டிராபிக் ராமசாமி மரணம்.: பெரிய கட்டிடங்களுக்கு பார்க்கிங் வசதி கட்டாயம் என ஆணை வாங்கியவர் இவரே.; அவரின் பாதை ஒரு பார்வை

டிராபிக் ராமசாமி மரணம்.: பெரிய கட்டிடங்களுக்கு பார்க்கிங் வசதி கட்டாயம் என ஆணை வாங்கியவர் இவரே.; அவரின் பாதை ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டவர் டிராபிக் ராமசாமி.

2021 மார்ச் மாதம் இறுதி வாரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார் இராமசாமி.

இவர் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 87.

இறப்பதற்கு முன்பு அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவிற்கு கனிமொழி, ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டிராபிக் ராமசாமி கடந்து வந்த பாதை..
—————————————————————-

சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவார்.

எனவே தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது.

பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது என்ற நடைமுறையைக் கடைப்பிடித்தவர்.

இவரின் நேர்மையே இவருக்கு எதிரிகளை உருவாக்கி தந்தது. எனவே ராமசாமிக்கு ஆயுதப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறைப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு இருந்தது.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ப்ளக்ஸ் பேனர் கலாச்சாரம் அதிகளவில் இருந்தது. நடைபாதைகளில் மக்களுக்கு இடையூறாக பேனர் இருந்தால் இவரே தனி ஆளாக நின்று கிழித்து எறிவார்.

மேலும் அது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுப்பார்.

இவர் ஊர்க்காவல் படையிலும் முன்பு பணியாற்றியுள்ளார்.

சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத் தடை பெற்றவர் இவரே.

சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய முதலாளிகள் உள்ளனர்.

அவர்களுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க காரணமாக இருந்தார். அதன்படி கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு வழிமுறையை உருவாக்க இது வழி வகுத்தது.

சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார்.

“தேர்தல் களம்..*

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

2015 ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

2015 ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக தனித்து நின்றார்.

டிராபிக் ராமசாமி-யின் வாழ்க்கை வரலாற்று படம் அவரது பெயரிலேயே உருவானது. இவரது கேரக்டரில் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் நடித்திருந்தார்.

The one man army Traffic Ramaswamy passes away

குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டும்.; சர்ச்சைக்குரிய கருத்தால் கங்கனா ரணாவத் ட்விட்டர் அக்கௌண்ட் முடக்கம்

குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டும்.; சர்ச்சைக்குரிய கருத்தால் கங்கனா ரணாவத் ட்விட்டர் அக்கௌண்ட் முடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kangana ranautபாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணாவத்.

இவர் தற்போது தமிழில் விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.

சிறந்த நடிகைக்கான 4 தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.

இவர் ஏதாவது கருத்துக்களை கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர்.

கடந்த சில தினங்களாக மேற்கு வங்கத்தில் நடக்கும் கலவரங்கள் குறித்து அடிக்கடி பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதன் காரணமாக அவருக்கும் டுவிட்டர் பாலோயர்களுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.

இதனையடுத்து அவர் கருத்துக்கள் வன்முறையைத் தூண்டும் விதமாக இருந்ததாகக் கூறி டுவிட்டர் நிறுவனம் அவருடைய கணக்கை முடக்கிவிட்டது.

கங்கனாவின் கணக்கிலிருந்து வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்துக்கள் பதிவிட்டு வந்ததால் அவருடைய ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளோம் என ட்விட்டர் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Twitter suspends Kangana Ranaut account permanently

இலவச ரேஷன் பொருட்கள்.. வாடகை கார் ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ 5000 உதவித்தொகை..; முதல்வர் உத்தரவு

இலவச ரேஷன் பொருட்கள்.. வாடகை கார் ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ 5000 உதவித்தொகை..; முதல்வர் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

auto driverகொரோனா பரவலைத் தடுக்க கடந்த 3 வாரங்களாக கடும் விதிகளுடன் புதுதில்லியில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

தற்போது வரை புது டில்லியில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எனவே அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளார் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜரிவால்.

இந்த ஊரடங்கால் கொரோனா பாதிப்பு 35% குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்து கூறியுள்ளதாவது…

“ஊரடங்கால் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஆனால், கட்டுமானம் மற்றும் கூலித் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே பதிவு செய்த கட்டிடப் பணியாளர்களுக்கு கடந்த மாதம் ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கினோம்.

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாகப் பொருட்கள் வழங்கப்படும்.

ஆட்டோ, வாடகை கார் ஓட்டுநர்களும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள். அவர்களும் ஊரடங்கு காலத்தில் சிரமப்படுவார்கள்.

இதனால் பதிவு செய்த ஓட்டுநர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் ஊரடங்கு நீக்கப்படும்.” என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Delhi CM provides 5000 rs to auto and cab drivers

கேப்டன் விஜயகாந்தை சந்தித்து ஆசி பெற்றார் உதயநிதி எம்எல்ஏ

கேப்டன் விஜயகாந்தை சந்தித்து ஆசி பெற்றார் உதயநிதி எம்எல்ஏ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

udhayanidhi stalin met vijayakanthதமிழக சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார் உதயநிதி ஸ்டாலின்.

இவரின் முதல் தேர்தலிலேயே இவர் வெற்றி கண்டு எம்எல்ஏ ஆகியுள்ளார்.

இந்த நிலையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார் உதயநிதி.

அப்போது உதயநிதியை எல்.கே.சுதீஷ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

அதனைத்தொடர்ந்து விஜயகாந்திடம் வாழ்த்து பெற்றார் உதயநிதி.

பின்னர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

Udhayanidhi Stalin meets Vijayakanth at his residence

அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிய திமுக-வினர்..; கட்சியில் இருந்து நீக்கி ஸ்டாலின் நடவடிக்கை

அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிய திமுக-வினர்..; கட்சியில் இருந்து நீக்கி ஸ்டாலின் நடவடிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amma unavagam attacked by dmkசென்னை முகப்பேர் ஜெ.ஜெ.நகர் பகுதியில் தமிழக அரசின் அம்மா உணவகம் உள்ளது.

இதில் ஜெயலலிதா புகைப்படத்துடன் இருந்த பதாகைகளை சில திமுகவினர் அடித்து உடைக்கும் வீடியோ காட்சிகள் வெளியானது.

இந்த சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரன், பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அம்மா உணவகத்தின் பெயர் பலகையை அப்புறப்படுத்திய இருவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த பெயர் பலகையை அங்கேயே வைத்து விட்டனர்.

இதுகுறித்து பேசிய சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியன்…

“ஸ்டாலின் அறிவுரையின்படி.. “மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழகத் தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்” என தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

DMK men ransack Amma canteen in Chennai

திமுக வெற்றிக்காக நாக்கை அறுத்து வனிதா காணிக்கை.; விழிகள் குளமாகியதாக ஸ்டாலின் உருக்கமான அறிக்கை

திமுக வெற்றிக்காக நாக்கை அறுத்து வனிதா காணிக்கை.; விழிகள் குளமாகியதாக ஸ்டாலின் உருக்கமான அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DMK Vanithaபரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா (32).

இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போடுவதாக வேண்டியுள்ளார்.

அதன்படி நேற்று காலை பரமக்குடி முத்தாளம்மன் கோயிலில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்துள்ளார்.

அதனை கோயில் உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டுள்ளார்.

இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா என்கிற தி.மு.க தொண்டர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் தன் நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்துவதாகக் கோயிலில் வேண்டிக் கொண்டதோடு அதை நிறைவேற்றியதாகவும் செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்.

தமிழக மக்கள் ஒரு துளி இரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம். நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகச் சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீர்கள்.

அது எனக்கு வருத்தத்தையே வரவு வைக்கும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் இதைப் போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திட கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது. வனிதா என்ற சகோதரி விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்’ என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார் முக ஸ்டாலின்.

Woman cuts off her tongue to keep promise as DMK wins TN

More Articles
Follows