அன்புச்செழியன் இல்லன்னா அஜித்-விஜய் படங்கள் கிடையாது : ராஜகுமாரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பாளர் அன்புசெழியன் கொடுத்த கந்துவட்டி பணத்தை கேட்ட விவகாரத்தால் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்துக் கொண்டார்.

எனவே அன்புசெழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷால், சுசீந்திரன், அமீர் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் அன்புசெழியன் நல்லவர், அவர் மீது தவறில்லை என விஜய் ஆண்டனி, தேவயாணி, இயக்குனர் ராஜகுமாரன், தயாரிப்பாளர்கள் தானு, டிசிவா, சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் ராஜகுமாரன் பேசும்போது…

தமிழ் சினிமாவில் தயாராகும் பாதி படங்கள் அவருடைய பணத்தில்தான் தயாராகிறது.

அவர் பணமில்லாமல் அஜித், விஜய் படங்கள் கூட உருவாகாது. அவரே தயாரிப்பாளருக்கு பணம் கொடுத்து உதவுகிறார்.

படத்தின் வெளியீட்டு சமயத்திலும் அவர் பல பேருக்கு உதவி செய்து வருகிறார்.” என்று பேசினார்.

நாச்சியார் டீசர் சர்ச்சை; பாலா-ஜோதிகா மீது பாய்ந்தது வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா இசையில் பாலா உருவாக்கியுள்ள படம் நாச்சியார்.

இதில் நாயகனாக ஜிவி. பிரகாஷ் நடிக்க, கதையின் நாயகியாக ஜோதிகா நடித்துள்ளார்.

சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் ஜோதிகா பேசிய அந்த தே….. என்ற கெட்ட வார்த்தைதான்.

இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இப்படத்தை இயக்கிய பாலா மற்றும் அந்த கெட்ட வார்த்தையை பேசிய ஜோதிகா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது

பெண்மையை இழிவுப்படுத்தும் கெட்ட வார்த்தை பயன்படுத்தியாகவும், பொது வெளியில் ஆபாசமாக பேசிய குற்றத்திற்காகவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாம்.

கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக பிந்துமாதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் சார்ந்த கதையை படமாக்கவுள்ளார் கரு.பழனியப்பன் என்பதை பார்த்தோம்.

அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘புகழேந்தி எனும் நான்’ என பெயரிட்டுள்ளனர்.

தற்போதுள்ள இந்திய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக பிந்து மாதவி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிந்து மாதவி கூறும்போது,

“நல்ல கதையாகவும் நல்ல கேரக்டராகவும் அமைய காத்திருந்தேன். அப்படி எனக்கு அமைந்த படம் ‘புகழேந்தி எனும் நான்’.

இது அரசியல் சார்ந்த படம் என்றாலும் நாயகி கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளது.

மேலும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும் கரு.பழனியப்பன் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

அன்புசெழியனுக்கு ஆதரவளித்த விஜய்ஆண்டனியை கிண்டல் செய்த கரு.பழனியப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பைனான்சியரும் தயாரிப்பாளருமான அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்துக் கொண்டார்.

இது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பலரும் அன்புசெழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில், சரத்குமார், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் அன்புசெழியனுக்கு ஆதரவாக பேசினர்.

மேலும் அன்புசெழியனுக்கு ஆதரவாக விஜய் ஆண்டனி ஒரு செய்தி வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் கருத்துக்கு எதிராக இயக்குநர் கரு.பழனியப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கரு பழனியப்பன்‏ @karupalaniappan

விஜய் ஆண்டனி…
உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்!

விஜய் ஆண்டனி, நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும், கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும், அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும், மாறாதிருக்க பரம பிதா அருள் பாலிக்கட்டும்..! என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார் கரு.பழனியப்பன்.

Karu Pazhaniappan statement against Vijay Antony in AnbuChezhiyan Finance issue

அதர்வாவுடன் இணையும் தனுஷ் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

மேலும் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகும் ‘ஒரு பக்க கதை’ படத்திலும் இவர் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த இரண்டு படங்களும் இன்னும் வெளியாகவில்லை.

அதற்குள் அதர்வாவுடன் இணையும் வாய்ப்பு மேகா ஆகாஷ்க்கு கிடைத்துள்ளது.

‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து கண்ணன் இயக்கும் படத்தில்தான் இந்த வாய்ப்பு அவருக்கு வந்துள்ளது.

Dhanush heroine Megha Akash to romance with Atharva

தலைமறைவான அன்புசெழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் என்பவர் பைனான்சியர் அன்புச்செழியனிடம் கந்துவட்டி முறையில் கடன் வாங்கியிருந்தார்.

கடன் நெருக்கடி அதிகரித்த நிலையில், அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டார்.

எனவே தற்கொலைக்கு தூண்டியதாக அன்புசெழியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட, இதனையறிந்த அன்புச்செழியன் தலைமறைவானார்.

தற்போது அவரை போலீசார் தேடி வரும் நிலையில், அன்புச்செழியனுக்கு எதிராக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெளிநாடுகளுக்கு அவர் தப்பிச் செல்வவதை தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Police Issued Lookout Notice Against Financier Anbu Chezhiyan

More Articles
Follows