ஆட்டோ ரிக்ஷாக்களில் வலம் வந்த ஹிருத்திக் ரோஷன் – தமன்னா.; ஓ இதான் மேட்டரா?

ஆட்டோ ரிக்ஷாக்களில் வலம் வந்த ஹிருத்திக் ரோஷன் – தமன்னா.; ஓ இதான் மேட்டரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் ஆசிய பசிபிக் பிராந்திய பிரீமியர் மும்பையில் நடைபெற்றது.

இதில் பார்வையாளர்களுடன் பாலிவுட் திரையுலகின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் பிரத்யேக காட்சிக்கு முன்னர் நடைபெற்ற சிவப்பு கம்பள வரவேற்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி உள்ளிட்ட பலர், தொடரின் தயாரிப்பாளரான ஜே டி பெயின் உடன் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்தனர்.

ஹிருத்திக் ரோஷன் - தமன்னா

ஹிருத்திக் ரோஷன் - தமன்னா

‘த லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: ரிங்ஸ் ஆஃப் பவர்’ அமேசான் ப்ரைம் வீடியோவில் செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளுடன், ஆங்கிலம் உள்ளிட்ட பல சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது.

இந்த தொடரின் வெளியீட்டிற்கு முன்னர் பிரைம் வீடியோ, மும்பையில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிரீமியர் எனப்படும் பிரத்யேக காட்சியை திரையிட்டது.

இந்த நிகழ்வில் தொடரி நடித்திருக்கும் நடிகர்களான ரோப் அராமாயோ, மாக்ஸிம் பால்ட்ரி, மார்க்வெல்லா கவென்கா, சார்லஸ் எட்வர்ட்ஸ்,லாயிட் ஓவென்,மேகன் ரிச்சர்ட்ஸ், நஸானின் போனியாடீ, ஈமா ஹோர்வொர்த்,தைரோ முஹாப்ஃதீன், சாரா ஸ்வான்கோபானியந்த் உள்ளிட்ட பலர், தயாரிப்பாளர் ஜே டி பெய்ன் உடன் கலந்து கொண்டனர்.

இந்த பிரத்யேக பிரீமியர் திரையிடல், திரை உலகினரை கவர்ந்தது. ஏனெனில் நடிகர்கள் மற்றும் பட குழுவினர், சிவப்பு கம்பள வரவேற்புக்கு முன் மும்பை திரையுலக பாணியில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்து, அரங்கத்தினுள் நுழைந்தனர்.

இதில் ஹிருத்திக் ரோஷன், தமன்னா, கபீர் கான், நிகில் அத்வானி, பாணி ஜே, ரசிகா துக்கல், சயானி குப்தா, மான்வி சுக்ரூ, ஜிம் ஸர்ப் என திரை உலகில் பிரபலமான கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஹிருத்திக் ரோஷன் - தமன்னா

அரங்கம் நிரம்பி வழிந்த பார்வையாளர்களின் விண்ணை முட்டும் கரவொலியுடன், இந்த தொடரின் தயாரிப்பாளர் ஜேடி பெய்னின் முன்னுரையுடன் பிரீமியர் திரையிடல் தொடங்கியது.

லாஸ் ஏஞ்சல்ஸ், மெக்சிகோ சிட்டி மற்றும் லண்டனில் நடைபெற்ற இந்த தொடருககான பிரத்யேக பிரீமியர்களை தொடர்ந்து உலகளாவிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தி லார்ட் ஆஃப் ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவரின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான பிரீமியர் மும்பையில் நடைபெற்றது.

அமேசான் ஒரிஜினல் தொடரான ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ செப்டம்பர் இரண்டாம் தேதியன்று இரண்டு அத்தியாயங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

அன்று முதல் வாரந்தோறும் புதிய அத்தியாயங்கள் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட பல சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது.

The Lord of the Rings: The Rings of Power Mega Asia Pacific Premiere in Mumbai Sees Record Attendance from Fans and B-town Celebs Alike

‘மகான்’ தந்த வருத்தம்.; மீண்டும் கோப்ரா இயக்குனருடன் இணையும் விக்ரம்

‘மகான்’ தந்த வருத்தம்.; மீண்டும் கோப்ரா இயக்குனருடன் இணையும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

7 வித்தியாசமான வேடங்களில் விக்ரம் நடித்துள்ள படம் ‘கோப்ரா’

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

KGF நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோரு நடித்துள்ளனர்.

இப்படம் வரும் 31 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் நேற்று இரவு ‘கோப்ரா’ படக்குழுவினருடன் விக்ரமும் ட்விட்டர் ஸ்பேசில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது விக்ரம் பேசும்போது, ”3 வருடங்களுக்குப் பிறகு என் படம் தியேட்டரில் வெளியாகிறது.

நானும் துருவ்வும் முதல் முறையாக இணைந்த ‘மஹான்’ படம் தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடியில் ரிலீசானது வருத்தம் தான்.

தற்போது ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்’ என அடுத்தடுத்து என் படங்கள் தியேட்டரில் வெளியாக இருப்பதில் மகிழ்ச்சி.

‘கோப்ரா’ படத்தின் கதை வித்தியாசமானது. கதைக்குத் தேவைப்பட்டதால் நிறைய கெட்டப் போடப்பட்டது. எத்தனை கெட்அப் போட்டேன் என்று எனக்கே நினைவில்லை.

என்னுடைய, 62-வது படத்தில் மீண்டும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் இணைந்து பணிபுரிய உள்ளேன்” என பேசினார் விக்ரம்.

Actor Vikram talks about Cobra and Mahaan

27 வருடங்களாக இருந்த சினிமாவை விட்டு விலகி சன்னியாசியான நடிகை

27 வருடங்களாக இருந்த சினிமாவை விட்டு விலகி சன்னியாசியான நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

49 வயதானவர் நடிகை நுபுர் அலங்கர். இவர் கடந்த 27 வருடங்களாக ஹிந்தி சினிமாவில் நடித்த வருகிறார். எனவே பாலிவுட் சினிமாவில் இவர் பிரபலம்.

ராஜா ஜி, சாவரியா, சோனாலி கேபிள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சக்திமான் உள்ளிட்ட பல டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவருடைய கணவர் ஸ்ரீவத்சவாவும் நடிகர் தான்.

இந்த நிலையில் சினிமாவில் இருந்து விலகி, சந்நியாசி ஆகி இருப்பதாகத் தெரிவித்துள்ளார் இந்த நடிகை.

“எனக்கு ஆன்மீக நாட்டம் எப்போதும் இருந்து வந்தது. இப்போதுதான் முழுமையாக அர்ப்பணித்துள்ளேன்.

தேவையானவர்களுக்கு உதவுகிறேன். நடித்துக் கொண்டிருந்தபோது, புகழ், வெற்றி பற்றி எல்லாம் கவலைப்பட்டேன். இன்று அந்த பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறேன்.

இது என் விருப்பம் இதுதான். இனி என் வாழ்க்கையில் சினிமாவில் இருக்காது” என தெரிவித்துள்ளார்.

Nupur Alankar lefts Cinema industry and she took sanyas

‘தர்பார்’ படத்தில் ரஜினி மகளின் நிறைவேறாத ஆசை.; நிஜத்தில் அரங்கேற்றிய மகள்கள்

‘தர்பார்’ படத்தில் ரஜினி மகளின் நிறைவேறாத ஆசை.; நிஜத்தில் அரங்கேற்றிய மகள்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில்.. தனக்குத் திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு சென்று விட்டால் தன் தந்தை தனிமையில் இருப்பார். எனவே அவரை கவனித்துக் கொள்ள தன் தந்தைக்குத் துணையாக ஒரு பெண் வேண்டும் என எண்ணி “தந்தைக்கு மணம் முடிக்க பெண் தேடுவார்.

அப்போதுதான் நயன்தாராவை ரஜினிக்கு மணம் முடிக்க யோகி பாபு உடன் இணைந்து திட்டம் போடுவார்.

ஆனால் அதை நிறைவேற்றுவதற்குள் ஒரு விபத்தில் இறந்துவிடுவார் நிவேதா தாமஸ்.

இது போன்ற ஒரு சம்பவம் தற்போது ஒருவரின் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது.

கணவரை இழந்த தன் தாய்க்கு (59) மறுமணம் செய்து வைத்துள்ளார் கேரளாவை சேர்ந்த 2 மகள்கள்.

கேரளா திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரதிமேனன்(59). இவரது கணவர் கடந்த ஆண்டு உயிர் இழந்தார்.

இவர்களுக்கு ப்ரீத்தி, பிரசீதா என இருமகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

தன் தாய்.. அவரின் கணவரை இழந்து, தனிமையில் தவிப்பதைப் பார்த்து உணர்ந்துள்ளனர்.

நீண்ட போராட்டத்திற்குப்பின் தன் தாய் ரதிமேனனை மறுமணத்திற்கு சம்மதிக்கவும் வைத்துள்ளனர்.

மனைவியை இழந்து வாழ்ந்து வரும் 63 வயதான திவாகரன் என்பவரை பார்த்து தங்கள் தாயை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவரும் சம்மதிக்கவே இவர்களின் திருமணத்தை இரண்டு மகள்களும் நடத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பே கடந்த 2019ல் விவாகரத்து ஆன தன் தாய்க்கு மறுமணம் செய்து வைத்தார் 23 வயதான கோகுல் ஸ்ரீதர் என்ற ஒரு மகன்.

Darbar movie scene happened in real life at Kerala

செவி கொடுத்து கேளுங்கள் : காதுகளை கவனிக்கவும்.; அஜித் சொல்ல என்ன காரணம்.?

செவி கொடுத்து கேளுங்கள் : காதுகளை கவனிக்கவும்.; அஜித் சொல்ல என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித். நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித் கூறிய அட்வைஸ் ஒன்று இன்று வைரலாகி வருகிறது.

அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா அஜித் கூறியதாக ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில்…, ‛‛உங்களை காதுகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

காதுகளில் அடிக்கடி சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தால் அது காது கேட்கும் திறனை இழக்கும்.

காதில் ஒலிக்கும் ஒரு வித ஒலி பெரும்பாலும் காது கேளாமையுடன் தொடர்புடையது.

அதீத சத்தம் கேட்பது.. தலையில் காயங்கள் ஏற்படுவது.. காதில் அழுக்கு இருப்பது, மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவை. என சில காரணங்களை குறிப்பிட்டு, ‘உங்கள் காதுகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் – நிபந்தனையற்ற அன்புடன் அஜித்’ என பதிவிட்டுள்ளார்.

அஜித்தின் இந்த சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith Kumar Advises Fans to Take Care of Ears

சூர்யா 42 படத்தை தயாரிக்கும் 2 பிரபல நிறுவனங்கள்.; டைரக்டர் – மியூசிக் – ஹீரோயின் அப்டேட்ஸ்

சூர்யா 42 படத்தை தயாரிக்கும் 2 பிரபல நிறுவனங்கள்.; டைரக்டர் – மியூசிக் – ஹீரோயின் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் சூரியா 42 படத்தின் படப்பிடிப்பு பூஜை உடன் ஆரம்பமாக உள்ளது.

இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யகிறார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக தயாரிக்க உள்ளனர்.

இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இவர் இதற்கு முன்பே சூர்யாவின் ஆறு சிங்கம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் நாயகியாக திஷா பாண்டே பணிபுரிவார் என கூறப்படுகிறது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளதாகவும் அதன் பின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கோவாவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கதையை அதிநாராயணன் எழுத வசனங்களை மதன் காக்கி எழுதுகிறார் கலைப் பணிகளை மிலன் கவனிக்க சண்டை பயிற்சியை சுப்ரீம் சுந்தர் கவனிக்கிறார்.

Suriya 42 Shoot Starts Next Week

More Articles
Follows