தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வருடம் 2017 டிசம்பர் 31ஆம் தேதி ஆன்மிக அரசியல் செய்ய போகிறேன் என ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.
அன்றுமுதல் ரஜினியின் இந்த பேச்சு தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆன்மிக அரசியல் என்னவென்றே தெரியாமல் பலரும் பலவிதமாக பேசத் துவங்கினர்.
அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.
அவர் பேசியதாவது…
தூய்மை என்பது தான் ஆன்மீக அரசியல். நேர்மையானது.
இனிமேல்தான் நீங்கள் ஆன்மிக அரசியலை பார்க்கப் போகிறீர்கள்.
கருணாநிதி போன்ற ஒரு எழுத்தாளர், பேச்சாளர், சிறந்த அரசியல் ஞானி இந்தியாவிலேயே கிடையாது.
13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அவர் கட்சியைக் கட்டிக்காத்தார்.
இதேபோல் இந்தியாவிலேயே கட்சியைக் கட்டுப்பாட்டுடன், நல்ல ஆளுமையுடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா.
இதுநாள் வரை அரசியலுக்கு வராத நீங்கள் ஏன் இப்போது அரசியலுக்கு வருகிறீர்கள் என்கிறார்கள்.?
இந்த 67 வயதில் அரசியலுக்கு வரவேண்டியுள்ளது. ஆமாய்யா தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
தலைவனுக்கும் தலைமைக்கும் வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்பவே நான் அரசியலுக்கு வருகிறேன்.” என்று அதிரடியாக மனதில் உள்ளதை பட்டென பகிரங்கமாக பேசினார் ரஜினிகாந்த்.
There is No good leader in Tamilnadu so I entered in Politics says Rajini