நிஜ ராஜாகண்ணுவின் மனைவிக்கு வீடு கட்டும் நடிகர்.; செய்யாத குற்றத்திற்கு சித்ரவதை..: 1993ல் என்ன நடந்தது.?

நிஜ ராஜாகண்ணுவின் மனைவிக்கு வீடு கட்டும் நடிகர்.; செய்யாத குற்றத்திற்கு சித்ரவதை..: 1993ல் என்ன நடந்தது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் நேரடியாக நவம்பர் 2ல் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டினர்.

1993-ல் போலீஸார் சித்ரவதையில் கொல்லப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு வழக்கை மையமாகக் கொண்டு ஜெய்பீம் படம் உருவானது.

*ராஜாக்கண்ணு கொலை வழக்கில் என்ன நடந்தது?*

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியத்தில் இருக்கும் கம்மாபுரத்தை அடுத்து இருக்கிறது முதனை என்ற சிறிய கிராமம்.

இந்தப் பகுதியில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்த குரும்பர் எனப்படும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் வசித்து வந்தனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வந்த அந்த குடும்பத்தினர், நெல் அறுவடை நேரங்களில் அருகிலிருக்கும் கிராமங்களுக்குக் குடும்பத்தோடு சென்று கூலி வேலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

1993-ல் கோபாலபுரம் என்ற கிராமத்துக்குக் கூலி வேலைக்காகச் சென்றிருக்கிறார்கள். அங்கே ஒரு வீட்டில் தங்கியிருந்து விவசாயக் கூலி வேலைகளைச் செய்து கூலியாக நெல்லைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

அப்போது ஒரு வீட்டில் 40 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனதாகப் புகார் எழுந்திருக்கிறது.

இதுகுறித்த போலீஸ் விசாரணைக்காக கம்மாபுரம் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட குரும்பர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்.

தனது கணவரை விடுவிக்கக் கோரி காவல்நிலையம் சென்ற அவரது மனைவியும் போலீஸார் கடுமையாகத் திட்டி அனுப்பியிருக்கிறார்கள்.

இந்தநிலையில், ராஜாக்கண்ணு காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடியதாக அவரது மனைவியிடம் போலீஸார் மறுநாள் சொல்கிறார்கள்.

அவர் வீட்டுக்கு வந்தால் காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் மிரட்டப்பட்டிருக்கிறார்.

ஆனால், போலீஸார் கடுமையாகத் தாக்கிய நிலையில் தனது கணவர் தப்பிச் செல்ல வாய்ப்பில்லை. அவரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவியோடு ஆர்டிஓ, டிஎஸ்பி தொடங்கி கடலூர் ஆட்சியரிடமும் ராஜாக்கண்ணுவின் மனைவி புகார் கொடுக்கிறார்.

இந்த புகாரின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ராஜாக்கண்ணுவை போலீஸார் அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி தொடர் போராட்டங்களை நடத்தினர்.

அதன்பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், நீதிமன்றத்தை நாட முடிவு செய்கிறார்கள்.

அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த கே.சந்துரு (உயர் நீதிமன்ற நீதிபதியாக ஓய்வுபெற்றவர். இவரின் கதாபாத்திரத்தில்தான் சூர்யா நடித்திருக்கிறார்) உதவியை ராஜாக்கண்ணுவின் மனைவி நாடுகிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சாட்சியம் அளித்தனர். 1996-ல் உயர் நீதிமன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 3 சென்ட் நிலம், ரூ.2.65 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், ஜெயங்கொண்டான் அருகே மீன்சுருட்டியில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத நபரின் சடலத்தின் அடையாளங்களும் ராஜாக்கண்ணுவின் அங்க அடையாளங்களும் ஒத்துப் போவதைக் கண்டுபிடித்தனர்.

பின்னர் இது கொலைவழக்காக மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்தது. முதலில் கடலூர் நீதிமன்றத்திலும் பின்னர் விருதாச்சலம் விரைவு நீதிமன்றத்திலும் நடந்த இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2006-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ராஜாக்கண்ணு அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸார் 5 பேருக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனையும் அரசு மருத்துவர் ராமச்சந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி விருதாச்சலம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய ஓய்வுபெற்ற டிஎஸ்பி, கம்மாபுரம் காவல்நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், ராஜாக்கண்ணுவுக்கு சிகிச்சை அளித்ததாக பொய் சாட்சியம் கூறிய மருத்துவர் ராமச்சந்திரன் என்பவர் உள்பட 12 பேரைக் கைது செய்து சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ராஜாக்கண்ணு குடும்பத்தினருக்குக் கடைசி வரை உறுதுணையாக இருந்தவர் கம்மாபுரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த கோவிந்தன். வழக்கில் வெற்றி பெற்ற பிறகே திருமணம் என தனது திருமணத்தைத் தள்ளிப்போட்ட அவர், 2006-ல் தீர்ப்பு வந்த பிறகு, தனது 39-வது வயதில் திருமணம் செய்துகொண்டார்.

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளராக இருந்த கே.பாலகிருஷ்ணனும் இந்த வழக்கில் முக்கியப் பங்காற்றினார்.

ராஜாக்கண்ணுவின் 75 வயதான மனைவி பார்வதி, தற்போது முதனை கிராமத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் ராஜாக்கண்ணுவின் 75 வயதான மனைவி பார்வதிக்கு வீடு கட்டித் தர சம்மதித்துள்ளார்.

இது தொடர்பான அவரது பதிவில்…

செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கைநிலையை வலைப்பேச்சுவில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. வலைப்பேச்சு ஜெ.பிஸ்மி @jbismi அவர்களிடம் மேலும் விவரங்களை கேட்டறிந்ததும் கூடுதலாக துயருற்றேன்.

பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன்.

ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமைநிலையினை என் கவனத்துக்குக் கொண்டு வந்த வலைப்பேச்சு குழுவினருக்கு என் நன்றிகள்.

28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயரநிகழ்வை, இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய திரு.சூர்யா அவர்களுக்கும், திருமதி.ஜோதிகா அவர்களுக்கும், இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.

அன்புடன்
ராகவா லாரன்ஸ்.

This kollywood actor to build house for real life sengani

‘என்னத்த சொல்றது’… ‘ஜெய்பீம்’ படத்தை பார்த்த பார்த்திபன் பதிவு

‘என்னத்த சொல்றது’… ‘ஜெய்பீம்’ படத்தை பார்த்த பார்த்திபன் பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் நேரடியாக நவம்பர் 2ல் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டினர்.

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் ‘ஜெய்பீம்’ படம் குறித்து தனது விமர்சனத்தை ‘என்னத்த சொல்றது’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது…

“சட்டத்தை நீதி/நிதி எதுக்கும் பயன்படுத்தலாம். அப்படியே சினிமாவையும்… நிறைய காசுக்கும் நல்ல cause-க்கும்!

ஒரு சினிமா மூலமாக சட்டத்தின் பயன்பாடு, அதுவும் ஏற்கனவே (இருளர்கள்) இருண்டிருக்கும் வாழ்வில் சிறு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி அதையும் ‘இது ஒரு கமர்ஷியல்’ என்று வண்ணம் பூசிக் கொள்ளா வண்ணம் உலக அளவில் கமர்ஷியலாகவும் வென்றிருக்கும் திரைப்படத்தை பார்க்கத் துவங்கி கரைந்தேப் போனேன்.

சந்துரு சார்! – இது பெயரல்ல. நீதி என்ற பதத்தின் மொழிபெயர்ப்பு! அவரை நான் நல்லது செய்யும் மேடைகளில் நடுநாயகராக அமர்த்தி கௌரவம் தேடிக் கொண்டுள்ளேன்.

அவரின் வாழ்க்கையை படமாக்கவும் ஆசைப்பட்டுள்ளேன். அது இன்று திரு த.செ.ஞானவேல் மூலம் நிறைவேறி பிரபஞ்சம் சந்துருவை பாராட்ட, மெய் சிலிர்க்கிறேன்.

சினிமா மூலம் சமூகத்திற்கு கோடானு கோடி நன்மை செய்திருக்கும் மாண்புமிகு சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களை மானசீகமாக வணங்குகிறேன்”.

இவ்வாறு இயக்குனர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

Parthiban about Suriya’s Jai Bhim

‘சலீம் 2’ படத்திற்கு வேற டைட்டில் வைத்த விஜய் ஆண்டனி்.; ஹீரோயின் & டைரக்டர் யார் தெரியுமா.?

‘சலீம் 2’ படத்திற்கு வேற டைட்டில் வைத்த விஜய் ஆண்டனி்.; ஹீரோயின் & டைரக்டர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் தனிச்சிறப்பான படமாகும்.

விமர்சன ரீதியில் பாராட்டுக்களை குவித்த இந்த திரைப்படம், வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி சலீம் படத்தின் 2வது பாகமான “மழை பிடிக்காத மனிதன் “ படத்தில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார்.

இப்படத்தை ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் எழுதி, இயக்குகிறார். ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகவுள்ள இப்படம், முதல் முறையாக தாமன் & தியூ பகுதியில் படமாக்கப்படும் முதல் தமிழ்படம் ஆகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது, 2022 ஆம் ஆண்டு மத்தியில் இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கியமான பாத்திரமொன்றில் நடிக்கிறார்.

கன்னட திரையுலகின் மிக திறமை வாய்ந்த இரண்டு நடிகர்களான தனஞ்செயா மற்றும் ப்ருத்வி அம்பர் இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்கள்.

மேலும் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குநர் ரமணா ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

மழை பிடிக்காத மனிதன் படத்தில், பிரமிக்க வைக்கும் அதிரடி காட்சிகளோடு ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது படக்குழு.

கதாநாயகனின் வாழ்க்கையில் பத்து அத்தியாயங்களை காலவரிசைப்படி கடந்து செல்லும் ஒரு தனித்துவமான கதைக்களத்தை, மழை பிடிக்காத மனிதன் படத்தில் உருவாக்கியுள்ளார்.

இப்படத்தை எழுதி இயக்குவது மட்டுமின்றி, ‘மழை பிடிக்காத மனிதன் (சலீம்-2) படத்துக்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவும் செய்கிறார். விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசையமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை கவனிக்கிறார்.

படத்தொகுப்பாளராக லியோ ஜான்பால், கலை இயக்குநராக K.ஆறுசாமி, ஸ்டண்ட் மாஸ்டராக சுப்ரீம் சுந்தர், நடன இயக்குநராக ஸ்ரீதர், ஸ்டில்களை மகேஷ் ஜெயச்சந்திரன், விளம்பர வடிவமைப்பாளராக பவன் (சிந்து கிராபிக்ஸ்), ஆடை வடிவமைப்பாளராக ஷிமோனா ஸ்டாலின். பணிபுரிகின்றனர்.

“மழை பிடிக்காத மனிதன்” கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப் B, பங்கஜ் போஹ்ரா மற்றும் , S. விக்ரம் குமார் of INFINITI FILM VENTURES ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Vijay Antony’s Salim film sequel gets this title

சர்ச்சைக்குரிய காலண்டரை மாற்றியது ‘ஜெய்பீம்’ படக்குழு

சர்ச்சைக்குரிய காலண்டரை மாற்றியது ‘ஜெய்பீம்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடித்து நவம்பர் 2ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசானது ‘ஜெய் பீம்’ திரைப்படம்.

இப்படத்தைப் பார்த்துவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த படம் பிரபலமாகி வரும் வேளையில் சில சமூகத்தினர் சில காட்சிகளுக்கு தெரிவிப்பு தெரிவித்தனர்.

அசுரன் பட புகழ் தமிழ் என்பவர் சப் இன்ஸ்பெக்டராக (கொடுமைக்காரன்) நடித்து இருந்தார்.

அவரின் கேரக்டரை வன்னியர் போன்று சித்தரித்ததற்கு அந்த பிரிவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

மேலும் ஒரு காட்சி பின்னணியில் இருந்த காலண்டரில் (1995 வருட காலண்டர்) தீச்சட்டி படம் இடம் பெற்றது. அந்தக் குறியீடுதான் வன்னியர்களின் எதிர்ப்புக்கு காரணமாக அமைந்தது.

எழுத்தாளர் கண்மணி குணசேகரன் என்பவரும் இந்த தவறான சித்தரிப்பிற்கு தனது கண்டனப் பதிவை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் அந்த காலண்டரில் இருந்த சர்ச்சைக்குரிய படம் நீக்கப்பட்டு தற்போது சரஸ்வதி படம் வைக்கப்பட்டுள்ளது.

Controversy calendar removed from Suriyas Jaibhim movie

சென்னையில் வெளுத்து கட்டும் மழை..; அதிமுக அரசை வெளுத்து வாங்கும் சேரன்..!

சென்னையில் வெளுத்து கட்டும் மழை..; அதிமுக அரசை வெளுத்து வாங்கும் சேரன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரே நாள் இரவு தான்.. விடியல் காலையில் அனைத்து சேனல்களில் தலைப்பு செய்தியானது… மழை வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை.

விடிய விடிய பெய்து வரும் கனமழையால் சென்னை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

எனவே நாளை மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 8 மற்றும் 9) தேதிகளில் சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.

மேலும் தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் யாரும் தற்போது சென்னை திரும்ப வேண்டாம். இன்னும் 2 நாட்கள் கழித்து வாருங்கள் என அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான சேரன் தன் ட்விட்டர் பதிவில்…

மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே முந்தைய ஆட்சியில்… இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா.. இந்த ஃபைல முதல்ல எடுங்க (முதல்வர் ஸ்டாலின்) @CMOTamilnadu அய்யா. என்று தனியும் இந்த….
என பதிவிட்டுள்ளார் சேரன்.

Director Actor Cheran talks about Chennai rain

மக்களையும் தேவரய்யாவையும் தவறாக பேசினார்.; விஜய்சேதுபதி மீது தாக்குதல் நடத்திய மகாகாந்தி ஓபன்டாக்

மக்களையும் தேவரய்யாவையும் தவறாக பேசினார்.; விஜய்சேதுபதி மீது தாக்குதல் நடத்திய மகாகாந்தி ஓபன்டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. இவர் தற்போது கோலிவுட்டை தாண்டி அனைத்து மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டி மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் கர்நாடகா மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் மகாகாந்தி என்ற ஒரு நபர் ஓடிவந்து விஜய்சேதுபதி மீது தாக்குதல் நடத்தினார். அதாவது அவரை பின்னில் இருந்து எட்டி உதைக்கிறார்.

இதனையடுத்து விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதல் நடத்த முயன்றவரை தடுத்து நிறுத்தினர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால் என்ன காரணம் என வெளியே தெரியாமல் மூடப்பட்டது.

ஆனால் இது தொடர்பான எந்த புகாரும் காவல் நிலையத்திற்கு செல்லவில்லை.

‘இந்த விவகாரத்தை தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வதாக விஜய்சேதுபதியின் உதவியாளர் தெரிவித்தார்.

இது நடந்து சில தினங்கள் ஆன நிலையில் மகாகாந்தி என்ற அந்த நபர் பிரபல யூடியூப் தளத்தில்…”நான்தான் அடித்தேன். அது உண்மைதான். என தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 6.5 அடி உயரம் இருக்கும் இவர் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறாராம்.

அவரின் பேட்டியில்.. என் தமிழ் மக்களையும் என் குலதெய்வம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரய்யா அவர்களையும் விஜய்சேதுபதி தவறாக பேசினார். எனவே மனஉளைச்சல் ஆனது. எனவே அவரை தாக்கினேன்,

அவர் மக்கள் செல்வன் என்ற போர்வையில் உள்ளார். ஆனால் மக்களுடன் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Reason behind Vijay Sethupathi attack at Bengaluru airport

More Articles
Follows