டிராஃபிக் ராமசாமி இசை உரிமையை கைப்பற்றிய டிரெண்ட் மியூசிக்

டிராஃபிக் ராமசாமி இசை உரிமையை கைப்பற்றிய டிரெண்ட் மியூசிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Think music bagged the audio rights of Traffic Ramasamy movieசமூக போராளியான ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை மையமாக வைத்து அதே பேரில் எடுக்கப்படும் படம் தான் ‘டிராஃபிக் ராமசாமி’.

இப்படத்தின் ஆடியோ உரிமையை டிரெண்ட் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சமூகத்திற்காக தனி மனிதனாக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் சமூகப் போராளியான டிராபிக் ராமசாமியின் வாழ்வை மையமாக வைத்து இப்படம் உருவாகுவதால் இப்படத்தின் இசையை வெளியிடுவதை எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த கெளரவமாக கருதுவதாகவும், ’ஹரஹரமகா தேவகி’ இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைத்திருப்பதால் பாடல்கள் ட்ரெண்டிங்காக இருக்கும் என்று டிரெண்ட் மியூசிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க அவரது மனைவியாக ரோகிணி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி , மோகன்ராம் என்று பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, விஜய்சேதுபதி ஆகியோர் கெளரவ வேடத்தில் நடிக்கின்றனர்.

எஸ்ஏசி.யின் உதவி இயக்குனர் விக்கி இயக்கி வருகிறார்.

Think music bagged the audio rights of Traffic Ramasamy movie

ஜூன் 6-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக ரஜினிக்கு உத்தரவு

ஜூன் 6-ம் தேதி கோர்ட்டில் ஆஜராக ரஜினிக்கு உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chennai George Town Court Order to Rajini for ajour on 6th June 2018பிரபல இயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக செக் மோசடி வழக்குத் தொடர்ந்திருந்தார் சினிமா பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா.

அதில், நடிகர் ரஜினிகாந்தின் ஒப்புதலுடன் தான் கஸ்தூரி ராஜாவுக்கு கடன் கொடுத்ததாக கூறியிருந்தார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த், தன்னிடம் பணம் பறிக்க முகுந்சந்த் போத்ரா முயற்சிக்கிறார் என்று கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் போத்ரா தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 6-ம் தேதி ரஜினிகாந்த் நேரில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Chennai George Town Court Order to Rajini for ajour on 6th June 2018

விமல்-வடிவேலுவின் போலீஸ் கூட்டணி; சுராஜின் அடுத்த மருதமலை

விமல்-வடிவேலுவின் போலீஸ் கூட்டணி; சுராஜின் அடுத்த மருதமலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Suraaj teams up with Vimal and Vadiveluபூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்து கடைசியாக வெளியான படம் ‘மன்னர் வகையறா’.

இதனையடுத்து வரலட்சுமியுடன் ‘கன்னிராசி’ படத்தில் டூயட் பாடி வருகிறார்

தற்போது அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது-

இந்த படத்தை தொடர்ந்து விமல் அடுத்ததாக சற்குணம் இயக்கத்தில் ‘களவாணி-2’ படத்திலும் அடுத்ததாக, எழில் இயக்கத்திலும் மறுபடியும் நடிக்க இருக்கிறார்.

இவை எல்லாம் முடித்துவிட்டு சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாக இருக்கிறார்.

இதில் முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.

இப்படம் அர்ஜீன் நடித்த மருதமலை பட பாணியில் கலகலப்பாக உருவாகும் என கூறப்படுகிறது. மருதலை படத்தை இயக்கியவர் சுராஜ் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த புதிய படத்தில் விமல் – வடிவேலு இருவரும் போலீசாக நடிக்கின்றனர்.

இதுதவிர, `வெற்றிவேல்’ பட இயக்குநர் வசந்தமணி இயக்கத்திலும், `தமிழன்’ பட இயக்குநர் மஜித் இயக்கத்திலும் விமல் நடிக்க இருக்கிறார்.

இதனையடுத்து மீண்டும் `மன்னர் வகையறா’ படத்தை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்கத்திலும் நடிக்கவுள்ளாராம் விமல்.

ஆக மொத்தம் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார் விமல்.

Director Suraaj teams up with Vimal and Vadivelu

suraj vimal vadivelu

நீ உதவினால் நான் உதவுவேன்; நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது குறித்து சத்ருகன் சின்ஹா

நீ உதவினால் நான் உதவுவேன்; நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது குறித்து சத்ருகன் சின்ஹா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sexual favours happen in Cinema Industry says Shatrughan Sinhaநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்புகளை சரியாக தருவதில்லை என நடிகை ஸ்ரீரெட்டி புகார் அளித்து தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பெரும்பாலான நடிகைகள் கூட சினிமாவில் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்தி பட உலகின் முன்னணி நடன இயக்குனரான சரோஜ்கானும் படுக்கைக்கு அழைப்பது நடிகைகள் சம்மதத்துடன்தான் நடக்கிறது என பேசியிருந்தார்.

இந்நிலையில் பிரபல இந்தி நடிகரும் பா.ஜனதா கட்சி எம்.பியுமான சத்ருகன் சின்ஹாவும் இதுகுறித்து பேசியுள்ளார்.

நடிகைகளை சினிமா கலைஞர்கள் படுக்கைக்கு அழைப்பதும் அதற்கு சிலர் விரும்பி செல்வதும் காலம் காலமாக நடந்து வருகிறது.

எனக்கு நீ உதவினால் உனக்கு நான் உதவுவேன் என்பதுதான் அந்த அழைப்புக்கு அர்த்தம்.

இதில் ஆத்திரப்படுவதற்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. படுக்கைக்கு அழைப்பதை நான் நியாயப்படுத்தவில்லை.

இந்த வழக்கத்தை உருவாக்கியவர்களை கண்டியுங்கள். படுக்கைக்கு செல்வது அவரவர் விருப்பம். யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி விட முடியாது.” என்று பேசியுள்ளார்.

Sexual favours happen in Cinema Industry says Shatrughan Sinha

நிஜ பாகுபலியை மிஞ்சிய கோஷம்; ஜப்பானில் ராஜமௌலி நெகிழ்ச்சி

நிஜ பாகுபலியை மிஞ்சிய கோஷம்; ஜப்பானில் ராஜமௌலி நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Rajamouli reaction In Japan Baahubali 2 got huge responseஎஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் வெளியானது.

இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை இந்திய சினிமா பக்கம் ஈர்த்தது.

உலகளவில் சுமார் 1700 கோடி வசூலித்த இப்படம் ஜப்பான் நாட்டில் கடந்த வருடம் 2017ல் டிசம்பர் 31ம் தேதி வெளியானது.

அங்கு 100 நாட்களுக்கும் மேல் ஓடி 15 மில்லியன் டாலர்கள் வசூலித்தது.

எனவே ஜப்பான் வினியோகஸ்தர் அழைப்பின் பேரில் படத்தின் இயக்குனர் ராஜமௌலி, தயாரிப்பாளர் ஷோபு ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.

அங்கு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு பின், ‘பாகுபலி 2’ படத்தின் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. அதில் இயக்குனர் ராஜமௌலி கலந்துக் கொண்டார்.

அப்போது படம் பார்த்த ரசிகர்கள் ‘பாகுபலி’, ‘பாகுபலி’ என குரல் எழுப்பினர். அதை செல்பி வீடியோவாக எடுத்துள்ளார் ராஜமௌலி.

பாகுபலி படத்திலும் இதுபோன்ற கோஷங்கள் இருந்தன. அது படத்திற்காக எடுக்கப்பட்டது என்றாலும் இது நிஜத்தில் நிறைவேறியது என்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம் ராஜமௌலி.

Director Rajamouli reaction In Japan Baahubali 2 got huge response

தாய்மொழிக்கே துரோகம் செய்தவர் ரஜினி.; பாரதிராஜா மீண்டும் தாக்கு

தாய்மொழிக்கே துரோகம் செய்தவர் ரஜினி.; பாரதிராஜா மீண்டும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Again Bharathiraja speaks against Rajinikanthகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டு பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட, சிலர் காவல் துறையினரை தாக்கினர்.

இதை கண்டிக்கும் வகையில் ‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.” என கருத்து தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.

இதனை கண்டித்த பாரதிராஜா… கர்நாடக் காவியின் தூதுவர் ரஜினி என கடுமையாக விமர்ச்சித்திருந்தார்.

ரஜினியிடம் இந்த கருத்து குறித்து கேட்டதற்கு, அரசியலில் இதெல்லாம் சகஜம் என கூறியிருந்தார்.

தற்போது மீண்டும் ரஜினி பற்றி பரபரப்பாக பேசியுள்ளார் பாரதிராஜா.

‘நான் ஒரு பச்சைத் தமிழன் என ரஜினி கூறுகிறார். இதன் மூலம் அவர் தன் தாய் மொழி கன்னடத்திற்கு துரோகம் செய்துள்ளார்.

தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? முதலில் எதிரியை துரத்துவோம்.

பின்னர் அண்ணன், தம்பி பிரச்னைகளை பார்த்துக் கொள்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Again Bharathiraja speaks against Rajinikanth

More Articles
Follows