ஜூன் 17 முதல் ‘வீட்ல விசேஷம்’ நடத்த வரும் போனிகபூர்-ஆர்ஜே. பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வலிமை’ படத்தை அடுத்து உதயநிதி நடிப்பில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் போனி கபூர்.

இந்த படம் தயாரிப்பதற்கு முன்பே ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்கும் “வீட்ல விசேஷம்” என்ற படத்தையும் தயாரித்து வந்தார்.

Romeo Pictures ராகுலுடன் இணைந்து Zee Studios & Bayview Projects சார்பில் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் ஹிந்தி பிளாக்பஸ்டர் படமான ‘பதாய் ஹோ’ படத்தின் தழுவலாகும்.

RJ பாலாஜி மற்றும் N.J.சரவணன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.

எல்.கே.ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை போல N.J.சரவணனுடன் இணைந்து இயக்கியுள்ளார்.

RJ பாலாஜி நாயகனாக நடிக்க இவருடன் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மறைந்த நடிகை KPAC லலிதா, சீமா, ரமா, பிரதீப் கோட்டயம், புகழ், ஷிவானி நாராயணன், யோகி பாபு, ரவிக்குமார் மேனன், ஷங்கர் சுந்தரம் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பொதுவாக, பெரும்பான்மையான திரைப்படங்கள் கதாநாயகர்களை போலீஸ்காரர்களாகவோ, ரௌடிகளாகவோ அல்லது தீவிரமான பாத்திரங்களாகவோ தான் சித்தரிக்கின்றன. மாறாக, வீட்ல விஷேஷம் ஒரு எளிமையான இளைஞனைப் பற்றியது, அவன் குடும்பத்திற்குள் எழும் சில எதிர்பாரா சிக்கல்களை அசாதாரண சூழலை, அவன் எதிர்கொள்வதை 100% வேடிக்கை மற்றும் பொழுதுபோக்குடன் இத்திரைப்படம் சொல்கிறது.

இப்படக்குழுவினர் மூல படைப்பான ‘பதாய் ஹோ’வின் சாராம்சத்தை, பிராந்திய மொழிக்கேற்றவாறு மாற்றியமைத்துள்ளனர்.

இது மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் என்பதால், தயாரிப்பாளர்கள் இத்திரைப்படத்தை குடும்ப பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் வெளியிட திட்டமிட்டனர், அந்த வகையில் ஜூன் 17, 2022 ல் மாணவர்கள் தங்கள் கல்வி ஆண்டை முடித்திருப்பார்கள் என்பதால் அப்போது குடும்பங்களோடு அனைவரும் இப்படத்தை கொண்டாட முடியுமென்று, அன்றைய தினத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வீட்ல விசேஷம் படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

கார்த்திக் முத்துக்குமார் (ஒளிப்பதிவு), விஜயகுமார் (கலை), பா.விஜய் (பாடல் வரிகள்), செல்வ RK (எடிட்டிங்), கிரீஷ் கோபாலகிருஷ்ணன் (இசை), தினேஷ் (நடன அமைப்பு), சாந்தனு ஸ்ரீவஸ்தவ்-அக்சத் கில்டியல் (கதை), திவ்யா நாகராஜன் (ஆடைகள்), S. விஜய் ரத்தினம் MPSE (ஒலி வடிவமைப்பு), AM ரஹ்மத்துல்லா (ஒலி கலவை), R. ஹரிஹர சுதன் (விஎஃப்எக்ஸ்), ராஜராஜன் கோபால் (DI கலரிஸ்ட்), ராமமூர்த்தி (ஸ்டில்ஸ்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), N விக்கி (தயாரிப்பு நிர்வாகி), P. செல்வ குமார்-சிவ குமார் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு), MK சுரேந்தர், J ஜெகன் கிருஷ்ணன், கார்த்திக் V, TS கோபி, N சிவகுரு, R குமரன், விஷ்ணு கார்த்திகேயன், சிற்றரசன் (திரைக்கதை குழு) , RJ பாலாஜி மற்றும் நண்பர்கள் (திரைக்கதை & வசனம்) இந்த திரைப்படத்தில் முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.

The title and first look poster of RJ Balaji’s #VeetlaVishesham is out now

ரஜினி தாத்தா.. கமல் பாடலை பாடிய தனுஷ்.. WORST SPEAKER.. பர்கர் ரூ. 200..; ROCK WITH RAAJA ஹைலைட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமா இசையுலகை கடந்த 45 ஆண்டுகளாக தன் இசை சாம்ராஜ்யத்தால் ஆள்பவர் இளையராஜா.

எனவே இவரது இசை நிகழ்ச்சிகள் எங்கும் நடந்தாலும் அதனை கண்டு ரசிக்க இசை மழையில் நனைய ரசிகர்கள் கூட்டம் திரளும்.

நேற்று மார்ச் 18ல் சென்னை தீவு திடலில் ROCK WITH RAAJA என்ற இசை நிகழ்ச்சி தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்றது.

டிக்கெட் விலை ரூ. 5000 முதல் 50000 வரை விற்கப்பட்டது. அனைத்து டிக்கெட்டுக்களும் விற்று தீர்ந்த நிலையில் மாலை 6 மணிக்கே மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர்.

ஆனால் வழக்கம்போல சரியாக மாலை 7.35 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது.

இளையராஜாவின் குடும்பத்தினருடன் அவரது இசை குழுவினருடன் நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

பொதுவாக இளையராஜா இசை நிகழ்ச்சிகள் எங்கு நடைபெற்றாலும் தனுஷ் கலந்துக் கொள்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று தனது மகன்கள் லிங்கா, யாத்ரா உள்ளிட்டோருடன் தனுஷ் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தனுஷை மேடைக்கு அழைத்து பாட சொன்னார் இளையராஜா.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து இளையராஜா இசையில் உருவான ‛நிலா அது வானத்தின் மேலே’ (நாயகன் படம்) என்ற பாடலை பாடினார் தனுஷ். இவருடன் இணைந்து யுவன், கார்த்திக் ராஜா ஆகியோரும் பாடினர்.

இதே பாடலின் டியூனை வைத்து ஒரு தாலாட்டு பாடல் எழுதியுள்ளதாகவும் அதை பாட அனுமதி கேட்டார் தனுஷ். இளையராஜாவின் அனுமதியோடு அந்த பாடலை பாட அரங்கத்தில் கரவொலி எழுந்தது.

அதுபோல் ரஜினி திரைக்கதையில் உருவான ‘வள்ளி’ படத்தில் இடம்பெற்ற என்னுள்ளே.. என்னுள்ளே.. என்ற பாடல் முடிந்தபிறகு.. தனுஷை பார்த்து.. இந்த பாட்டுக்கு உங்க மாமனார் தான் SITUATION சொன்னார்.

தனுஷின் மகன்களை பார்த்து… உங்க (ரஜினி) தாத்தா கிட்ட சொல்லுங்க.. உங்க அப்பா பாடினதை என்று சொன்னார் இளையராஜா.

இப்படியாக கலகலப்பாக நிகழ்ச்சி சென்றாலும் SPEAKER SYSTEM பெரும் குறையாக கூறப்பட்டது. பாடல் சரியாகவே ஒலிக்கவில்லை. கடைசியில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது.

ஓரிரு முறை இளையராஜாவே ஸ்பீக்கர் குறைகளை சுட்டிக் காட்டினார்.

அங்கு வாட்டர் பாட்டீல்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. அதுபோல் பர்க்கர், சான்ட்விட்ச் உள்ளிட்ட உணவுகள் ரூ. 200க்கு விற்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Dhanush makes first public appearance with sons at Rock with Raja concert

சிரஞ்சீவி-ஸ்ருதிஹாசன் படத்தில் இணைந்த நிவேதா பெத்துராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆச்சாரியா என்ற படத்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இதனையடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் காட்ஃபாதர் படத்தில் நடிக்கிறார்.

இதனையடுத்து சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தை பாபி இயக்குகிறார்.

இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்ற செய்தியை பார்த்தோம்.

இதில் பிரபல தெலுங்கு ஹீரோ ரவி தேஜா முக்கிய கேரக்டரில் நடிக்க அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க உள்ளார்.

தெலுங்கில் விராட பருவம், பிளட் மேரி போன்ற படங்களில் நடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

Nivetha Pethuraj is on board for Chiranjeevi – Shrutihaasan’s film

AK-61-62-63 படங்களின் அப்டேட்.. அஜித்துடன் இணையும் நயன்தாரா & வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கிய வலிமை படத்தை அடுத்து மீண்டும் அதே இயக்குனருடன் இணைந்துள்ளார் அஜித்.

இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு தற்காலிகமாக AK61 என்று டைட்டில் வைத்துள்ளனர்.

சென்னை அண்ணாசாலை போன்ற செட் ஒன்றை ஐதராபாத்தில் இந்த படத்திற்காக உருவாக்கியுள்ளனர்.

இதனையடுத்து அஜித்தின் 62வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதை பார்த்தோம்.

இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கப் போவதாக தகவல்கள் வந்துள்ளன. அனிருத் இசையமைக்கவுள்ளாராம்.

இன்று மார்ச் 18ல் மாலை இப்படத்தின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் 63 பட தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன.

இந்த படத்தை சிவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு அஜித்துடன் வடிவேலு இணைந்து நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ராஜா, ஆனந்த பூங்காற்றே படத்தில் அஜித் வடிவேலு இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிவா என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith Kumars upcoming movie updates

பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் இணைந்த நயன்தாரா..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மலையாளத்தல் சூப்பர் ஹிட்டான படம் ‘லுசிஃபர்’.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கை ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் தமிழ் இயக்குனர் மோகன்ராஜா இயக்கி வருகிறார்.

நயன்தாரா நாயகியாக நடிக்க தமன் இசையமைக்க நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஒரே படத்தில் சால்மான்கான் சிரஞ்சீவி இணைவதால் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் என நம்பலாம்.

Actress Nayanthara joins with Salman Khan

சாமி காலில் விழுந்தால் ஒன்னும் கிடைக்காது..; செல்ஃபி பிரஸ் மீட்டில் மிஷ்கின் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நாயகன் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் மதிமாறன், நடிகர்கள் சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் படக்குழுவினருடன் இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இயக்குனர் மதிமாறன் பேசும்போது…

‘விழாவிற்கு மிஷ்கின் சார் வந்ததில் எனக்கு பெருமை. இது நன்றியுரையாக எடுத்துக் கொள்ளலாம். வெற்றிமாறன் சார் என் குறும்படத்தை பார்த்து என்னை உதவியாளராக சேர்த்துக் கொண்டார். நீ உதவி இயக்குனராக எவ்வளவு வேலை செய்கிறீயோ அது உன் படத்தில் பிரதிபலிப்பாக மாறும் என்றார். அவரிடம் எடுத்த பயிற்சிதான் செல்ஃபி திரைப்படம். தாணு சார் அவர்களைப் பார்த்துதான் படம் எடுக்க வந்தோம். என் தயாரிப்பாளர் சபரிஷ், குணாநிதி இருவருக்கும் ரொம்ப நன்றி.

இது லாபகரமான படமாக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் சார் ஸ்டிடுயோவில்தான் எனக்கான நிறைய விசயங்கள் நடந்தது. ஜி.வி.பிரகாஷுக்கு ரொம்ப நன்றி. படப்பிடிப்பு தளத்தில் அவர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். ஒளிப்பதிவாளர் விஷ்ணு, எடிட்டர் இளையராஜா உள்பட படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. சுப்பிரமணிய சிவா சாருக்கும் நன்றி. இப்படம் எல்லாருக்கும் பிடிக்கும்” என்றார்.

ஜி.வி.பிரகாஷ் பேசும்போது…

‘அனைவருக்கும் வணக்கம்.. மிஷ்கின், கல்யாணம் சார் உள்ளிட்ட அனைவரின் வருகைக்கும் நன்றி. வெற்றிக்கு நன்றி சொன்னால் அதற்குள் மதிமாறனும் அடங்குவார். என் ஸ்டுடியோவில் முதன் முதலில் சந்திக்கும் போது, இவரோடு படம் பண்ணுவேன் என்று நினைக்க வில்லை. இந்தப்படத்தில் நிறைய விசயங்களைப் பற்றிப் பேசியிருக்கோம்.

நான் நடித்த படங்களைப் பார்க்கும் போது தவறுகளைத்தான் பார்ப்பேன். இந்தப்படம் ரொம்ப நல்லா வந்துருக்கிறது. தாணு சார் இந்தப்படத்திற்குள் வந்த பிறகு வணிக ரீதியான வெற்றிக்குள் வந்துவிட்டது’ என்றார்.

மிஷ்கின் பேசும்போது….

‘ரொம்ப அழகான மாலை இது. என் நண்பன் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் இன்று அங்கீகரிக்கப்படும் மேடை இது. வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம். என் உதவி இயக்குனர்களிடம் வெற்றிமாறன் ஜெயித்துக்கொண்டே இருப்பான் என்று சொன்னேன். அப்படி வெற்றியின் பட்டறையில் வந்தவன்தான் மதிமாறன்.

மதிமாறனின் முன் வெற்றி தெரிகிறது. தமிழ்நாட்டில் தற்போதைய பெரிய வில்லன் கவுதம்மேனன் தான். யாரையாவது குத்திக்கிட்டே இருக்கிறான். இந்தப்படம் ஒரு கமர்சியல் படமாக இருக்கும். தற்போது இருக்கும் தலைமுறையினரின் பார்வை ரொம்ப அழகாக இருக்கிறது. இந்த டிரைலரில் ஒரு ஷாட்டில் சுப்பிரமணிய சிவா திறமையாக நடித்திருக்கிறார்.

தாணு சார் எனக்கு முதல் படம் முடிந்ததும் 50000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார். இதுவரை பணத்தை திருப்பி கேட்கவில்லை. முதலில் ஒரு கதை சொன்னேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. இளைய தலைமுறை நிறைய பேருக்கு ஆலமரமாக தாணு சார் செயல்படுகிறார். ஜிவி பிரகாஷ் கூட நான் சீக்கிரம் வேலை செய்ய வேண்டும்.

சாமியின் காலில் விழுந்தால் ஒன்றும் கிடைக்காது. என்னை பொருத்தவரை நல்லபடம் எடுப்பவன்தான் சாமி. மதிமாறன் நல்ல படம் எடுத்தால் நிச்சயமாக அவர் காலிலும் விழுவேன்” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.தாணு பேசும்போது…

‘மதிமாறன் இயக்கி இருக்கும் செல்ஃபி படம் கமர்சியலாக இருக்கிறது என்று மிஷ்கின் சொன்னார். அதற்கு நாங்கள் தான் காரணம். படம் பார்த்துவிட்டு கண்கள் பளித்து இயக்குனர் மதிமாறனை கட்டிபிடித்து ஆரத்தழுவார்கள். இந்தப்படம் மூன்று மடங்கு லாபத்தை தரும். அதில் மாற்றமே இல்லை. மதிமாறன் மிகச்சிறப்பான படமாக எடுத்துள்ளார். அடுத்த படம் மதிமாறன் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும்.

ஜி.வி.பிரகாஷுக்கு ஒரு சவாலான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த படம் ஜி.வி.பிரகாஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். கவுதம் மேனனின் நடிப்பு ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு. இயக்குனர் மதிமாறன் சொன்ன தேதியில் செலவை குறைத்து சரியாக படத்தை முடித்துக் கொடுத்தார். வெற்றியின் பாதையில் மதிமாறன் பயணித்தால் மிகப்பெரிய வெற்றியை அடைவார்” என்றார்.

வெற்றிமாறன் பேசும்போது….

‘மதிமாறன் சுய மரியாதையுடன் இருப்பவன். ஒரு குறும்படம் எடுத்து என்னிடம் வந்தான். அதைப்பார்த்து விட்டு அவனை என்னோடு சேர்த்துக்கொண்டேன். ஒரு நல்ல சினிமாவிற்கான எனர்ஜி அவனிடம் இருந்தது. ஆடுகளம் படம் ஷூட்டிங்கில் மதிமாறன் ஜூனியர். ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் அவன் வேலை ரொம்ப பெரியது. செல்ஃபி படத்தின் படப்பிடிப்பை 29 நாட்களில் முடித்து விட்டான். ஆச்சர்யமாக இருந்தது.

இந்தப்படம் மூன்று மடங்கு லாபம் வரும் என்று தாணு சார் சொன்னார். ரொம்ப பெருமையாக இருக்கிறது. நான் படம் பார்த்து விட்டேன். படத்தில் ஒரு ரா எனர்ஜி இருக்கிறது. படத்தில் கேமரா எடிட்டிங் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்தில் கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்திருக்கிறார். டிரைலரை விட படம் சிறப்பாக இருக்கும். மதிமாறனுக்கு நிறைய பாராட்டுக்கள் வரும், கவனமாக இருக்க வேண்டும்.

நமது குறை நிறைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தாணு சார் இந்தப்படத்தை எடுத்துச் செய்யணும் என்று நினைத்ததுதான் நல்ல விசயம். தாணு சார் இப்படத்தை சுற்றி ஒரு விசயத்தைக் கொடுத்திடுவார். அவருக்கு ரொம்ப நன்றி. நான் ஒரு விசயத்தை சொல்லக்கூடாதுன்னு நினைச்சேன். மதிமாறன் எந்த ஒரு இடத்திலும் என் உறவினர் என்பதை காட்டிக்கொள்ளவே இல்லை.

எனக்கு வெற்றிமாறன் என பெயர் வைத்தது மதிமாறனின் அப்பா தான். அவர் என் மாமா. படத்தைப் பார்த்துவிட்டு அவரிடம் பேசினேன். எனக்குப் பிடித்தது என்றேன். நிச்சயமாக இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

குணாநிதி பேசும்போது…

‘2018 ஆம் ஆண்டு தாணு சார் என்னை போனில் அழைத்து, மதிமாறனை அறிமுகம் செய்து வைத்தார். மதிமாறன் சொன்ன கதை எங்களுக்கு மிகவும் பிடித்தது. நாங்கள் படம் தயாரிக்க தாணு சார் மிகவும் உதவினார். தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு படத்தை தயாரித்து தியேட்டரில் வெளியிடுவது மிகவும் கடினம். அது தற்போது சாத்தியம் என்றால், அதற்கு ஒரே காரணம் தாணு சார். ஜி.வி.பிரகாஷ் மிகவும் அன்புக்குரியவர். செல்ஃபி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். மதிமாறன் இயக்கத்தில் நடித்ததது ரொம்ப பெருமையாக இருக்கிறது. வெற்றிமாறன் சார், மிஷ்கின் சார், சுப்பிரமணிய சிவா சார் ஆகியோர் வந்து வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி’ என்றார்.

Mysskin speech at Selfie press meet

More Articles
Follows