மெர்சல் 2… விஜய்க்காக காத்திருக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

மெர்சல் 2… விஜய்க்காக காத்திருக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay with producer hema rukmaniஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தை தன் 100வது படைப்பாக தயாரித்தது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.

இப்படத்திற்கு பாஜக.வின் எதிர்ப்பு கிளம்பியதால் படம் வேறு விதத்தில் இந்தியா முழுக்க பிரபலமானது.

படம் வெளியாகி 2 வாரங்களை கடந்துள்ளநிலையில் ரூ. 200 கோடி வசூலையும் அள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் 2ஆம் பாகம் வெளிவருமா? என கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய் சார் ஓகே சொன்னால் மெர்சல் 2 படத்தை தயாரிக்க காத்திருக்கிறோம் என தயாரிப்பு நிறுவனமே கூறிவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மேலும் தன் அடுத்த படமும் விஜய் உடன்தான் என ஒரு பேட்டியில் அட்லி தெரிவித்திருந்தார்.

எனவே மெர்சல் 2 படம் உருவாக நிச்சயம் வாய்ப்புள்ளது என நம்பலாம்.

விஜய்-முருகதாஸ் படத்திற்கு யாரும் எதிர்பாராத இசையமைப்பாளர்.?

விஜய்-முருகதாஸ் படத்திற்கு யாரும் எதிர்பாராத இசையமைப்பாளர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sam cs musicமெர்சல் படத்தை முடித்துவிட்டு ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுநாள் வரை யுவன் அல்லது அனிருத் அல்லது ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில் சாம் பற்றிய பேச்சுவார்த்தை எழுந்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

Music composer Sam CS may score music for Vijay 62

தீரன் அதிகாரம் ஒன்று என்ன மாதிரியான கதை..? கார்த்தி விளக்கம்

தீரன் அதிகாரம் ஒன்று என்ன மாதிரியான கதை..? கார்த்தி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Theeran Adhigaaram Ondru story revealed by movie teamட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கார்த்தி, தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ரகுல் ப்ரீத் சிங், இயக்குநர் H.வினோத், ஜிப்ரான், கலை இயக்குநர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கார்த்தி பேசியது…

தீரன் அதிகாரம் ஒன்று வழக்கமான போலீஸ் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் புதுமையான படமாக இருக்கும்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்கு பின் இந்த படத்தின் படபிடிப்புக்காக ராஜஸ்தான், ஜெய்சால்மர் போன்ற இடங்களுக்கு படபிடிப்புக்காக சென்றோம்.

அங்கே கடுமையான வெயில் மற்றும் குளிரை தாங்கிக்கொண்டு படபிடிப்பை நடத்தினோம். இந்த படத்தின் கதை நான் “ சிறுத்தை “ படத்துக்காக படபிடிப்பில் இருந்த போதே எனக்கு தெரியும்.

அப்போது வந்த அதே கதை மீண்டும் என்னிடம் வந்தது. நம்மை சுற்றியே இந்த கதை வந்துகொண்டு இருக்கிறதே என்று நான் யோசித்து இந்த கதையில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடித்தேன்.

நாம் ரோட்டில் நடந்து செல்லும் போது எதிரே வரும் யாரும் நம்முடைய கண்ணை பார்க்க மாட்டார்கள்.

அதையெல்லாம் தாண்டி ஒருவர் நம்முடைய கண்ணை பார்ப்பார் அவரிடம் சென்று பேசினால் அவர் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை நம்மிடம் சொல்லுவார் என்று என்னிடம் “ மாற்று உலகத்தை “ பற்றி அதிகம் படித்த என்னுடைய நண்பன் கூறுவார்.

அதே போல் தான் இந்த படத்தின் கதை என்னை சுற்றியே வந்துக்கொண்டே இருந்தது. நாங்கள் ராஜஸ்தானுக்கு படபிடிப்புக்கு சென்ற போது அங்கே ஓரிடத்தில் இதோ நம்ம கார்த்தி வரார் என்ற தமிழ் குரல் கேட்டது.

அவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தால் நம்ம சென்னை, சௌகார்பேட்டை மக்கள் தான். அவர்களிடம் நீங்கள் எப்படி இங்கே எப்படி என்று கேட்டபோது “ பூஜைக்காக வந்தோம், குடும்ப நிகழ்வுக்காக வந்தோம் “ என்று பதில் அளித்தனர்.

தீரன் அதிகாரம் ஒன்று முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும். ரகுல் ப்ரீத் சிங் உடன் நான் நடித்த காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது.

இந்த படத்தில் காலையில் காரை ஸ்டார்ட் பண்ணும் போது கேட்க ஒரு அழகான மெலடி பாடல், காரை எனர்ஜியுடன் ஓட்ட ஒரு ஹிந்தி குத்து பாடல், காரை வேகமாக ஒட்டி செல்லும் போது கேட்க ஒரு ஹீரோ இன்ட்ரோ பாடல், மீண்டும் ஒரு அழகான மெலடி என்று மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்களை நமக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் தந்துள்ளார்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் எந்த போலீஸ் படத்தின் சாயலும் தெரியாது. இயக்குநர் என்னிடம் என்ன கேட்டாரோ அதை நான் இந்த படத்தில் தந்துள்ளேன்.

தீரன்-ல் நான் இயக்குநரின் நடிகராக தான் இருந்துள்ளேன். இந்த படம் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்றார் கார்த்தி.

நிகழ்ச்சியில் இயக்குநர் வினோத் பேசியது

போலீஸ் என்றாலே தவறானவர்கள் தான் என்ற பிம்பம் மக்கள் மனதில் உள்ளது. அதற்கு காரணம் வாட்ஸ்ஆப்பில் வரும் போலீஸ் வீடியோக்கள் தான்.

அந்த தவறான பிம்பத்தை மாற்ற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். எப்படி சினிமாவில், அரசியலில், பத்திரிக்கையாளர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்களோ அதே போல் தான் காவல் துறையிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இருக்கிறார்கள்.

நிஜமான போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அதேபோல் தான் இந்த படத்திலும் இருப்பார்கள். தீரன் அதிகாரம் ஒன்று கமர்ஷியல் படம். எல்லோருக்கும் இப்படம் ஒரு பாடம் போல் இருக்கும்.

ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு படம். படத்தில் தீரன் திருமாறன் என்ற போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ளார்.

போலீசை சுற்றி நடக்கும் பரபரப்பான கதையாக இதை உருவாக்கியுள்ளோம். ஜிப்ரான் மிகச்சிறந்த பாடல்களை இந்த படத்துக்கு தந்துள்ளார் என்றார் இயக்குநர் வினோத்.

Theeran Adhigaaram Ondru story revealed by movie team

Theeran Adhigaaram Ondru Audio Launch Photos (19)

கர்வத்தால் அழிந்து போகும் மனிதத்தை சொல்லும் படம் சீமத்துரை

கர்வத்தால் அழிந்து போகும் மனிதத்தை சொல்லும் படம் சீமத்துரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seemathurai movie stills (4)புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”.

கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

“ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஊரில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம்.

அப்படி ஒரு அசால்ட் அடையாளத்துடன் யார் பேச்சையும் கேட்காமல் ஊருக்குள் சுத்திக் கொண்டிருப்பவனுக்குள் காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதே இந்த படத்தின் கதைக்கரு.

வாழ்வியலின் அங்கமான காதலையும், அதன் மேல் கொண்ட பாசத்தையும், கர்வத்தால் அழிந்து போகும் மனிதத்தையும் நிறம் மாறாமல் சொல்லும் படம் தான் ‘சீமத்துரை'”, என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.

ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையில் பாடல்களை அண்ணாமலை, வீணை மைந்தன், ஹரி கிருஷ்ணதேவன் ஆகியோர் எழுதியுள்ளனர். D திருஞான சம்பந்தம் ஒளிப்பதிவு செய்ய, ’மேயாதமான்’ படத்தின் ’தங்கச்சி’ பாடலுக்கு நடனம் அமைத்த சந்தோஷ் முருகன் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை, ’பிச்சைக்காரன்’ படத்தின் படத்தொகுப்பாளரான T வீர செந்தில்ராஜூம், கலை இயக்கத்தை ’மரகத நாணயம்’ படத்தின் கலை இயக்குநர் N K ராகுலும் மேற்கொண்டுள்ளனர்.

இணை தயாரிப்பு : ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம், புவன் மீடியா வொர்க்ஸ்., E சுஜய் கிருஷ்ணா தயாரிக்கிறார்.

நடிகர்கள், நடிகையர்
கதைநாயகன் : கீதன்
கதைநாயகி : வர்ஷா பொல்லம்மா
மற்ற நடிகர்கள் : விஜி சந்திரசேகர், ‘கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர்

தொழில்நுட்பக் கலைஞர்கள்

இசை : ஜோஸ் ஃப்ராங்க்ளின்
ஒளிப்பதிவு : D திருஞான சம்பந்தம்
படத்தொகுப்பு : T வீர செந்தில்ராஜ்
பாடல்கள் : அண்ணாமலை, வீணை மைந்தன், ஹரி கிருஷ்ணதேவன்
நடனம் : சந்தோஷ் முருகன்
தயாரிப்பு : புவன் மீடியா வொர்க்ஸ்., E சுஜய் கிருஷ்ணா
இணை தயாரிப்பு : ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : சந்தோஷ் தியாகராஜன்

Seemathurai movie news updates

ரஜினி-கமல்-விக்ரம் பட சாதனைகளை முறியடிப்பாரா விஜய்.?

ரஜினி-கமல்-விக்ரம் பட சாதனைகளை முறியடிப்பாரா விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Mersal break the collection records of Rajini Kamal Vikram moviesகடந்த அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளியன்று விஜய் நடித்த மெர்சல் படம் வெளியானது.

தமிழகளவில் ரஜினியின் கபாலி படம்தான் முதல் நாளில் ரூ. 21.5 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் இருந்தது.

அந்த வசூல் சாதனையை ரூ. 22 கோடி வசூலித்து மெர்சல் முறியடித்தது.

தற்போது இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 210 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

இதுதான் விஜய் படங்களிலேயே ரூ. 200 கோடியை தாண்டிய முதல் படம் என கூறப்படுகிறது.

இதுவரை தமிழ் படங்களில் 200 கோடி பட வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன், கபாலி மற்றும் கமலின் விஸ்வரூபம், விக்ரமின் ஐ ஆகிய படங்கள் மட்டுமே இருந்தன.

தற்போது அந்த வரிசையில் மெர்சலும் இணைந்துள்ளது.

ஐ படம் ரூ. 240 கோடியை வசூலித்து இருந்தது. அதனை தொட இன்னும் 30 கோடி வரை மெர்சலுக்கு தேவைப்படுகிறது.

அதை மெர்சல் முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Will Mersal break the collection records of Rajini Kamal Vikram movies

தீராத மழை; திணறும் சென்னை; ஆர்ஜே.பாலாஜி வேண்டுகோள்

தீராத மழை; திணறும் சென்னை; ஆர்ஜே.பாலாஜி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor RJ Balaji request to peoples about Heavy rain in Chennaiதமிழகத்தில் பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

ஒரு மணி நேரம் மழைக்கே தாங்காத சென்னை, இந்த ஓயாத மழைக்கு தாங்குமா? என்பதே பலரின் கேள்வியாகும்.

இதனால் பேருந்து மற்றும் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் காமெடி நடிகர் RJ பாலாஜி மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பலரும் ஆட்டோ வசதியில்லாமல் அவதிப்படுகின்றனர்.

வண்டியில் செல்பவர்கள் லிப்ட் கொடுத்து உதவுங்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள் என தெரிவித்துள்ள அவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள பிக் எப்.எம். ஆபிஸில் இரவு தங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Actor RJ Balaji request to peoples about Heavy rain in Chennai

RJ Balaji‏Verified account @RJ_Balaji
Whats app groups, page admins and everyone across social media plz dont share unauthentic information that too with a random ‘VERIFIED’ tag.
If u r out thre with a vehicle,you b safe n Plz offer LIFT to people who r stranded on roads. Thre r no rental cars and autos. #ChennaiRains

People stranded around Nungambakkam area can use the Big FM office to stay for the night. Have informed ppl thre. Address in next tweet.

Address – Big FM, 152/153, azam arcade, (dominos building), kodambakkam high road, nungambakkam, chennai-600034. Landmark – opp to palmgrove

More Articles
Follows