அஜித்தின் ‘பில்லா’ படத்தில் இந்த ஹீரோயின் தான் முதல் சாய்ஸ் – இதுவரை பார்க்காத படங்கள்

அஜித்தின் ‘பில்லா’ படத்தில் இந்த ஹீரோயின் தான் முதல் சாய்ஸ் – இதுவரை பார்க்காத படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பில்லா’ விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா மற்றும் நமீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். நயன்தாராவின் சாஷா பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிகினியில் அவரது கீழ் முதுகில் பச்சை குத்திய காட்சிகள் இன்னும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

அசின் தான் ‘பில்லா’ படத்துக்காக தேர்வு செய்யப்பட்ட முதல் நடிகை என தெரிய வந்துள்ளது . அசினின் டெஸ்ட் ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேதி பிரச்சனையால் திடீரென இந்த
படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

This heroine was first choice for Ajith’s ‘Billa’ – Unseen viral pics

அதிக உப்பு ஆபத்து.; நாத்திகர்களை கண்டால் சிரிப்பதா.? அழுவதா.? – ரஜினி

அதிக உப்பு ஆபத்து.; நாத்திகர்களை கண்டால் சிரிப்பதா.? அழுவதா.? – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்த விழாவில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் ரஜினி பேசும்போது…

“உணவில் அதிக அளவில் உப்பை பயன்படுத்தாதீர்கள். அது உங்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

என் வீட்டுக்கு புதிதாக வந்த சமையல்காரர் சிறப்பாக சமைத்தார். ஆனால், எனக்கும் என் மனைவிக்கும் BP ஏறிக்கொண்டிருந்தது.

எப்போதும் வீட்டில்தான் சாப்பிடுகிறேன். பின்னர் ஏன் BLOOD PRESSURE அதிகரிக்கிறது என புரியாமலிருந்தேன்.

பின்னர் தான் தெரிந்தது அளவுக்கு அதிகமாக நாங்க உப்பை பயன்படுத்திகிறோம்.

நம் மனித உடல் என்ன ஓர் அற்புதம்..

ஆச்சரியமாக உள்ளது. பிறந்ததிலிருந்து 80 ஆண்டுகள் வரை இதயம் ‘லப் டப்’ என துடித்துக் கொண்டிருக்கிறது.

இதை வேறு எந்த மெஷினாலும் செய்ய முடியுமா? எவ்ளோ விஞ்ஞானிகள் இருந்தாலும் ஒரு துளி ரத்தத்தை நம்மால் உருவாக்க முடியுமா?

இதெல்லாம் தெரிந்தும் சிலர் கடவுள் இல்லை என்கிறார்கள். அவர்களை பார்த்தால் சிரிப்பதா? அழுவதா என்றே தெரியவில்லை.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Rajinikanth latest speech about his health condition

சூர்யா இல்லனா அருண் விஜய்.; மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க விஷால் விருப்பம்

சூர்யா இல்லனா அருண் விஜய்.; மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க விஷால் விருப்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ என்ற படத்தில் துருவ் விக்ரம் நடித்தார். அந்த படம் முழுவதுமாக முடிவடைந்த பின்னரும் அந்தப் படம் தங்களுக்கு திருப்தி இல்லை என்று கூறி பட தயாரிப்பாளர் படத்தை ரிலீஸ் செய்யவில்லை.

இது இயக்குநர் பாலாவுக்கு பெரும் அவமானத்தை உண்டாக்கியது.

அதன் பின்னர் சில ஆண்டுகளில் நடிகர் சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கி வந்தார் பாலா.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து விலகினார் சூர்யா.

இதுவும் பாலாவிற்கு திரையுலகில் பெரும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது.

இதனால் பாலா இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் தயங்கி வந்த நிலையில் தற்போது மீண்டும் பாலா இயக்கத்தில் தனக்கு நடிக்க விருப்பம் என விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

ஏற்கனவே பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் ஆர்யாவுடன் இணைந்து விஷால் நடித்திருந்தார். இந்த படத்தில் மாறு கண் உடையவராக விஷால் நடித்து அனைவரையும் பாராட்டையும் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்…

தற்போது அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை பாலா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Vishal wants to act in the direction of Bala again

நாட்டு… நாட்டு.. பாடல் எதிரொலி.; ஹாலிவுட் படத்தில் நடிக்கும் RRR பட நடிகர்

நாட்டு… நாட்டு.. பாடல் எதிரொலி.; ஹாலிவுட் படத்தில் நடிக்கும் RRR பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமவுலி இயக்கிய RRR படத்தில் ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் இணைந்து நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு..’ என்ற பாடல் உலகப் புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருதை வென்றது.. இதன் மூலம் இந்தப் பாடல் உலக அளவில் பிரபலமாகியது.

எனவே பல வெளிநாட்டினரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இந்தப் பாடலுக்கு RRR படத்தில் நடனமாடிய ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு உலக அளவில் பாப்புலாரிட்டி கிடைத்தது.

எனவே அவர்களுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்துள்ளன.

இந்த நிலையில் ஹாலிவுட் படத்தில் ராம்சரண் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ராம் சரண் உறுதிப்படுத்தியு ஹாலிவுட்டின் சில இயக்குநர்களுடன் பேசி வருவதாக தெரிய வந்துள்ளது.

எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

RRR actor to act in hollywood film

அமைச்சர் சேகர்பாபுவின் இன்னொரு முகம் பாட்ஷா.; ஸ்டாலின் கண்காட்சியில் ரஜினி பேச்சு

அமைச்சர் சேகர்பாபுவின் இன்னொரு முகம் பாட்ஷா.; ஸ்டாலின் கண்காட்சியில் ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ என்ற பெயரில் சென்னையில் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை நடிகரும்மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 28-இல் திறந்து வைத்தார்.

பின்னர் அந்தப் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டு முதல்வர் மு க ஸ்டாலினை வாழ்த்தி பேசியிருந்தார்.

இந்த கண்காட்சியை மாணவா்கள், பொதுமக்கள், திமுகவினா் என ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டு வருகின்றனா்.

நாளை மாா்ச் 12-ஆம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) இந்த புகைப்படக் கண்காட்சி நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் இன்று சனிக்கிழமை பார்வையிட்டார்.

அப்போது இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது.., அமைச்சர் சேகர்பாபு ரொம்ப விசுவாசமானவர், அன்பானவர். அதே சமயம் அமைச்சர் சேகர்பாபுவுக்கு இன்னொரு முகம் இருக்கு, பாட்ஷா மாதிரி.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Sekar babu has another face like baasha says rajinikanth

மீண்டும் முதலேர்ந்தா.? ரஜினி ரசிகர்கள் முன்னெடுக்கும் விழாவில் அரசியல் தலைவர்கள்.!?

மீண்டும் முதலேர்ந்தா.? ரஜினி ரசிகர்கள் முன்னெடுக்கும் விழாவில் அரசியல் தலைவர்கள்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்… தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியலும் தவிர்க்க முடியாத பெயர்..

கடந்து 30 ஆண்டுகளாக இவரை ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்த நிலையில்.. அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு பின்னர் கொரோனா காரணத்தால் பின் வாங்கி விட்டார்.

ஆனாலும் ரஜினிக்கு ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல நாடுகளில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் சார்பில் சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் மார்ச் 26ஆம் தேதி பிரம்மாண்ட கூட்டம் நடைபெற உள்ளது.

மனிதம் காத்து மகிழ்வோம் என்ற தலைப்பில் ரஜினிகாந்த்க்கு பாராட்டு விழா மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க விழா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதில் ரஜினி மன்றத்தில் உள்ள நலிவடைந்த ரசிகர்களுக்கு, ரசிகர்களே உதவி செய்யும் விதமாக ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசு, முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் நட்டி நட்ராஜ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது இதில் அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள இருப்பதால் மீண்டும் ரஜினி அரசியலுக்கு வருகிறாரா.? அல்லது இது அரசியலை முன்னெடுக்கும் நிகழ்வா? எனவும் ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது..

மீண்டும் முதலேர்ந்தா.?

Political leaders in a function led by Rajini fans.!?

More Articles
Follows