துணிவு – வாரிசு டிக்கெட் 3000 வரை விற்பனை.; உதயநிதிக்கு உதவும் அரசு.; கிழிக்கும் பாஜக பிரமுகர்

துணிவு – வாரிசு டிக்கெட் 3000 வரை விற்பனை.; உதயநிதிக்கு உதவும் அரசு.; கிழிக்கும் பாஜக பிரமுகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜனவரி 11ஆம் தேதி விஜய் நடித்த வாரிசு & அஜித் நடித்த துணிவு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

இந்த இரு படங்களுக்கும் டிக்கெட் விலை 3000 வரை விற்கப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில் பாஜக பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

“பொங்கலன்று வெளியாகும் சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ள (Thunivu & Varisu) படங்களின் டிக்கெட்டுகள் வெளிப்படையாக ரூபாய். 1,000 முதல் ரூபாய் 3,000 வரை விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த சட்ட விதி மீறல்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விவகாரம். பண்டிகை காலங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களின் மூலம் ஏழை எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சும் ‘சூது’ இந்த சட்ட விரோத டிக்கெட் விற்பனை.

இதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை மாநில அரசினுடையது. சட்ட விரோதமாக செயல்படும் இந்த ஒட்டுமொத்த அமைப்பை முடக்குவதோடு, திரைப்பட மாஃபியாக்களை கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம் மாநில அரசுக்கு உள்ளது.

ஆனால், இதை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளார்கள் என்பதோடு, தமிழக காவல் துறை கை கட்டி. வாய் பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை சுரண்டும் கேவலமான அராஜகம் இது. சூதை ஒழிக்கப்போவதாக முழங்கி கொண்டிருக்கும் அரசின் கொடூர முகத்தை நட்டநடு நிசி 1 மணிக்கு படங்களை திரையிட அனுமதியளித்துள்ளது வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே, இந்த படங்களின் விநியோக உரிமையை பெற்றிருப்பது சட்ட விரோதமாக செயல்படும் கொள்ளையர்களின் கூடாரமாக தமிழகம் விளங்கிக் கொண்டிருப்பதை தெளிவாக்குகிறது.

பல்வேறு விவகாரங்களை தானாகவே முன்வந்து விசாரிக்கும் சென்னை உயர்நீதி மன்றம், இந்த சூதை, பகல் கொள்ளையை, அரசின் அத்துமீறலை, சட்ட விரோத நடவடிக்கையை, அராஜகத்தை வேடிக்கை பார்க்காமல் மாநில தி மு க அரசை கண்டிப்பதோடு, உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையேல் கொள்ளையர்களின் அட்டகாசம் மேலும் பெருகி கொண்டே இருக்கும்.

நாராயணன் திருப்பதி.
Vice-President, Tamil Nadu BJP

thunivu – varisu ticket in rs.3000 sale upto

கருப்பு சிவப்பு கலர் நாத்திகம் அல்ல.. அது கடவுளின் கலர்.; அர்ஜுன் சம்பத் அதிரடி

கருப்பு சிவப்பு கலர் நாத்திகம் அல்ல.. அது கடவுளின் கலர்.; அர்ஜுன் சம்பத் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா தேசிங்கு இயக்கியுள்ள ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில்..

“ஸ்ரீ சபரி ஐயப்பன் திரைப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கும் அனைத்து பெருமக்களுக்கும் வணக்கம்.

இந்த படத்தின் டிரைலர் ஒரு வசனம்வருகிறது, பெண்கள் சபரிமலைக்கு போக கூடாது என்று யார்? சொன்னது என்று. அதேபோல், இசையமைப்பாளர் பேசும் போது, பெண்கள் சபரிமலைக்கு போகலாம் என்று சொன்னார். உண்மை தான், சபரிமலை இந்தியாவின் புதிதமான மலை.

இஸ்லாமியர்களுக்கு மெக்கா புனிதமான இடம், கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலம் புனிதமான இடம். அதுபோல், ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை புனிதமானது.

அந்த சபரிமலை புனிதத்தை பாதுகாப்பதற்காக, ஐயப்பன் வழிபாடு வெறும் வழிபாடு இல்லை. மற்ற வழிபாடு போல் இல்லை. இந்த வழிபாடு என்பது நம்மை நாம் ஐயப்பனாக மாறுவது. சபரிமலை சாஸ்தா தான் இந்த வழிபாடு, விரதம் அனைத்தையும் நமக்கு வகுத்து கொடுத்தது. மற்ற விரதம் போல் சாதாரண விரதம் இல்லை. உடல், மனம் என அனைத்தும் பக்குவமாக இருப்பதோடு, ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டும் அல்ல, இறைவனிடம் சரணாகதியடைய வேண்டும். பக்தி இல்லாமல் இந்த உலகம் இல்லை.

நம்முடைய எந்த ஒரு காரியம் என்றாலும் இறைபக்தியோடு செய்தால் வெற்றி கிடைக்கும். திருக்குறளே பக்தியோடு தான் தொடங்கும். பெரியபுராணமும், கம்ப ராமாயணமும் கடவுள் வாழ்த்தோடு தான் ஆரம்பிக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்ல கூடிய நாத்திகர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், நம்ம கடவுல்களை தான் அவர்கள் இல்லை என்று சொல்வார்கள். மற்ற மத கடவுல்களை அப்படி சொல்வதில்லை, அவர்களுடைய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு துவக்கி வைப்பார்கள், முடித்து வைப்பார்கள். அதனால் தான் ஐயப்பன் பார்த்தார்.

நாத்தீகம் பேசுபவர்கள் கருப்பை அவர்களுடைய வண்ணம் என்று சொல்கிறார்கள். அதை ஐயப்பன் பக்தி வண்ணமாக மாற்றி விட்டார். மாலை போடுபவர்கள் கருப்பு உடை அணிகிறார்கள், இப்போது அது ஐயப்பன் வண்ணமாக மாறிவிட்டது. அதுபோல் சிவப்பு வண்ணத்தை பார்த்தால் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தியே என்று வணங்குகிறார்கள்.

33 வருடங்களுக்கு பிறகு ஐயப்பன் படம் வருகிறது. இதை மக்கள் கொண்டாட வேண்டும், ஐயப்பன் பக்தர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நான் இந்து சமயநிலைத்துறை அமைச்சருக்கு, அரசுக்கும் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

எங்கேயோ இருக்கிற நாட்டுக்கு செல்ல பிற மதத்தினருக்கு நிதி உதவி செய்யும் அரசு, தமிழகத்தில் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் ஐயப்பன் பக்தர்களில் மாவட்டத்திற்கு இரண்டாயிரம் பேரை தேர்வு செய்து அவர்களுக்கு நிதி உதவி செய்ய வேண்டும்.

ஸ்ரீ சபரி ஐயப்பன் திரைப்படத்தின் டிரைலர் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. இந்த படத்தின் மூலம் ஐயப்பனின் பெருமை உலகறிய செய்வதோடு, இந்து மதத்தின் பெருமையும் பேசப்படும் என்று நான் நம்புகிறேன். படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு படக்குழுவினர் ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ படத்தின் நினைவு பரிசுகளை வழங்கி கெளரவித்தனர். மேலும், திருத்தணி முருகன் கோவிலில் படக்குழுவினருக்கு சிறப்பு அர்ச்சணை செய்யப்பட்ட பிரஷாதத்தை கோவில் குருக்கள் வழங்கினார்.

Red and Black colors became Gods Color says Arjun Sambath

கனவை துரத்தும் தில்லான மனிதனின் உண்மைக் கதை ‘தில் திலீப்’

கனவை துரத்தும் தில்லான மனிதனின் உண்மைக் கதை ‘தில் திலீப்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘தில் திலீப்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

‘குபீர்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தில் திலீப்’. இதில் திலீப் குமார், ராதா ரவி, டினா, வைஷ்ணவி, தமிழ்ச்செல்வன், பிரதாப், ஃபரோஸ். ஒயிட், கர்வாஸ், டாக்டர் பிரபு, மதன், இம்ரான், ஏகவள்ளி, ராதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

தில் திலீப்

பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏழிசை வேந்தன் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

பாடலாசிரியர் அகிலன் கங்காதரன் பாடல்கள் எழுத, பின்னணி பாடகர்களான அந்தோணி தாசன், பென்னி தயாள், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, எம் சி பாஸீ ஆகியோர் பாடல்களை பாடி இருக்கிறார்கள்.

உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்ச்சர் சினிமாஸ் மற்றும் சாகித்யா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்களில் சார்பில் தயாரிப்பாளர்கள் சின்னையன் மற்றும் வெங்கடேஷ் பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

தில் திலீப்

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகியிருக்கும் நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

‘ திரைப்படப் படைப்பாளியாக உருவாக வேண்டும் என்ற தனது கனவை தொடர்ந்து துரத்தும் ஒரு எளிய மனிதனின் உண்மை கதை தான் ‘தில் திலீப்’.

நகைச்சுவையாகவும், உத்வேகம் அளிக்கும் வகையிலும் யதார்த்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.

தில் திலீப்

https://www.youtube.com/watch?v=kYK2BR9Zhso

vijay sethupathi released dil dileep movie poster

இஸ்லாமியர் – கிறிஸ்தவர் கடவுளை புகழ்வார்கள்.; சில தமிழர்கள் மட்டுமே கடவுளை மறுக்கின்றனர் – பேரரசு

இஸ்லாமியர் – கிறிஸ்தவர் கடவுளை புகழ்வார்கள்.; சில தமிழர்கள் மட்டுமே கடவுளை மறுக்கின்றனர் – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜா தேசிங்கு இயக்கியுள்ள ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேசுகையில்…

“பிரசாத் லேபில் நடைபெற்றும் இசை வெளியீட்டு விழாவுக்கு நான் பல முறை வந்திருக்கிறேன். பல நிகழ்ச்சிகளில் கூட்டம் வரும், ஆனால் இன்று வந்திருக்கும் கூட்டத்தை போல் எந்த நிகழ்ச்சியிலும் நான் பார்த்ததில்லை.

அப்படி என்றால் பக்தி படங்களுக்கு எத்தகைய வரவேற்பு இருக்கிறது என்று பாருங்கள். சில மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் என் மதம் தான் பெரியது என்று சொல்வார்கள்.

வேறு சில மாநிலங்களில் இஸ்லாமியர்கள் தங்கள் கடவுளை பெரிதாக பேசுவார்கள், பல மாநிலங்களில் இந்து கடவுகளை பெருமையாக பேசுவார்கள்.

ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் கடவுள் இல்லை என்று சொல்வார்கள். ஆனால், தமிழகம் புன்னியபூமி. கடவுள்கள் நடமாடிய பூமி, இங்கு ஆன்மீகத்திற்கு எப்போதும் அதிகமான வரவேற்பு உண்டு.

33 வருடங்களுக்கு பிறகு வெளியாக இருக்கும் ஐயப்பன் பக்தி படமான ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’. மிக சிறப்பாக வந்திருக்கிறது. பாடல்கள் மற்றும் டிரைலரை பார்க்கும் போதே படம் எப்படி இருக்கும் என்று தெரிகிறது. இதுபோன்ற ஆன்மீக படங்கள் அதிகமாக வர வேண்டும்.

அது கிறிஸ்தவர், இஸ்லாமியர், இந்து என எந்த மதத்தை சேர்ந்த படமாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் பக்தி படங்கள் அதிகமாக வரண்டும். இங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

இதேபோல், ‘ஸ்ரீ சபரி ஐயப்பன்’ படத்தையும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்க்க வேண்டும். திரையரங்குகளுக்கு மக்கள் சென்று படத்தை பார்த்து வெற்றி பெற செய்ய வேண்டும். அப்படி நடந்தால் இதுபோன்ற பக்தி படங்கள் அதிகமாக வரும், மக்கள் வாழ்க்கையும் வலம் பெறும்.” என்றார்.

Tamilnadu is spiritual state says Perarasu at Sri Sabari Ayyappan Audio launch

‘லாக்’ ரிலீசாவதற்குள் 2 பேரை இழந்துட்டோம்.; ரத்தன் லிங்கா உருக்கம்

‘லாக்’ ரிலீசாவதற்குள் 2 பேரை இழந்துட்டோம்.; ரத்தன் லிங்கா உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் , சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’.

இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர்.

‘லாக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் படத்தை இயக்கியிருக்கும் ரத்தன் லிங்கா பேசும்போது,

“இந்தப் படம் பல போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு எங்களது பக்க பலமாக இருந்த சக்திவேல் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மற்றும் படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் இருவரும் திடீரென காலமானது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

ஆனால் அவர்களுடைய கனவெல்லாம் இந்தப் படத்தின் மீதுதான் இருந்தது .

அந்த இருவருடைய ஆத்மாக்களின் ஆசீர்வாதத்தால் இந்தப் படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அவர்களது விருப்பம் இதுவாகத்தான் இருக்கும்.எங்களுடன் இணைந்து ராஜ்குமார் வேலுச்சாமி அவர்கள் பெரும் பக்கபலமாக இருந்து உதவினார்.

அதுமட்டுமல்லாமல் எங்களது சிரமங்களையெல்லாம் பார்த்துக் கொண்டு இது மாதிரி புதியதாக வருபவர்கள் சிரமப்படக்கூடாது அவர்களுக்கு நாம் ஒரு தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.அதன்படி அண்மையில் நாங்கள் ஒரு ஸ்டுடியோ தொடங்கியிருக்கிறோம்.

அது தான் பாம்பூ ட்ரீஸ் ஸ்டுடியோ .அது முழுக்க முழுக்க வளரும் கலைஞர்களை உயர்த்தி விடுவதற்காகவும், அவர்களுக்கு ஏற்ற தொழில்நுட்பக் கருவி வசதிகள் செய்து கொடுப்பதற்காகவும் என்ற நோக்கத்தில் தொடங்கி இருக்கிறோம்” என்றார்.

நடிகர் சுதீர் பேசும்போது…

” அட்டு மூலம் இயக்குநர் ரத்தன்லிங்கா மிகவும் புகழ் பெற்று விட்டார் .படப்பிடிப்பு நடந்தபோது அதை நான் பார்த்து, புரிந்து கொண்டேன். எப்போதும் அவரைச் சுற்றி ஏராளமான ரசிகர்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். இவருக்கு உள்ள திறமைக்கு இவர் ராம்கோபால் வர்மா போல் வருவார் “என்றார்.

We lost 2 people before the release of ‘Lock’.; Ratan Linga

‘அட்டு’ சான்ஸ் மிஸ் ஆச்சு.; ஒரு மாசம் டைம் கேட்டு ‘லாக்’கில் வந்துட்டேன் – மதுஸ்ரீ

‘அட்டு’ சான்ஸ் மிஸ் ஆச்சு.; ஒரு மாசம் டைம் கேட்டு ‘லாக்’கில் வந்துட்டேன் – மதுஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரத்தன் லிங்கா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘லாக்’.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாயகி மது ஸ்ரீ பேசும்போது…

“நான் இவர் ஒரு குறும்படம் எடுத்த போது அதில் நான் ஒரு சின்ன பெண்ணாகத் தாவணியுடன் தோன்றியிருப்பேன்.

மதுபானக்கடையில் நடித்த பிறகு 10 ஆண்டுகளுக்குள் எனது எடை கூடி நான் குண்டாக இருந்தேன். அட்டு படத்தில் நடிப்பதை நான் தவற விட்டு விட்டேன். அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன்.

இன்று கூட அதை நினைத்து வருத்தப்படுகிறேன்.
அதனால்தான் அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. இரண்டாவது படத்தையும் தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக இதில் நடித்து இந்தப் படம் வெளிவந்து பார்த்த பிறகு தான் அந்த படத்தைப் பார்ப்பதாக நான் இருக்கிறேன்.

என்னைப் பார்த்து விட்டு எடை குறைத்து வருமாறு சொன்னார்.

ஒரு மாதம் நான் அவகாசம் கேட்டேன். ஏனென்றால் இது ஒரு ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படம் ,ஆனால் இயக்குநர் என்னைப் பார்த்து எதுவும் சொல்லாமல் வேறு ஒருவரைத் தேடாமல் கால அவகாசம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார். 30 நாட்களில் நான் குறைக்க முடியும் என்று நம்பினேன்.

அதன்படி எடை குறைந்து அவர்கள் முன் போய் நின்றேன் .என்னைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.

இதில் எனது முயற்சியை விட அவர்கள் கொடுத்த நம்பிக்கை பெரிது. நம்பிக்கையால் எதையும் செய்ய முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன்.

எனக்கு மட்டுமல்ல நடித்திருக்கும் அனைவருக்கும் பளிச்சிடக் கூடிய நடிப்பு வாய்ப்புகளை இயக்குநர் வழங்கி உள்ளார் “என்றார்.

காவல்துறை துணை ஆணையாளர் சுரேந்திரநாத் பேசும்போது…

” காவல்துறைக்கும் கலைத்துறைக்கும் ஓர் இணக்கம் உள்ளது. இரண்டு துறையும் இங்கே இணைந்து இந்த விழாவை நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது

காக்கிக்குள்ளும் கலை உள்ளம் கொண்டவர் இளங்கோவன். அவர் பன்முகத் திறமை கொண்டவர். அவரது மகன் இந்தப் படத்தில் நடித்திருப்பது புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று சொல்ல வைக்கிறது.

காவல்துறை போல் கலைத்துறையும் பல கஷ்டங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்” என்றார்

காவல்துறை ஆய்வாளர் இளங்கோவன் பேசும்போது…

” நான் இங்கே பாக்யராஜ் சார் அவர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது ‘டார்லிங் டார்லிங் டார்லிங் ‘ படத்தை 40 தடவை பார்த்தவுடன் அப்போது அவர்களுக்கு ரசிகர் மன்றம் அமைக்க வேண்டும் என்று நான் மும்முரமாக இருந்தேன். என் மகனும் அப்படிப்பட்ட திரைத்துறையில் நுழைகிறான் என்று எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இயக்குநர் ரத்தன் லிங்கா என் சகோதரர் போன்றவர். அவர் படத்தில் ஒரு நடிகனாக அறிமுகமாகும் என் மகனையும் வாழ்த்துங்கள் “என்றார்.

I missed ‘Attu’ movie chance .. I asked for a month’s time and came to ‘Lock’ – Madhushri

More Articles
Follows