Prabakarans next film

More Articles
Follows