‘தி பேமிலி மேன் 3’ பாகத்தின் கதை இதுதானா.? இந்தியாவை குறி வைக்கும் சீனா

‘தி பேமிலி மேன் 3’ பாகத்தின் கதை இதுதானா.? இந்தியாவை குறி வைக்கும் சீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

family man 3தி பேமிலி மேன் வெப் சீரிஸின் கதை நம்மில் பலர் அறிந்த ஒன்றுதான்.

இந்தியாவின் ரா அமைப்பில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் திவாரி சர்வதேச சதி திட்டங்களை எப்படி முறியடித்தார் என்பது கதைக்களம்.

சிறப்பு அதிகாரியாக மனோஜ் பாஜ்பாய் நடிக்க அவரது மனைவியாக பிரியாமணி நடித்து இருந்தார்.

தற்போது இதன் 2வது சீசன் பலத்த எதிர்ப்புக்கு இடையே வெளியாகியுள்ளது. 2வது சீசனில் சமந்தா இலங்கை தமிழ் பெண்ணாக நடிக்க இதனை ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளனர்.

இதில் ஈழத் தமிழர்களுக்கும் எதிரான காட்சிகள் இருப்பதாக கூறி சர்ச்சைகள் கிளம்பி இருந்தன என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

3வது பாகத்தில் என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை இரண்டாவது சீசன் இறுதியில் காட்டி இருந்தனர்.

அதில்…. ‘தி பேமிலி மேன்’ 3வது சீசனில் கொரோனா பாதிப்பு காட்சிகளை காட்டுகிறார்கள்.

அதன்பிறகு ஒரு சீனாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கையில் லேப் டாப்புடன் பணி புரிகிறார்.

தனது லேப் டாப்பை திறந்து ஒருவருடன் உரையாடுகிறார்.

“நான் நாகாலாந்தையும், அருணாச்சல பிரதேசத்தையும் கவர் செய்து விட்டேன் உங்கள் அனுமதிக்காக காத்திருக்கிறேன் என மெசேஜ் அனுப்புகிறான்.

உடனே அனுமதி கிடைத்த உடன் தொடர் முடிகிறது.

இந்தியா மீது கொரோனா வைரசை பரப்ப திட்டமிடுகிறது சீனா என்பதை காட்டியிருக்கிறார்கள்.

The family man 3 story is leaked ?

மச்சானை இழந்த சில தினங்களில் அப்பாவையும் இழந்த நகைச்சுவை நடிகர்

மச்சானை இழந்த சில தினங்களில் அப்பாவையும் இழந்த நகைச்சுவை நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர்.

பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகரான பால சரவணன் தன் தந்தை ரங்கநாதன் கொரோனா தொற்றால் இழந்துள்ளார்.

இவரது தந்தை கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அண்மையில் தான் தன் தங்கையின் கணவரையும் (32 வயது) கொரோனா தொற்றுக்கு பறி கொடுத்தார் நடிகர் பாலசரவணன்.

அப்போதே கொரோனாவை அலட்சியமாக கருத வேண்டாம் என நடிகர் பாலசரவணன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil comedy actor dies due to corona

balasaravanan father

‘சிங்காரச் சென்னை 2.0’.. முதல்வர் ஸ்டாலின் போடும் அடுத்த ஸ்கெட்ச்

‘சிங்காரச் சென்னை 2.0’.. முதல்வர் ஸ்டாலின் போடும் அடுத்த ஸ்கெட்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singara chennai stalin‘சிங்காரச் சென்னை’ என்ற பெயர் வரக் காரணமாக இருந்தவர்கள் கருணாநிதியும் ஸ்டாலினும் தான்.

27 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மேயராக முக ஸ்டாலின் பதவி வகித்த காலக்கட்டம் அது.

அப்போது ​ ‘சிங்காரச் சென்னை’ என்ற அழகான திட்டத்தைத் தொடங்கினார்.

அதன் பிறகு, தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதாவின் அதிமுக அரசு அந்த திட்டத்தைக் கண்டுக் கொள்ளவே இல்லை.

இந்த நிலையில் தற்போது முக ஸ்டாலினே தமிழக முதல்வராக உள்ளார்.

எனவே தன் கனவுத் திட்டமான சிங்காரச் சென்னை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தலைமையில், சிங்கரா சென்னை 2.0 திட்டப் பணி ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருக்கிறார் முதல்வர்.

அதன்படி சென்னையை அழகுபடுத்தல், பாரம்பரியத்தை பேணுதல், கலாச்சாரம் மற்றும் கலைகளை மேம்படுத்துதல் மற்றும் கல்வி, சுகாதாரம் ஆரோக்கியம், போக்குவரத்து மற்றும் இயக்கம், நகர்ப்புற இடங்களை மறுபரிசீலனை செய்தல் என முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசித்துள்ளனர்.

இந்த நகரத்தை அழகுபடுத்தலில் ‘Project Blue’ முக்கியமானதாய் பார்க்கப்படுகிறது.

மேலும் சென்னையில் உள்ள மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் ரவுண்டானாக்கள், அண்ணா டவர் பூங்காவை மறுவடிவமைப்பு போன்ற பாரம்பரிய அடையாளங்கள் புதுப்பிக்கப்பட உள்ளது.

பூங்கா, அறிவியல் பூங்கா மற்றும் பல விளையாட்டு வளாகங்களும் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Corporation to launch Singara Chennai 2.0

Mr. இந்தியா பட்டம் வென்ற தமிழர்..; கோலிவுட்டில் அறிமுகமாகும் கோபிநாத் ரவி

Mr. இந்தியா பட்டம் வென்ற தமிழர்..; கோலிவுட்டில் அறிமுகமாகும் கோபிநாத் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gopinath Raviசென்னையை சேர்ந்த கோபிநாத்ரவி என்ற இளைஞர், மிஸ்டர்.இந்தியா பட்டத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தேசிய அளவிலான மிஸ்டர். இந்தியா பட்டத்திற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 34 இளைஞர்கள் கலந்துக் கொண்டார்கள்.

இந்த போட்டி கோபிநாத்ரவி மிஸ்டர்.இந்தியா பட்டத்தை வென்றதோடு, ‘பீப்ள்ஸ் சாய்ஸ்’, அதாவது மக்களின் தேர்வு என்ற மாபெரும் விருதையும் வென்றார்.

இதுவரை தென்னிந்தியாவில் யாரும் வென்றிடாத இந்த படத்தை வென்ற கோபிநாத்ரவி திற்கு தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது.

குறிப்பாக அவர் தமிழர் என்பதால், அவருக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். இதனால், அவருடைய சோசியல் மீடியா பக்கங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இப்படி சோசியல் மீடியாவில் பிரபலமாகியுள்ள மிஸ்டர்.இந்தியா கோபிநாத்ரவி வை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் நம்மிடம் அவருடைய மாடலிங் துறை மற்றும் மிஸ்டர் இந்தியா போட்டியின் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார்.

கல்லூரி காலத்திலேயே எனக்கு மாடலிங் துறை மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இருப்பினும், படிப்பிலும் கவனம் செலுத்திக் கொண்டு மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்தேன்.

அதனால், அது தொடர்பான விஷயங்களை அறிந்துக் கொள்வதோடு, அதற்காக என்னை தயாரிப்படுத்தியும் வந்தேன். அப்போதே, மிஸ்டர்.சவுத், மிஸ்டர்.இந்துஸ்தான் போன்ற சில போட்டிகளில் கலந்துக் கொண்டு பட்டம் வென்றதோடு, பேஷன் ஷோக்களில் ரேம்ப் வாக் உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வந்தேன்.

பிறகு தான் மிஸ்டர்.இந்தியா போட்டி பற்றி அறிந்து அதில் கலந்துக் கொள்வதற்காக என்னை தயாரிப்படுத்தி வந்தேன்.

கோவாவில் நடைபெற்ற போட்டியில் கலந்துக் கொண்ட பிறகு தான் தெரிந்தது, இந்த பட்டத்தை இதுவரை தென்னிந்தியாவில் இருந்து யாரும் வென்றதில்லை என்று. அதனால், எப்படியாவது பட்டத்தை வெல்ல வேண்டும் என்று கடுமையாக உழைத்தேன், இறுதியில் அதற்கான பலன் கிடைத்ததோடு, மக்களின் அங்கீகாரமும் கிடைத்துவிட்டது, என்று மகிழ்ச்சியோடு கூறியவரிடம், அடுத்த திட்டம் என்ன? என்று கேட்டதற்கு,

அடுத்ததாக சர்வதேச அளவிலான பட்டத்தை வெல்ல வேண்டும். அதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

அமெரிக்காவில் உள்ள பிளோரிடாவில் ‘மாஸ்டர்ஸ் ஆஃப் மிஸ்டர்ஸ்’ என்ற தலைப்பில் நடைபெறும் அப்போட்டியில் கலந்துக் கொண்டு பட்டம் வெல்ல வேண்டும், என்பது எனது அடுத்த லட்சியம், என்றார்.

மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் வருமே, உங்களுக்கு எப்படி? என்று கேட்டதற்கு, நிஜம் தான், நான் மாடலிங் துறையில் இருக்கும் போது எனக்கும் சினிமா வாய்ப்புகள் வந்தது.

அதன்படி, பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கும் ‘பகிரா’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. சிறிய வேடமாக இருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால் நடித்தேன்.

அப்படத்தை தொடர்ந்து மேலும், மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது, அதற்கான பேச்சு வார்த்தை போய்க் கொண்டிருக்கிறது, என்றார்.

உங்களுக்கு சோசியல் மீடியாவில் அதிகமான ரசிகர்கள் இருப்பதோடு, அவர்கள் உங்களை பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு சொல்கிறார்களே, அதுபற்றி..

ஆமாம், என் ரசிகர்கள் அவ்வபோது என்னை பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க சொல்கிறார்கள். அவர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தியை சொல்ல போகிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட மிகப்பெரிய அளவில் முன்னணி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்க இருக்கிறது.

அதில், நான் போட்டியாளராக பங்கேற்க இருக்கிறேன். இதுவரை எந்த ஒரு தமிழ் தொலைக்காட்சியும் ஒளிபரப்பாத நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சி இருப்பதோடு, அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத இடங்களில் நடக்க இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சி என் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, தொலைக்காட்சி உலகிற்கே மிகப்பெரிய் ஆச்சரியத்தை அளிக்கும், என்று உற்சாகத்தோடு தெரிவித்தார்.

மாடலிங் துறையில் சாதித்துக் காட்டிய கோபிநாத்ரவி , சினிமாத்துறையில் நடிகனாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவுக்காக நடிப்பு பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொண்டு தன்னை தயாரிப்படுத்தி வருகிறார்.

தற்போது சில திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோவாக நடிப்பதற்கான பேச்சு வார்த்தையை தொடங்கியிருப்பவர், விரைவில் அவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.

Mr India title winner turns hero

மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல்… சிக்கலில் சிவகார்த்திகேயன்.!

மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல்… சிக்கலில் சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

எனவே கோலிவுட் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது பல படங்களின் ஓடிடி ரிலீஸ் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி நடித்துள்ள ‘நரகாசூரன்’, மணிகண்டன் இயக்கி விஜய்சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி’, நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’, ஹன்சிகா நடித்துள்ள ‘மஹா’, பாரதிராஜா நடித்துள்ள ‘ராக்கி’, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் பிரபு இயக்கியுள்ள ‘வாழ்’ ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தான் தயாரித்து நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தை ஓடிடியில் வெளியிட சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்டினாலும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஏற்கெனவே சன் டிவி நிறுவனத்திற்கு விற்று விட்டார்.

இதனால் ‘டாக்டர்’ படத்தை பெரிய தொகைக்கு வாங்க ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றனவாம்.

தியேட்டர்கள் திறக்க 3 மாதங்கள் கூட ஆகலாம். அதுவரை என்ன செய்வது? என தெரியாமல் கதாநாயகன் கலங்கி நிற்கிறாராம்.

Actor Sivakarthikeyan in trouble ?

விஜய்யின் சூப்பர் ஹிட் பட ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்

விஜய்யின் சூப்பர் ஹிட் பட ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

salman khanஒரு பக்கம் ஹிந்தி மலையாளம் தெலுங்கு படங்கள் தமிழில் ரீமேக்காகி வருகின்றன.

அதே சமயம் தென்னிந்திய படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்யவும் பலத்த போட்டிகள் அவ்வப்போது ஏற்படும்.

அதுவும் தமிழில் ஹிட்டான படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருபவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான்.

இத்துடன் இவர் தமிழ் இயக்குனர் பிரபு தேவா இயக்கத்தில் நடிக்க அதிக ஆர்வமாக இருப்பார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் & விஜய்சேதுபதி நடித்து வெளியான ‘மாஸ்டர்’ பட ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் சல்மான்.

இந்த படத்தை ஏற்கெனவே தெலுங்கு, ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.

இருந்தபோதிலும் தற்போது ‘மாஸ்டர்’ பட ஹிந்தி ரீமேக் உருவாகவுள்ளதாம்.

விஜய் கேரக்டரில் சல்மான் கானை நடிக்க அணுகியுள்ளனர் எனவும் விஜய் சேதுபதி கேரக்டரில் மற்றொரு முன்னணி பாலிவுட் ஹீரோவை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடக்கிறதாம்.

Salman Khan to star in the Hindi remake of Vijay’s Master

More Articles
Follows