தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. புத்தாடைகள் இனிப்பு வகைகள் பட்டாசுகள் வாங்கி தீபாவளி கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
சினிமா ரசிகர்கள் புது படங்களை திரையரங்குகளில் காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
புதுப்படங்கள் என்றாலே முதல் நாள் காட்சிக்கு டிக்கெட் விலை அதிகமாக உள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக டிக்கெட் விலையை உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.
தற்போது புதுச்சேரி திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது
அதன்படி ரூ. 150க்கு விற்க்கப்பட்ட பால்கனி டிக்கெட் ரூ.170 ஆகவும், ரூ.100க்கு விற்க்கப்பட்ட முதல் வகுப்பு டிக்கெட் ரு. 130க்கும், இரண்டாம் வகுப்பு ரூ. 70 லிருந்து ரூ. 100, மற்றும் மூன்றாம் வகுப்பு ரூ. 50ல் இருந்து ரூ. 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கைக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
கூடுதல் தகவல்…
8-ஆண்டுகளுக்கு பின்னர் புதுச்சேரியில் சினிமா டிக்கெட் விலை 20% உயர்ந்துள்ளது. நாளை நவம்பர் 10 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்த ஜப்பான், லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் x, விக்ரம் பிரபு ஸ்ரீதிவ்யா நடித்த ரெய்டு மற்றும் காளி வெங்கட் நடித்த கிடா உள்ளிட்ட படங்கள் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
Theatre cinema tickets price raised 20% in Puducherry